Wednesday, November 26, 2014

சித்தன் ரகசியம் (3)


ஒருவரிடம் சித்தம் விழித்துக் கொள்ள ஏராளமான தாக்கங்கள் தேவைப்படுகின்றன. எவ்வளவு தாக்கங்கள் ஏற்பட்ட போதிலும் நம்மில் பலர் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வியை கேட்டுக் கொள்வதேயில்லை.
பசிக்கிறது சாப்பிடுகிறோம், திரும்பவும் பசிக்கிறது – திரும்பவும் சாப்பிடுகிறோம். தொடர்ந்து விடாமல் பசிக்கிறது. பசிக்கும் போதெல்லாம் நாமெல்லோருமே சாப்பிடத்தான் செய்கிறோம் – சொல்லப்போனால் சாப்பிடத்தான் வாழ்க்கை என்றும் கருதுகின்றோம்.
ஏன் பசிக்கிறது? இந்த பசியை வெல்ல முடியாதா? அதற்கு என்ன வழி என்றெல்லாம் நாம் கேட்டுக் கொள்வதேயில்லை. சித்தம் விழித்துக் கொண்டவர்களுக்கோ இதுதான் பிரதான கேள்வி.
அன்றாடம் உண்ணவும் உறங்கவும் தானா வாழ்க்கை? இல்லை...அளப்பரிய ஆற்றல் கொண்டது மனித மனம். அதனால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
ஆனால், நம் மனதை நாம் அற்ப சோகங்கள், மகிழ்ச்சிகளில் மட்டுமே வைத்திருக்கிறோம். இவைகளுக்கு நடுவே முடிந்த மட்டும் கனவு காண்கிறோம். இவைகளை கடந்து மனதை இயக்க வேண்டும், அதற்கு மனமானது நமக்கு புரியவேண்டும். எனவே, மனம் அடக்கி மனதை புரிந்துகொள்ள முயன்றனர்.
அது பாய்ந்து பாய்ந்து ஓட முற்பட்ட போதெல்லாம், கட்டுப்பாடு என்னும் உறுதியான சங்கிலியால் இழுத்துக் கட்டினர். மனதை அடக்க அடக்க அதன் ஆற்றலும் அதிகரித்தது.
புரியாததெல்லாம் புரிய தொடங்கியது.. என்ன அது?

No comments:

Post a Comment