Wednesday, November 26, 2014

கம்போடியாவில் 500 ஏக்கரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய இந்துக்கோயில்

“மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்” என்ற வாக்கிற்கிணங்க உலகம் முழுவதும் நம்முடைய சமயம், கலை, பண்பாடு பரவியிருந்ததன் வெளிப்பாடே இத் திருக்கோவில்கள்.

கம்போடியாவில் 500 ஏக்கரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய இந்துக்கோயிலானது, உலகிலுள்ள எல்லா அதிசயங்களையும் வெல்லவல்ல தமிழர் அதிசயமாக காட்சிதருகின்றது. கம்போடியா நகரில் 1200க்கு மேற்பட்ட கோவில்கள் இந்து சமயக் கலாசாரத்தின் வெளிப்பாடாக ஓங்கி நிற்கின்றன. கலை, கலாச்சாரம், வியக்கத்தகு தொழில் நுட்பம், தொன்மை, பிரமிக்கத்தக்க அமைப்பு இவையாவும் பார்ப்போர் மனதில் ஓர் உலக அதிசயமாக காட்சி தருகின்றது.
அங்கூர், என்பது கம்போடியாவிலுள்ள ஒரு இந்துக் கோயில் தொகுதிக்கு உரிய இடமாலும். இது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் கட்டப்பட்டது. வாட் என்பது கோயில் என்பதைக் குறிக்கும் கெமர் மொழிச் சொல். ஐந்நூறு ஏக்கர் சுற்றளவு நிலப்பரப்பில் 3 ஆயிரம் கோடி தொன் கருங்கல்லால், 10 இலட்சம் பணியாளர்களால் 40 ஆண்டுகளில் கட்டப்பட்ட திருக்கோவில் உலகின் மிகப் பெரிய கோவிலாக விளங்குகிறது. (இவ் ஆலையம் இரண்டாம் ஜெயவர்மன் (790 – 835) முதல் ஜெயவர்மன் பரமேஸ்வரா (1327) வரை உள்ள பல மன்னர்களால் கட்டப்பட்டவை என கூறுவாருமுளர்.)
சூரியவர்மனின் ஆட்சி, சோழ அரசர்களிடம் நல்லுறவுடன் இருந்ததால். மலாயாவின் முன்னேற்றம் அதி விரைவாக வளர்ந்தது. வியாபாரம், அரசியல், மதம் என அனைத்தும் மேலோங்க ஆரம்பித்தது. அக்காலத்தில் பெரிய கோவில்களை கட்டும் அரசனே தன் நாட்டில் செல்வச் செருக்குடன், விளக்குகிறான் என்ற நம்பிக்கை இருந்தது. சோழ அரசின் கீழ் இருந்த சூரிய வர்மனும் செல்வச்செருக்குடன் ஆட்சிபுரிந்தான் என்பதயே இவ் ஆலயங்கள் நினைவுபடுத்துகின்றன.
ஒரு அகழியும், மூன்று மண்டபங்களும் மத்தியிலுள்ள ஐந்து கோயில்களைச் சூழவுள்ளன. மேற்கிலிருந்து வரும்போது அகழியின் மேல் அமைந்துள்ள நீண்ட பாலத்தினூடாக முதலாவது வெளி மண்டபத்தை அணுகலாம். முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம் (ceiling) தாமரைவடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது. மூடிய சுவர் நடன உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இச் சுவரின் வெளிப்புறம் தூண்களோடுகூடிய பலகணிகள், அப்சரஸ்கள் மற்றும் விலங்குகளின் மீதமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

எல்லா மண்டபங்களினதும் சுவர்களில் அப்சரஸ் உருவங்கள் காணப்படுகின்றன. முதல் மண்டபத்திலிருந்து நீண்ட வழிமூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும். இது இரண்டு பக்கங்களிலும் சிங்கச்சிலைகள் அமைந்த படிக்கட்டைக் கொண்ட மேடையிலிருந்து அணுகப்படுகிறது.

இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன. மூன்றாவது மண்டபம், உயர்ந்த terrace இன் மீது அமைந்து ஒன்றுடனொன்று மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோயில்களைச் சூழ அமைந்துள்ளது. மண்டபங்களின் கூரைகள், பாம்புகளின் உடல்களையும், சிங்கம், கருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இவ் ஆலயத்தை வேறு விதமாக தரிசிக்கும்போது, திருக்கோவிலைச் சுற்றியுள்ள அகழி அடுத்து பிரகார மண்டபம். அதனுள் திருக்குளம். 60 படிகள் மேல் ஏறினால் அட்டதிக்கிலும், திக்குபாலகர்கள். மேலே 60 படிகள் ஏறினால் நான்கு மூலையிலும் சிவலிங்கங்கள், மையத்தில் அற்புதமான சிவலிங்கம், அது தற்போது நூதனசாலையில் உள்ளது. 60 அடி விமானம், 500 ஏக்கரில் திருக்கோவில் அமைக்க எத்தனை ஆழம், அகலம் கொண்டு அஸ்திவாரம் செய்திருப்பார்கள்.
மன்னனின் மனம் போல உயர்ந்து நின்ற திருக்கோவில் 200 ஆண்டுகளாக வழிபாடின்றி இருக்கிறது. தற்பொழுது ஜப்பான், ஜெர்மன்காரர்கள் திருப்பணி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். கர்ப்பகிரஹத்தில் இருக்க வேண்டிய மூர்த்தங்கள் காட்சியகத்தில் இருக்கின்றன.

கம்போடியா:

கம்போடிய முடியரசு முற்காலத்தில் கம்பூச்சியா என அறியப்பட்ட ஒரு தெகிழக்கு ஆசிய நாடாகும். இந்நாட்டில் ஏறக்குறைய 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இந்நாட்டின் தலைநகர் “புலோம் பென்” நகரம். இதுவே இந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாட்டுக் குடிமக்களை "கம்போடியர்" எனவும், கிமர் எனவும் அழைக்கின்றனர். எனினும், “கிமர்” என்னும் குறியீடு கிமர் இன கம்போடியர்களை மட்டுமே அழைக்க பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையான கம்போடியர் தேரவாத பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.

கம்போடியாவின் எல்லைகளாக, மேற்கிலும், வடமேற்கிலும் தாய்லாந்து நாடும், வடகிழக்கில் லாவோஸ் நாடும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் வியட்நாம் நாடும், தெற்கில் தாய்லாந்து வளைகுடாவும் அமைந்துள்ளன. கம்போடியாவின் முக்கிய புவியியல் கூறுகளாக திகழ்வன இந்நாட்டில் பாயும் மீக்கோங் ஆறும், “தொன்லே சாப்” ஏரியும் ஆகும். கம்போடியர்களின் முக்கிய தொழில்களாவன: நெசவு, கட்டுமானம், சுற்றுலா சார்ந்த சேவை. கடந்த 2007ம் ஆண்டு மட்டும் ஏறக்குறைய 4 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அங்கூர் வாட் கோவில் பகுதிக்கு வருகை தந்தருகின்றனர்.

தேசியக் கொடியில் இந்துக் கோயிலின் விம்பத்தைப் பொறித்துள்ள ஒரேயொரு நாடு என்ற சிறப்பு கம்போடியாவுக்கு உண்டு. பழைய தமிழ் இலக்கியங்களில் கம்புஜம் அல்லது காம்புசம் என்று அழைக்கப்படும் இந்த நாடு காலத்திற்க்கு காலம் பல பெயர்களைத் தாங்கி நிற்கின்றது.

மார்ச்சு 1970ல் அதிரடிப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய அமெரிக்க ஆதரவாளன் ஜெனரல் லொன் நொல் இந்த நாட்டிற்கு வைத்த பெயர் கிமர். ( KHMER ) அதன் பிறகு ஏப்பிறில் 1975க்கும் ஜனவரி 1979க்கும் இடையில் கம்போடியாவை ஆட்சி செய்த பொல் பொட் சூட்டிய பெயர் கம்புச்சியர்.

வியற்நாமியப் படையெடுப்பு மூலம் முடிவுக்கு வந்த பொல் பொட் ஆட்சிக்கு பிறகு இந்த நாடு பெற்ற பெயர் கம்போடியா இந்தப் பெயர் இன்று வரை நிலைத்து நிற்கின்றது.

மாக்சிசத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட காரணத்தால் பொல் பொட் செய்த இன அழிப்பில் 10 மில்லியன் மக்கள் கொன்றொழிக்கப் பட்டனர். அதாவது ஜந்தில் ஒரு பங்கினரை அந்த நாடு இழந்து விட்டது.

பொல் பொட் ஆட்சியில் பணப் புழக்கம் முற்றாக நிறுத்தப்பட்டது. மக்கள் அனைவரும் விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டனர் உலகத் தொடர்புகளில் இருந்து அரசு விலகிக் கொண்டது. தபால் சேவைகள் நிறுத்தப்பட்டன. இராசதந்திரப் பரிமாற்றங்கள் அனைத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. அதாவது வெளி உலகத் தொடர்புகளுக்கு முற்றுப்புள்ளி இடப்பட்டது.

கம்போடியா இன்று புத்துயிர் பெற்று வருகிறது. ஜநாவின் தலையீட்டில் தேர்தல்கள் நடத்தப்பட்டன.பொல் பொட் ஆட்சியில் அதிகார நிலையில் இருந்த கூன் சென் (HUN SEN ) என்பவர் பிரதமராகி விட்டார். இன அழிப்புக் குற்றத்திற்கான விசாரணைகள் தொடங்கப்பட்டுச் சிலர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

படிப்படியாகக் கம்போடியப் பொருளாதாரம் வலுப்பெற்று வருகிறது. சுற்றுப் பயணிகளின் வருகை மூலம் கம்போடியா பெரும் வருவாயை ஈட்டுகிறது.

கம்போடியாவின் அங்கூர் வாத் திருக்கோயிலைப் பார்ப்பதற்கு அமெரிக்க, ஜரோப்பிய சீன, ஜப்பானிய, வியற்நாமிய மற்றும் கோறியப் பயணிகள் வருகின்றனர்.

900 வருடம் பழமை வாய்ந்த இந்த ஆதிகாலச் சிவன் கோயில் நாட்டிற்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கிறது. வருடமொன்றுக்குச் சராசரி ஒரு மில்லியன் பயணிகள் அதைப் பார்வையிட வருவதாக சுற்றுலாத் துறை தெரிவிக்கிறது. அடுத்து வரும் வருடங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

நெடுங்காலமாக காட்டு மரங்களால் மூடப்பட்டு வெளி உலகிற்குத் தெரியாமல் கிடந்த அங்கூர் வாத் (வாத் என்றால் தாய் மற்றும் கம்போடிய மொழிகளில் கோயில் என்று பொருள்) கம்போடியா பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியில் இருந்த போது ஒரு பிரெஞ்சு ஆய்வாளனால் கண்டுபிடிக்கப்பட்டது.

கோயிலின் உட்புறத்திலும் அதைச் சுற்றியும் நெருக்கமாக வளர்ந்த மரங்களை வெட்டி அப்புறப் படுத்திக் கோயிலின் தோற்றத்தைக் வெளிப்படுத்த பல வருடங்கள் பிடித்தள்ளன.

இந்திய கலாசாரம் தென் கிழக்கு ஆசியா முழுவதும் பரவியிருந்ததற்கான சான்றாக இந்த கோயில் இடம் பெறுகிறது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பிரம்பென்னன் என்ற பெயரில் இன்னொரு சிவாலயம் இருக்கிறது. இந்துக்கள் நூறு வீதமாக வாழும் தீவாகப் இந்தோனேசியாவின் பாலித் தீவு இடம் பெறுகிறது. அதன் பக்கத்தில் மதுரா என்ற தீவும் இருக்கிறது இதில் கணிசமானளவு இந்துக்கள் வாழ்கிறார்கள்.

அங்கூர் வாத் சியம் றியப் என்ற நகரில் அமைந்துள்ளன. இங்கு வரும் பயணிகளின் வசதிக்காக பல நட்சித்திர விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 10.000 அறைகள் எல்லா விடுதிகளையும் கூட்டிப் பார்த்தால் இருக்குமென்று நம்பப்படுகிறது.

உலக அதிசயங்களில் ஒன்றான அங்கூர் வாத் கோயிலின் காரணமாக சியம் றியப் நகருக்கு நேரடி விமான சேவை வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிலிருந்து இலன்டனுக்கு நடக்கும் விமானப் பறப்பை கங்காரு சேவை என்று அழைப்பார்கள். கம்போடியா இந்தப் பாதையில் இல்லாவிட்டாலும் சுற்றுப் பயணிகளின் தேவைக்காகப் பறப்புக்கள் திருப்பி விடப்படுகின்றன.

வங்கிச் சேவைகள், பயணிகளுக்கான விடுதிகள், உள்ளுர் போக்கு வரத்து வசதிகள், சூதாட்ட மையங்கள், கடற்கரையோரத் தங்குமிடங்கள் என்பன கம்போடியாவில் நடக்கும் மாற்றங்களுக்குக் கட்டியம் கூறுகின்றன. இன்னொரு உலக அதிசயமான தொன்லே சாப் ஏரி அங்கூர் வாத் கோயிலுக்கு அண்மையில் இருக்கிறது.

இமய மலைப் பகுதியில் தொடங்கி வியற்நாம் நாட்டிற்கு உடாக தென் சீனகக்கடலில் பாயும் பெரு நதியின் நீர் தொன்லே சாப் ஏரியில் வீழ்கின்றது. பெரு நதியில் நீர் குறையும் போது ஏரியில் நீர் மட்டம் உயரும். பெரு நதியில் நீர் மட்டம் உயரும் போது ஏரி நீர் மட்டம் சம நிலைக்கு வந்து விடும்.

ஏரி என்பதை விட பெருங்கடல் என்பது மிகப் பொருத்தம். நெல் விளைச்சலை அடிப்படையாகக் கொண்ட விவசாய நாகரிகம் தொன்லே சாப் எரியைச் சுற்றி இருந்தற்கான சான்றுகள் தென்படுகின்றன. அங்கூர் வாத் கோயில் இதற்கு அண்மையில் கட்டப்படுவதற்குக் காரணம் இருக்கிறது.

தொன்லே சாப் எரியின் மீன் வளத்தை நம்பிப் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அதைச் சுற்றி வாழ்கின்றனர். ஏரியைச் சுற்றி வளரும் மரங்களில் பெரும் எண்ணிக்கையில் பறவைக் கூட்டங்கள் வாழ்கின்றன. அவற்றிற்கான உணவை இந்த ஏரி வழங்குகிறது.

அங்கூர் வாத் கோயிலின் புனருத்தாரணப் பணிகளில் இந்தியர்கள்,பிரெஞ்சுக்காரர்கள், ஜப்பானியர்கள் வேறு சில ஜரோப்பிய நாட்டவர்கள் இடைவிடாது ஈடுபடுகின்றனர். அழிவின் விழிம்பிற்குச் சென்று திரும்பிய கம்போடியா அழிவைச் சந்தித்த பிற நாடுகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கிறது.

No comments:

Post a Comment