Monday, September 12, 2011

இளையராஜா - ஒரு தொடர் பார்வை

இளையராஜா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு புகழ் . பத்மபூஷன விருது கிடைக்கப்பெற்றது .  ஒஸ்கார் விருது ரகுமானுக்கு கிடைக்கப்பெற்றதும் தெரிந்ததே . இருவரும் தமிழ் சினிமா இசையின் ராஜாக்கள் . நவீன இளையராஜா தான் ரகுமான் எனலாம் . இந்திய  ஜனாதிபதி பிரதீபா பட்டேல் கையால் கிடைக்கப்பெற்றது .




இளையராஜா மீதான பார்வையை தொடர்ந்து பார்க்கலாம் என இடும் பதிவு . இளையராஜா பற்றிய 5 ஆவது பதிவு .முன்னைய பதிவுகளை  வாசிக்க :-
Click here

வழமையை போலவே இளையராஜாவின் சிறப்பான பாடல்களை ரசனைகளுடன் தகவல்களுடன்  பகிரலாம் என நினைக்கிறேன் .


இளையராஜா மேலைத்தேய  இசையை கலந்து  கொடுத்ததால் அவருடைய மெலடியில் ரசனையோ இனிமையோ குன்றவில்லை . அவ்வாறான ஒரு பாடல் தான் இது . "ரோஜாவை தாலாட்டும் தென்றல்" அருமையான மெலடி. மிக மிக பிடித்த பாடலும் கூட .


Click here to listen 


பந்துவராளி ராகத்தில் அமைந்த பாடல்( waltz பீட்) . நினைவெல்லாம்  நித்தியா படப்பாடல் . வயலின் இசையால் பின்னணியில் அமைந்திருக்கும் . பாலசுப்ரமணித்தையும் ஜானகியையும் அருமையாக பாவித்திருப்பார்  இளையராஜா .


"இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை!
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை!" 



தொடக்கம் முதல் இறுதி வரை உணர்வால் தொடும் பாடல் 


இந்த வரிகள் பாடிய விதமும் வைரமுத்துவின்  வைர வரிகளும் அருமையிலும் அருமை . பின்னணியில்  தனியான ஹம்மிங் சேர்த்திருப்பார் . இளையராஜாக்கு முக்கிய மயில் கல்லாக அமைந்த பாடல் .




=====================================================================
முன்னர் இளையராஜாவால் ஓடிய படங்கள் எத்தனையோ . இளையராஜாவை தமது படத்தில் சென்டிமெண்டாக முதல் பாடல் பாட வைத்தவர்கள் பலர் . இளையராஜா  முதல் பாடல் பாடினால் படம் ஹிட் .


மற்றுமொரு அருமையானா வயலின் கையாளல் கமலின் ராஜபார்வை படத்தில் பின்னணி இசையில் பண்ணியிருப்பார் இளையராஜா .  வயலினுடன் பல இசைக்கருவிகளையும் துணைக்கு அழைத்திருப்பார் . புல்லாங்குழல் , தபேல இசைகள் வயலினுடன் இணையும் இடங்கள் அருமை . 


Click here to listen

இளயராஜாவின் சில பாடல்கள் சோலோவாகா இசை இல்லாமலும் பாடினால் இனிமையாக இருக்கும் . "இளமை எனும் பூங்காற்றை" குறிப்பிடலாம் . இந்த பாட்டில் வரிகள் கண்ணதாசனின் வரிகள் . ஆனால் கூடுதலாக கண்ணதாசன் இளையராஜாவுக்கு எழுதவில்லை . ஆனால் எழுதிய அனைத்தும் ஹிட் .




இளையராஜா எந்த வெளி நாட்டு நிகழ்ச்சிக்கு சென்றாலும் பாடும் பாட்டு " சொர்க்கமே என்றாலும் அது நம் நாட்டை போல வருமா " . இந்த பாட்டை கேட்டாலே தாய் மண்ணின் பெருமை விளங்கும் . வரிகளுக்காக கேக்கலாம் .


இளையராஜாவுக்கு வைரமுத்துவின் வைர வரிகள் உதவியாக இருந்தது . வைரமுத்து பாடலை கவிதை என்ற முறையில் இருந்து விலக்கி கொண்டு சென்றார் . அதுவரை இருந்து பாடல்கள் ட்ரெண்டை வைரமுத்து மாற்றினார் . 


========================================================================= 


நினைவுகளையும் எண்ணங்களையும் வருடும் இளையராஜாவின் இன்னொரு பாடல் தான் தென்றலே என்னை தொடு படத்தில் இடம் பெற்ற "தென்றல் வந்து என்னை தொடும் ஆகா சத்தம் இன்றி  முத்தம் இடும் "  பாடல் . இந்த பாடலை கேட்டு விட்டு பாருங்கள் மனதில் ஒரு தாக்கம் இருக்கும் . ஒரு நிறைவை காணலாம் . ஜேசுதாசின் காந்த குரல் , ஜானகியும் குரலுடன் இணைந்த பாடல் . இயற்க்கையுடன் காதலை இணைத்த பாடல் வரிகள் . 


Click here to listen 


2 .40 நிமிடங்களில் புல்லாங்குழல் உடன்    ஹம்மிங் அருமை .   "தூறல் போடும் இந்நேரம் தொழில் சாய்ந்தால் போதும் சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும் ", தெரிந்த பிறகு திரைகள் எதற்க்கு வரிகள் ஜேசுதாசின்  குரலில் கணீரென ஒலிக்கும் .  


இளையராஜா மெலடிக்கு மட்டும் அல்ல , வெறும் வார்த்தைகளை வைத்தேஓரம் போ, ஓரம் போ பாடலை அமைத்திருப்பார் . நகைச்சுவையை அறியாமலேயே மனதில் கொண்டு வரும் இசையை அமைத்திருப்பார் . 


மேலும் பல எளிமையான சந்தோஷமான பாடல்களையும் நகைச்சுவையான பாடல்களும் இளையராஜாவின் வண்ணத்தால் உருவானது . ராப் இசை முறையையும் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது . அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம் . 

தமிழன் - வரலாறு - வரலாற்றை அறியாதவன் இனம் நிச்சயம் அழியும்

ஒரு சமூக போராட்டமோ ஒரு இனத்தின் போராட்டமோ மழுங்கடிக்கப்படுவது அவ்வினத்தினரிடையே காணப்படும் அறியாமையால் . வரலாறு இதற்க்கான விடைகளை படைக்கிறது . தனது  சமூகத்தின்/இனத்தின்  வரலாற்றை அறியாதவன் சமூகம் நிச்சயம் சிதையும் . 

இதில் எந்த போராட்டம் சரி என்பதோ அல்லது எதையுமோ ஆதரித்து எழுதவில்லை . இருந்த வரலாற்றை ஆவணங்களுடன் சமர்ப்பிக்கிறேன் .

வீரம் விளைந்த மண்ணின் மன்னன் பண்டார வன்னியன் பற்றி விரிவாக அறிந்தால் தமிழர் பூமி , அவர்களுக்கு தனியொரு உரிமைகளுடனான இடம் இலங்கையில் இருந்தமைக்கான ஆவணங்கள்  கிடைக்கும் .


மன்னன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் இருந்து வற்றாப்பளை அம்மன் கோவில் வரை உள்ள 2000 சதுர மைல் நிலத்தை ஆட்சி செய்து வந்தான் . தனது சகோதரர்களை முக்கிய பதவிகளில் வைத்து ஆட்சி செய்து வந்தான் . தனது தம்பி கைலாய வன்னியனை அமைச்சராகவும் தனது இறுதி சகோதரன் பெரிய மன்னரை தளபதியாகவும் வைத்திருந்தான். அதே நேரம் காக்கை வன்னியன் எனும் மன்னன் வன்னியின் இன்னொரு நிலப்பரப்பை ஆண்டு வந்தான் .

ஒல்லாந்தர்  எமது நாட்டை கைப்பற்ற வந்த போதே தமிழர் ஆட்சி இங்கு இவ்வாறு நிலவியது என்பதை அவர்களின் சிலர் எழுதிய குறிப்பு  ஏடுகளில் காணலாம் . முக்கியமாக மேலைத்தேயர்கள் இலங்கையை கைப்பற்ற காரணம் கடல் வளங்களும் , வணிகமும் , மண் வளங்களையும் பார்த்து மோகம் கொண்டதே . முக்கியமாக இயற்க்கை வளம் கொண்ட திருகோணமலை துறைமுகம்(ஆசியக்கண்டத்தின் திறவுகோல் ) பிரச்சனைகளின்  அடிப்படை எனலாம் . இவற்றுள் மாதோட்டம் துறைமுகமும் ஒன்று .

புவியியலாளர் தொலமி (உலக  வரைபடத்தை முதன் முதலாக வரைந்தவர் ) இலங்கையில் தமிழர் பூமியை தனியாக காட்டி  தமிழர் என்ற ஒரு இனம் அப்போது அந்த பிரதேசத்தில் இருந்ததாக் குறிப்பிட்டு உள்ளார் . வேறு எந்த இனமுமோ இருந்ததமைக்கான சான்று  இல்லை . 



இது இவ்வாறு இருக்க மற்றைய பேரரசுகள் பல திருகோணமலைக்கு  ஆக  போரிட்டு மடிந்து போயின . கண்டிய மன்னனுக்கும் ஆங்கிலேயருக்கும்  இடையில்  சண்டை நடந்தது . அந்த நேரத்தில் மாபெரும் மன்னனாக இருந்த ஆங்கிலேயன் ராபர்ட் நொக்ஸ் கண்டிய மன்னனால் மூதூரில் (தற்ப்போது ) வைத்து சிறைப்பிடிக்கப்பட்டான் . பல வருடங்கள் சிறையில் கழித்த ராபர்ட் நொக்ஸ் ஒருவாறு சிறையில் இருந்து தப்பி அனுராதபுரப்பக்கமாக ஓடினான் . அனுராதபுரத்தை அடைந்தவுடன்  அங்குள்ள  மக்களையும்   ஆட்ச்சியையும் பார்த்து வியப்படைந்தான் . ஆட்சி  செய்த மன்னன் கைலாய வன்னியன் .  

மாவீரன் குலசேகரம் வைரமுத்து  பண்டார வன்னியனுக்கு நடந்தது என்ன ? 


கண்டிய அரசனுக்கு  கீழ்ப்படியாது  ஆங்கிலேயருக்கு திரை வரி செலுத்தாது ஆட்சி செலுத்தி   வந்தவன் தான் மாவீரன் பண்டாரவன்னியன் . வழமை போல தமிழன் இடம் ஊறியுள்ள துரோகத்தன்மையை காட்டிய வரலாறு . வீரபாண்டிய  கட்டபொம்மன் போல ஒரு வரலாறு இங்கும் உண்டு . 

பண்டாரவன்னியனுக்கு சகோதர்கள் ( கைலாய வன்னியன் , பெரிய மைனர் ) இருக்க சகோதரி நளாயினியும் இருந்தாள். நளாயினி தமது அவை புலவர் மீது காதல் கொண்டிருந்தாள் . மன்னன் காக்கை வன்னியன் ( இன்னொரு நிலப்பகுதி மன்னன் ) நளாயினி மீது காதல் கொண்டு எவளவோ கடிதங்களை பண்டாரவன்னியனுக்கு அனுப்பியிருந்தான் . பண்டாரவன்னியன் அதற்க்கு ஒன்றும் கூறவில்லை . இவ்வாறிருக்க புலவரும் நளாயினியும் காதல் கொண்டுள்ளதை கண்ட காக்கை வன்னியன் புலவருடன் போரிட்டான் . புலவர் மன்னனை வாளால் வென்று திருப்பி அனுப்பினான் . புலவனும் அரச குலத்தில் வந்ததை உணர்ந்த மன்னன் தனது சகோதரி காதலுக்கு சம்மதித்தான் .

இதை  மனதில் இருந்த்திக்கொண்டு இருந்த காக்கை வன்னியன் வெள்ளையர்கள் பண்டாரவன்னியன் மீது படை எடுத்து தோல்வி அடைவதை   உணர்ந்தான் . வெள்ளையர்களுடன்  சேர்ந்து சதி செய்து மன்னனை கொல்ல திட்டமிட்டான் . வழமை போல பாசாங்கு செய்து மன்னனிடம் மன்னிப்பு கேட்டு  தருணம் பார்த்து  ஆங்கிலேய படைகளிடம் சிக்க வைத்தான் 

ஒருவனுக்கு அவனுக்கு பிடித்தவர்கள் உறவினர்கள் யார் வேண்டுமென்றாலும் சிலை வைக்கலாம் ஆனால் எதிரியாலேயே வைக்கப்பட்ட சிலை பண்டாரவன்னியன் சிலை . 

பலமுறை படை எடுத்தும்  வெல்லப்படமுடியாத அவனை நிறைவில் ஆங்கிலேய தளபதி  ஆனையிறவு திருகோணமலை என மும்முனையிலும் இருந்து படை எடுத்து வந்து வென்றனர். இவ்வாறு வெல்லப்பட்ட அவனுக்கு ஆங்கிலேய தளபதியலேயே சிலை வைக்கப்பட்டது . 


1803/10/31 காலப் பகுதியில் அப்போது ஒட்டுசுட்டான் பகுதியாகவிருந்த  தற்போதைய கற்சிலைமடுப்பகுதியில் ஆங்கிலேயப் படைத்தளபதி கப்டன் "றிபேக்"என்பவனால் தோற்கடித்து கொலை செய்யப்பட்டார்.

இப்பொழுதும் கூட பண்டாரவன்னியனுக்காக அவரை கொலை செய்த ஆங்கிலேயராலேயே  வைக்கப்பட்ட நினைவு கல்  உள்ளது . சிலர் தற்ப்போது உடைத்து விட்டனர் . இலங்கை அரசே பண்டாரவன்னியனை தேசிய  வீரனாக அறிவித்துள்ள் நிலையில் சிலர்  செய்துள்ள வேலை ஆத்திரமூட்டுகிறது .


ராபர் நொக்ஸ்  குறிப்பேட்டில் தான் வடக்காக  தப்பிச்சென்ற போது வயல்வெளிகளையும் எருதுகள் உழுவதையும் அங்குள்ள மக்கள் சின்ஹல மொழியை பேசவில்லை என்றும் அவர்களுக்கு சின்ஹல மொழியே தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் . 

மேலும் அங்கு கயிலாய வன்னியன் ஆட்ச்சிசெய்த நாட்டை கயிலாய வன்னியன் நாடு என்றும் அவன் யாழ்ப்பாணத்தின் தெற்க்கு மற்றும் வன்னியின் கிழக்குப்பகுதியையும் ஆண்டு வந்ததாக அவரது  குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் .  
 
இதிலிருந்து காலம் காலமாக தமிழர் வாழ்ந்த பூமி. தமிழர் நாடு எதுவென தெளிவாக காணக்கூடியதாக  உள்ளது . இல்லாத ஒன்றை எவனும் கேட்கப்போவதில்லை .  

ஒரே பார்வை : பேஸ்புக்கும் கோர்க்மார்க்கும் (Twitter))





என்ன தலைப்பு எண்டு யோசிக்கேக்க இப்ப பேஸ்புக் ல என்ன கூடுதலா எல்லாரும் பண்ணுகினமோ அதையே வைப்பம் எண்டு வைச்சது தான்.

கற்காலம், இன்டஸ்டீரியல் காலம் எண்டதெல்லாம் போய் இப்ப பேஸ்புக் காலம் எண்டு சொல்லுற அளவுக்கு வந்து விட்டது . இந்த முன்னேற்றம் ஆரோக்கியமா இல்லையா எண்டதெல்லாம் வேறு விடயம் . கிட்டத்தட்ட முன்னூற்று ஐம்பது மில்லியன் பாவனையாளர்களை கொண்டுள்ளதாம் பேஸ்புக் . இணைய பாவனையாளர்களால் பார்க்கப்படும் இணையத்தள பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பேஸ் புக் கூகிள் ஐயும் முந்தினாலும் ஆச்சரியப்படுவதட்க்கு இல்லை .



சமூகவலைப்பின்னல் அமைப்பான பேஸ்புக் புதிய நண்பர்களையும் மறைமுக எதிரிகளையும் சம்பாதித்து தருகிறது . கூடுதலாக முதல் கணணியை ஆன் செய்தவுடன் நாம் ஜிமெயில் செல்வதோ வேறு இணையத்தளங்கள் செல்வதோ வழக்கம். இப்போது பேஸ்புக் போவது தவிர்க்க முடியாததொன்று.

கூடுதலான நேரம் செலவழிந்தாலும் தனிமையை போக்கும். கூடுதலாக பெண்களுடன் நம்மள மாதிரி ஆக்கள் கதைக்கிறதுக்கு இலகுவாக இருக்கிறது. நேர பார்த்து கதைக்கும் போதே நீங்க பேஸ்புக் இல் இருக்கீங்களா என்று கேட்பது வழமையா போச்சு . கூட கத்தினா ரிமூவ் பண்ணுற வசதியும் இதில தான் இருக்குது .

எல்லோரும் பேஸ்புக் பாவிப்பீர்கள் ஆனால் அதன் பின்னணி சிலருக்கே தெரிந்திருக்கும். சிலர் புதிதாக வந்திருப்பார்கள். ரொம்ப இழுத்தா வரலாறு மாதிரி சுருக்கமா சொல்லுறன்.



Mark Zuckerberg க்கும் அவரது கல்லூரி (ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ) நண்பர்களும் சேர்ந்து உருவாக்கியது தனது கல்லூரி ப்ராஜெக்ட் விஷயமா ஆரம்பிச்சவர் தான்,முதலில் ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமே மட்டுப்பட்டு இருந்தது . பின்னர் அது போஸ்டன் , ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது . பின்னர் ஏனைய பல்கலைகழகங்களுக்கும் , உயர் பாடசாலைகளுக்கும் 13 வயதிற்க்கு மேற்ப்பட்டவர்கள் பாவிக்கும் வகையில் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது .

முதலில் நிறைய எதிர்ப்புகளையும் சந்தித்ததை யாரும் மறுக்க முடியாது. கூடுதலாக சிரியா ,சீனா ,வியட்நாம்,இரான் போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது .கூடுதலான நிறுவனங்கள் வேலைத்தளங்களில் பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது . நம்ம ஆக்கள் படிப்பிலை கோட்டை விடுறதும் இந்த பேஸ்புக் ஆல தான்.

இப்ப டுவிட்டரும் கொஞ்சம் போட்டிக்கு வந்திருக்கிறதா கதை .. ஆனா இப்ப புதிது புதிதாக பல அறிமுகங்களை பேஸ்புக் அறிமுகப்படுத்தி வருகிறது .

ஆனாலும் இவ்வளவு இழப்புகள் இருந்தாலும் கூடுதலான நண்பர்களை ஈட்டி தருவதில் பேஸ்புக் முன்னிலை தான். பேஸ்புக் ல நடக்குற லொள்ளுகளுக்கு ஒண்டும் குறைச்சல் இல்லை.

யாரோ ஒரு லொள்ளு மன்னன் ஒபாமா கொல்லப்பட வேண்டுமா இல்லையா என ஒரு குயிஸ் போட்டு அதை அனைவருக்கு அனுப்பியிருக்கிறாராம் .
இது தெரிஞ்ச உடன பேஸ்புக் குழு அதை அகற்றி இருக்கு . (பேஸ்புக் குழு தான் செஞ்சுதொவும் தெரியேல்ல )
ஒபாமா கிட்டடில எச்சரித்திருந்தார் என வீடியோக்கள் பரவினதை யாரும் மறக்க முடியாது .

இப்ப இந்திய பிரதமரும் பேஸ்புக் ல இருக்கிறாராம் எண்டு ஒரு பேச்சு. அவருக்கு செல் போன் பாவிக்கிற பழக்கம் கூட இல்லையாம் . அதை அவருடைய மீடியா ஆலோசகர் தெருவித்திருக்கிறார். அது அடிக்கடி அப்டேட் உம் ஆகுதாம் . ஒரு வேளை நம்மட மகிந்த அய்யாவோட சாட் பண்ணுவாரோவும் தெரியேல்ல .

தனுஷ் கிட்டத்தில தன்னுடைய பெயரில் யாரோ பேஸ்புக் பாவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் . உங்கள மட்டும் இல்லை சார் கூடுதலா போனீங்க எண்டா எல்லா நடிகை நடிகர்களுக்கும் நிறைய profile இருக்கும். உங்கட மனைவிக்கும் இருக்கலாம் சார் .

பேஸ்புக்கால் சிக்கல் 

இப்பிடி தான் சாங் என்பவர் இரு பெண்களை மாறி மாறி திருமணம் செய்து பிடிபட்டார் . பேஸ்புக் கில் இரு மனைவிகளும் நண்பர்களாகி தமது திருமண புகைப்படங்களை மாற்றிக்கொண்டனர். மாட்டினார் சாங். இப்ப ஜெயிலில இருக்கிறாராம்.
தகவல்கள் போடுற நேரம் ஜாக்கிரதையா இருங்க நண்பர்களே .....

பேஸ்புக் உம் டுவிட்டேரும் 

டுவிட்டேர் வந்தவுடன் அனைவரும் சொன்ன கருத்து இனி பேஸ்புக்கில்
வேலை இல்லை என்பது தான் .


பேஸ்புக் உம் டுவிட்டேரும் போட்டி நிலைக்கு வந்திருந்தாலும் பேஸ்புக் புதிய அறிமுகங்களையும் வேகத்தையும் கூட்டி உள்ளது . இப்பொழுது பேஸ்புக் லோடிங் வேகம் குறைவான கணனிகளில் கூட விரைவாக உள்ளது .
பேஸ்புக் இது தான் தனக்கு சரியான காலம் என்று சலுகைகளை அள்ளி விடுகிறது . டுவிட்டேர் தனது பங்கிற்கு டுவிட்லோகாசொன் அறிமுகப்படுத்தி உள்ளது .



இதுவரை பேஸ்புக் பாவிப்பதில் டென்மார்க் முன்னிடத்தில் உள்ளது. 34 சதவீதமானோர் பேஸ்புக் பாவிக்கின்றனராம்.

பேஸ்புக் ல கோக்குமார்க்கு...



நம்மட நண்பர்களே இப்ப கூடுதலா பேஸ்புக் ல ரெண்டு மூண்டு பிரோபையில் வேற வைச்சிருக்கினம். நாகரிகமான ஒரு சமூக இணையத்தளத்தில் இவ்வாறு ஏமாற்றுபவர்கள்( ஆரோக்கியமா ?).

பண்ணுறது தான் பண்ணுறாங்க நம்பக்கூடிய மாதிரி பண்ணா இன்னும் நல்ல இருக்கும்ல.

அடபாவிகளா இது வேறயா...

இந்த விஷயம் அவருக்கு தெரியுமா ??



கூடுதலானவர்கள் கோக்குமார்க்கு பிடிபடுவதும் உண்டு . இப்ப பேஸ்புக் இல் சீட் செய்பவர்களை உடனே போடோ பிடிச்சு டாக் உம் பண்நீடுரானுங்க.
அலெர்ட் ஆகுங்க...
திருமணமாகியவர் பெண்களுடன் டேட் செய்யும் தொகுதியில் இணைந்துள்ள அருமையான காட்சி. இதெல்லாம் ப்ரூப் பண்ணுங்கப்பா ...அரிய கண்டு பிடிப்பு . வேற எதையும் கண்டு பிடிக்காதீங்க .
வடிவேல் சொல்லுற மாதிரி ஒக்காந்து யோசிப்பாங்களோ


பாதுகாப்பாக பாவிப்பது எப்பிடி


நெட் கபே களில் பாவிப்பவர்களே கூடுதலாக கவனிக்க வேண்டும் ...
புரோசரில் பேஸ்புக் இணையத்தளம் இருந்தால் அதை குளோஸ் செய்து விட்டு மீண்டு ஓபன் செய்யுங்கள் .

நெருப்புநரி (பயர் பாக்ஸ்) புரோசரில் ஓபன் செய்யாதீர்கள். நீங்கள் அடிக்கும் உங்கள் கடவு சொற்கள் பதியும் வசதி உண்டு( கிரீன் மன்கி ) .

கூடுதலாக உறுதி செய்யப்படாத அப்பிளிகாஷோன்ஸ் கிளிக் செய்யாதீர்கள். தேவையில்லாதவற்றை பாவிக்காதீர்கள்.
கூடுதலானவர்கள் இதன் மூலமே பாதிக்கப்படுகின்றனர்.

உள் நுழையும் போது மட்டுமே பேஸ் புக் கடவு சொல் கேட்க்கும். வேறு எங்கும் கேட்பதில்லை. அவ்வாறு வந்தால் அதை பரிசீலனை செய்யவும்.

உங்கள் படங்களுக்கு (பெண்கள் ) கூடுதலாக பிரைவசி செட்டிங் செய்து வைப்பது நல்லது . தேவையில்லாதவர்கள் அதை பதிய முடியாது.

பேஸ்புக்கில் நாகரிகம்..

கூடுதலாக வேறு ஒருவரின் பெயர்களில் புரோபாயில் ஓபன் செய்பவர்கள், தாமே இன்னொரு ப்ரோபாயில் ஓபன் செய்பவர்கள் அனைவரிடமும் இருந்து பாதுகாப்பதற்க்கு வசதிகள் உண்டு ( அவரை புளோக் செய்யலாம் அல்லது ரிப்போர்ட் அனுப்பலாம் )

நண்பர்கள் கிடைக்கும் இடத்து சொந்த பிரச்சனைகளுக்காக நண்பர்களை ரிமோவ் செய்பவர்கள்.


பேஸ்புக் இணையத்தளம் ரசனைகள் எண்ணங்களை பகிர்வதட்க்கே தவிர (சில அப்ப்ளிகேஷோன்கள் எரிச்சல் ஊட்டுவதும் உண்டு ) .
சிலவற்றை பகிர்வதும் உண்டு . சில நண்பர்கள் பகிரும் முக்கிய விடயங்கள் அற்றுப்போகும்.

சமூக இணையத்தளங்கள் சமூக தொடர்பை பேணுவதற்கே தவிர அநாகரிகமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதட்க்கு அல்ல.
கூடுதலாக சமூக இணையத்தளங்கள் தற்கொலை முயற்ச்சிக்கு தூண்டுவதாக , விரகத்தி அடைய வைப்பதாகவும் , இளைஜர்களை திசை திருப்புவதாகவும் அருட்தந்தை ஒருவர் வழக்கு போட்டிருந்தார்.

பிரபஞ்ச தேடல்(Cosmic ocean) - முடிவிலி- ஏலியன்ஸ்


சுற்றி சுற்றி பார்த்தா எப்பிடியும் ஏலியன்ஸ் க்கும்  எல்லாத்துக்கும் தொடர்பு எப்படியோ வருகிறது .  படித்தவற்றை தொகுத்தவற்றை இங்கே தொகுக்கிறேன் .

ஏலியன்ஸ் இருக்கிறதா இல்லையா என்பது பற்றிய வாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது . ஏலியன்ஸ் யாரும் நேரே பார்க்கவில்லை ஆனால் பறக்கும் தட்டு ? வீடியோக்களில் கூட கண்டு விட்டோம் .  ((UFO ) Unidentified flying object ) என அழைக்கப்படுகிறது. அதாவது கண்டுகொள்ளப்படாத பறக்கும் பொருள் . அது எங்கிருந்து வருகிறது ? உண்மையில் ஏலியன்ஸ் எனும்வேற்றுக்கிரக வாசிகளுடையதா ?

கற்பனைக்கு  எட்ட முடியாத உலகின் தொழில்நுட்பம் நிறைந்த மிக மிக ரகசியமான ஒருவரும் போக முடியாத இடம் தான் ஏரியா 51 . 1990 வரை அமெரிக்க அரசு இப்படியொரு இடம் இருப்பதையே மறைத்து வந்தது .  மிக பெரிய ரகசிய இராணுவத்தளம் . இது லெஸ் வேகஸ்( அமெரிக்காவின் லொஸ் என்ஜெல்சில் இருந்து 250 மயில்கள்  ) நகரத்திலிருந்து சுமார் 100 மயில்களுக்குள் அமைந்துள்ளது . இந்த இடத்தின் மேலே ஒரு விமானம் கூட பறக்க முடியாது . இன்று வரை யாரும் அங்கு சென்றது கிடையாது .  




1955 ,1960  களில் உருவாக்கப்பட்ட இந்த தளம் முன்னர் (NTC ) என அழைக்கப்பட்டது . இதில் 1 -30 வரையான பிரிவுகள் காணப்பட்டது . இந்த பெயர் பெற காரணம் சில வேளைகளில் 15 ஆவது தளத்துக்கு அருகில் அமைந்திருப்பதாக இருக்கலாம் . சகோதர தளமாகையால் 1 ஐயும் 5 ஐயும் ( 51 ) மாற்றி மாற்றி வைத்திருக்கலாம் . 

அப்பிடி என்ன தான் இங்கிருக்கிறது? மிக மிக நவீன தொழில்நுட்பப விமானங்கள் நவீன ஆயுதங்கள் , மிக மிக நவீன நமக்கு தெரியாத பல கண்டுபிடிப்புகள் இருக்கலாம் . ஏன் அனைவரையும் ஆச்சரியத்தில் வியக்க வைக்கும் பறக்கும் தட்டு இங்கிருந்தும் வரலாம்!! . வெளிவராத எவளவோ தொழில்நுட்பங்கள் அரசால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது .இவளவு ரகசிய தன்மைக்கு  காரணம் அது தான் . ஒரு வேளை  ஒளிக்கு இணையான வேகத்தில் அல்லது மிக வேகத்தில்  செல்லும் பொருட்களை கண்டு பிடிக்கும் முயற்ச்சி அங்கு நடைபெறுவதாக சில தகவல்கள் உத்தியோகபூர்வம் இல்லாது  கிடைத்துள்ளது . 


முக்கியமாக பல ஏக்கர்கள் பரப்பு கொண்ட பாரிய தளம் . அனேகமாக நிலத்துக்கு அடியில்  மிகப்பெரிய பல தளங்கள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது . இதுவரை யாரும்  செல்லமுடியாத இடத்து செய்மதி புகைப்படங்கள் தான் கிடைத்துள்ளது . இங்கு பணியாற்றுபவர்கள் சத்திய வாக்குறுதி(வெளியில் எவருக்கும் சொல்ல மாட்டோம் ) எடுத்து தான் கடமையாற்றுகின்றனர் .

முக்கியமாக ஏலியன்ஸ் வந்த பறக்கும் தட்டு கண்டெடுக்கப்பட்டு அதை பற்றிய பரிசோதனைகள் இடம் பெறுவதாக ஊகிக்கப்படுகிறது . சில வேளை இவர்களுடைய கண்டுபிடிப்பாகவும் இருக்கலாம் . ஆளில்லாத விமான கண்டுபிடிப்பில் மிகவும் மும்முரம்  காட்டி வருகிறது ஏரியா 51 .     இஸ்ற்றேல்த்(strealth )  ஜெட்டின் இன் ஆரம்ப கட்ட வடிமைப்பு 1977 இலேயே வடிவமைக்கப்பட்டிருந்தாலும் 1990 இல் அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக அறிவுக்கும் 
வரை  யாருக்கும் இப்படியொரு விமானம் தயாராவது தெரியாது .

 F117-A 



பின்னர்  தெரிய வந்த SR-71 Blackbird என்ற ஜெட் ஒரு மணித்தியாலத்தில் 2300 மயில்களை கடக்கும் . 90 ,௦௦௦ அடி உயரம் வரை செல்லக்கூடியது .

SR-71 Blackbird


TR3A Black Manta எனும் ஆளில்லாத விமானம் தாக்குதல் நடத்த ( இது வரை வேவு மட்டுமே செய்யப்பட்டது ) ஏரியா 51 இல் தயாராகுவதாக செய்தி . அதன் வேகம் ஒரு  மணித்தியாலத்துக்கு 3100 மயில்கள். தயாரிக்க திட்டமிட்டிருக்கும் விமானம் ஹைபெர்சொனிக் (சுமார் 4600 மயில் வேகம் ).   

அதி தொழில்நுட்பப  விமானங்கள்  அனைத்தும் உருவாக்கப்பட்டு பரீட்ச்சிக்கப்படும் இந்த ஏரியா  51 இன்னொரு அதி உச்ச தொழில்நுட்ப்பத்திட்க்கு தயாராவது தெரியவருகிறது . அது தான் பறக்கும் தட்டு . சிலர் பறக்கும் தட்டு இரவு வேளையில் அங்கிருந்து புறப்படுவதை அவதானித்து உள்ளனர் .


ஏலியன்ஸ் க்கும்  இந்த ஏரியா 51 க்கும் தொடர்புண்டா ? ஏலியன்ஸ் உலகம் ஒன்று அடித்தளத்தில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. அது முழுவதும் ஏலியன்ஸ் தொழில் நுட்பம் நிறைந்ததாக கூறப்படுகிறது . 


வழமையாக பறக்கும் தட்டுகள் செய்தி வரும் போது அதை நாசா மறுப்பதும் , வழமை போல அமெரிக்க அதை பூசி மறைப்பதுமே  வழமை . வழமை போல பலூன் என கூறுகிறது அமேரிக்கா .ஆனால் இது வரை ஏரியா 51 பற்றிய எந்த அறிவிப்பும் அமெரிக்க அரசால் வெளியிடப்படவ்வில்லை . 

இந்த ஏரியா 51 பற்றியும் ஏலியன்ஸ் க்கும் அதட்க்குமான தொடர்பு பற்றியும் அடுத்த பதிவில் இடுகிறேன் . மேலும் பல நவீன தொழில் நுட்பங்களும் காணப்படும் அடித்தள ஏலியன்ஸ் தொழில் நுட்பம் பற்றியதாகவும் அமையும்

இசை சுனாமி சாருவுக்கு

ஒருவரை குறை சொல்வது வழமையாக இன்னொருவருக்கு அல்வா சாப்பிடுவது போல . மாற்றுக்கருத்துக்கு எப்போதும் பிரபலம் உண்டு என தெரிந்த சிலர் செய்யும் வேலைகள் , அதுவும் பிரபல எழுத்தாளர்கள் செய்வது தாங்க முடியல்ல . இப்பிடி தான் பிரபலம் ஆகி இருப்பாங்க போல இருக்கு !! . இது வரை சிலருடைய கேவலமான கருத்துக்கு( மன்னிக்கவும் சாடலுக்கு ) மீள் பதிவு போட்டாலே பிடிக்காது காரணம் அது மேலும் அவர்களது கருத்தையும் அவர்களையும் பிரபலமாக்கும் என்பது எனது கருத்து .  ஆனாலும் இந்த எழுத்தாளர்(தனிப்பட்ட கருத்து எழுதுபவர் ) ஏற்க்கனவே பிரபலம் . தவறான கருத்தும் ரசனையாளர்களை சென்றடையலாம் . நிச்சயமாக இதற்க்கு பதில் எழுதியே ஆக வேண்டும் என்று எழுதும் பதிவு .


இது அவரை சாடும் பதிவல்ல .அவர் பதிவை பற்றியே பதில் எழுதியிருக்கிறேன் .
அதுவும் இசையை பற்றி கதைச்சிட்டார் . இதுக்கு மேலயும் பொறுமையா இருக்க முடியேல்ல . மனுஷன் விட்டா ஒபாமா , அப்துல் கலாமுக்கே கடிதம் எழுதுவார் போல .

கீழே உள்ள பதிவை வாசித்துவிட்டு எனது பதிவை தொடருங்கள் . முதலில் இதை வாசிக்கவும் .
சாரு  நிவேதிதாவின்  பதிவு 




ஒரு கால கட்டத்தில் இளையராஜாவின் இசை அதன் சத்தை  இழந்து வெறும் சத்தமாக மாறிய போது
 நீங்களும் இளையராஜாவைப் போல் பென்ஷன் வாங்குவோர் பட்டியலில் சேர்ந்து விடுவீர்களோ என்று நினைத்தேன்.  


இளையராஜா இசை பற்றி என்ன சேர் தெரியும்அவருடைய பாட்டில் நவீன காலத்துக்கு ஏற்றது போல பேஸ் கூடியது . அதை தான் சத்தம் என்கிறீர்களோ   ? ஏன் காதலுக்கு மரியாதை , கண்ணுக்குள் நிலவு, ஹேராம்  பாட்டெல்லாம் கேட்கவில்லையோ ? ரகுமானுக்கு பிந்திய காலத்தில் வந்தவையே அவை . இளையராஜா நவீன காலத்துக்கு மாற முயற்ச்சி செய்திருப்பது இந்த பாடல்கள் கேட்டால் தெரியும் . 


வேணாம் இளையராஜா பற்றி போனால் எழுதி  கொண்டே போவேன் . ரகுமான் விஷயத்துக்கு வருவோம் .


உங்களிடமிருந்துதான் தன்னடக்கம் என்ற பண்பைக் கற்றேன்.
உண்மையாவா சார் ? ரகுமான் தன்னை பற்றி தானே புகழுவதில்லை. தெரியும் தானே  சார் ?


நான் கடப்பா சென்று பெட்டா தர்காவில் அடங்கியிருக்கும் ஔலியாவை தரிசித்து வந்தேன்


யாராவது கேட்டாங்களா இப்ப. அப்போ நித்தியானந்தா நிலைமை ? 


இரண்டு ஆண்டுகள் கழித்து  தமிழில் முதல்முதலாக வந்த ’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் உங்கள் இசை மிகவும் பலவீனமாக இருந்தது.  ரோஸானா என்ற பாடலைத் தவிர மற்ற பாடல்கள் கேட்கும்படியாகவே இல்லை.


ஹோசானா பாடல் சாதாரண ரசனையாலர்களுக்கும் பிடிக்கும் பாடல் தான் .
நீங்கள் ஷாஜியின் பதிவில் இருக்கும் கருத்தை அப்பிடியே பிரதி பலித்திருப்பது போல தெரிகிறதே ? உங்களுக்கு பிடித்தவர் தான் . முதல்ல நீங்க போய் பாட்டை கேட்டு விட்டு வந்து எழுதுங்கள் .


விண்ணை தாண்டி வருவாயா பாடல்கள் கொஞ்சம் உயர்தரம் . ரசனையுடன் கேட்டாலே அனைத்து பாடல்களும் தரம் . கொஞ்சம்  உயர் தரத்தில் கொடுக்கப்பட்ட பாடல்களே உங்களுக்கு விளங்கவில்லையே !! இதிலை உலகத்தரம் வேணுமாம் .. (லொள்ள பாரு )


அனைத்தும் பல்லவி சரணம்  என்ற சாதாரண தமிழ் இசை முறையை மாற்றி அமைத்த பாடல்கள் .


விண்ணைத்தாண்டி வருவாயா என்ற கார்த்திக் பாடிய பாடல் தனியே கிட்டாரின் திறமை . ரகுமான் இசையை இம்ப்ரோவயிஸ் பண்ணுவதில் வல்லவர் .  கோட்ஸ் மாற்றம் அருமை . ஜாய்ஸ் வகை .


அன்பில் அவன் என்ற பாடல் டெக்னோ இசையை கொண்டது . டெக்னோ இசை ரசிகர்களுக்கு பிடிக்கும் .அதுவும் கோரசுடன் அருமையாக இருக்கும் . ரகுமானின் சவுண்ட் இஞ்சினியர் புகுந்து விளையாடி இருப்பார் .


கண்ணுக்குள் கண்ணை  கீஸ் , கிடார் , வயலினின் பயன்பாடு . என தனியே வேண்டும் என்றாலும் பதிவு போடலாம் .


ஆரோமலே  என்ற பாடல் ரொக்கும் நமது இசையும் கலந்த பாடல். இவ்வாறான பாடலை மலயாள இசை அமைப்பாளர்கள் உருவாக்குவதே கடினம் . உயர்ச்தாயியில் பாட வைத்து கிடார் இசையையும் எமது இசையையும் கலந்திருப்பார் . 


விண்ணைத்தாண்டி வருவாயா பாடல் விமர்சனமாக இந்த பதிவு அமையக்கூடாது  என்பதால் சுருக்கமாக  வழங்கியுள்ளேன் . 


பாடல் விமர்சனப்பதிவு(பழைய பதிவு  ) கிளிக் 






ரகுமானுக்கெண்டு ஒரு தனி பாணி உண்டு . அவரை அவர் பாதையில் செல்ல விடுங்கள் . மற்றயவர்களால் ரகுமானை போலவோ அல்லது ரகுமானால் மற்றவர்கள் போலவோ இசை அமைக்க முடியாது . 
உலக அரங்கில் நமது இசையை அரங்கேற்ற முயற்ச்சிக்கும் அவர்களிடம் நீங்கள் புத்தகத்தில் மட்டுமே  படித்த உலக இசை அமைப்பாளர்களை உதாரணம் காட்டுவது என்ன நியாயம். 


ரகுமான் திருக்குறளை அறிமுகப்படுத்தி இருப்பார் மன்னிப்பாயாவில் , இளையராஜா தேவாரத்தை அறிமுகப்படுத்தி இருப்பார் தளபதி பட பாடலில் . இருவரும்  எமது இசையையும் மேலைத்தேய இசையையும் கலந்து கொடுப்பதில் வல்லவர்கள் . அவர்கள் நோக்கமும் வேறு .


   ’பெஹனே தே’ பாடலின் கடைசியில் வரும் கோரஸ் சகிக்க முடியாததாக இருந்தது.  இதே போன்ற ஒரு கோரஸை ’குலால்’ படத்தின் ’ஆரம்ப்’ என்ற பாடலில் நீங்கள் கேட்கலாம்.


குலால் திரைப்பட ஆரப் பாட்டில் இதே போல கோரஸ் கேக்கவில்லையே. தேவையிலாமல் ஒப்பிட வேண்டாம் . அத்தகைய இசை குலால் படத்திற்க்கு தேவைப்பட்டிருக்கலாம் . ராவணா கதைக்கு இப்படியான இசை தேவைப்பட்டிருக்கலாம் . குழல் இசையில் அரச கால வாத்திய பயன்பாடு இருக்கும் . இது நவீன கால ராவணன் ,இதற்க்கு தேவைப்பட்டிருக்காது .


பியுஷ் மிஸ்ரா , விஷால் பரத்வாஜ் போன்றோரின் பாணி வேறு , தயவு செய்து ஒப்பீட்டை நிறுத்துங்கள் . 
ரகுமானுக்கு தெரியாத இசையோ அல்லது இசை அமைப்பாளர்களோ உங்களுக்கு தெரியும்  என்று எண்ணம் போல. என்ன கொடுமை ? 


 ராவணில் நீங்கள் மிக பலவீனமான ஆட்டத்தை ஆடியிருக்கிறீர்கள்.
ஆகா .இவருக்கு யாராவது வூபர் செட் வாங்கி குடுங்கப்பா . ஏதோ ரேடியோவிலை கேட்டிட்டு  வந்து 
எழுதிறார் போல . ரகுமானின் சவுண்ட் என்ஜினியரை  மறந்திட்டீங்க  போல . போய் ஹோம் தியேட்டர் இல்லாட்டி தரமான சத்தத்தில் கேளுங்க . நீங்க எந்த வகை பாட்டுகளை நல்ல பாடல்கள் என்கிறீர்கள் என்று தெரியவில்லை . பேஸ் கூடிய பாடல்கள் சரியில்லை என்கிறீர்கள் போல .
கூடுதலாக ரகுமானின்  திறன் பாடகர்களை சரியாக பயன்படுத்துவார் . இசையை விடுத்து . கட்டா கட்ட வும் பீரா பிராவும் கேட்டதில்லையோ ? டிம்பெர்லான் போன்றோரின் இசையில் வித்தியாசமான சத்தங்கள் பின்னணியில் இருக்கும் . பின்னியில் ஒலிக்கும் சிறு சிறு சத்தங்கள் தான் ரகுமானின் பலமும் .


பியுஷ் மித்ரா புகழ் பாடும் நீங்கள் லகான் பாடல்கள் கேட்டதில்லையோ ? லகான் பாடல்களில் புரட்ச்சியுடன் கண்ணீரும் வரும் .


உங்களுடைய திறமை வெளிப்பட தமிழை விட இந்தி சினிமா அதிக இடம் கொடுத்தது


இவாறு தரம் குறைந்த விமர்சனங்களை பண்ணினால் எப்படி வரவேற்ப்பு கிடைக்கும் . விண்ணை தாண்டி வருவாயா அனைத்து பாடல்களும் ரகுமான் தமிழுக்கு வழங்கியது . இப்போது என்ன செய்கிறீர்கள் சேர் . ஒரு வேளை  இப்படியான எழுத்தாளர்கள் ஹிந்தியில் இல்லை போல .


 ஷாப் ஹாஸ்னி (அல்ஜீரியா), நான்ஸி அஜ்ரம் (லெபனான்), ரிக்கார்தோ மொந்தனர் (அர்ஜெண்டினா), பின் நவீனத்துவ இசைக்கு ஐயானிஸ் ஸெனகிஸ் (க்ரீஸ்) 


இவங்கட  பாடல் எல்லாம் உண்மையிலேயே நீங்கள் கேட்டிருக்கிறேர்களா ? ஏதாவது புத்தகத்தில் இருந்து  சுட்டதா ? அவர்கள் டிராக் வேறு . ரகுமான் ரகுமான் தான் .ரகுமானாகவே  இருக்க விடுங்கள் .


படிப்படியாக தனக்கென்று ஒரு பாணியை உருவாக்க ரகுமானுக்கு தெரியும் . 
சாதரணமாக கோட்ஸ்  மாற்றி இம்ப்ரோவிசிங் பாடல்களே விளங்கவில்லை . இதிலை எங்கிருந்து இவங்க இசை உங்களுக்கு விளங்க போகுது எண்டு தெரியேல்ல.


ரகுமான் அடிக்கடி சொல்லும் ஒன்று இசைக்குள் இறங்குங்கள் அப்போது தான் எவளவு பெரிய கடல் என்று தெரியும். நான் இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன் என்றார் . மற்றும் மேலைத்தேய படங்களில் பின்னணி இசை வேறு பாடல்கள் இசைக்கு வேறு இசையமைப்பாளர் . ஒரு படத்துக்கு பின்னணி இசை போடும் நேரத்துக்கு 4 பட பாடல்கள் போடலாம் என்பார் . அவளத்துக்கு பின்னணி இசை முக்கியத்துவம் பற்றி கூறியிருப்பார் . தமிழ்  சினிமா அப்படியா ??