Wednesday, November 26, 2014

சித்தன் ரகசியம் (8)


“சித்தம் போக்கு சிவம் போக்கு” என்பதற்கு நிறைய சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம். அந்த சம்பவங்களை நுட்பமாய் உணர்ந்தால், ஒவ்வொரு சம்பவங்களுக்குள்ளும் பேருண்மை ஒளிந்திருப்பதை உணரலாம்.

பெரும்பாலும், சித்தர்கள் தங்களுக்கென எதுவும் வைத்திருக்கமாட்டார்கள். உணவு கூட பிட்சை தான். மறுவேளைக்கு கூட சேமித்து வைக்கமாட்டார்கள்.
பிச்சைக்கும், பிட்சைக்கும் கூட நிறைய வித்தியாசம் உள்ளது. இதை முதலில் தெளிவாக புரிந்துக்கொள்ளவேண்டும்.

"பிச்சை" என்பது எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வது என்பதாகும். ஆனால், "பிட்சை"யாக அரிசி மட்டுமே கொடுக்க முடியும். விதிவசத்தால் சொத்து சுகம் இழந்து வாழ வழியின்றி எடுப்பது “பிச்சை”. சுகமாக வாழ வழியிருந்தும், சொத்து சுகங்களை உதறிவிட்டு துறவு கோலம் பூண்டு எடுப்பது “பிட்சை”. பிச்சை இடுவது என்பது கருணை, ஆனால் பிட்சை கடமையாகும்.

பிச்சை கேட்டு கொடுக்காமல் போனால் புண்ணியம் மட்டும் சேராமல் போகும், பாவம் ஒன்றும் இல்லை, ஆனால் பிட்சை இடாது போனால், பாவம் பின்தொடரும். ஏனென்றால், பிட்சை வாங்குபவர், நம்மிடம் இருந்து அரிசியை மட்டும் வாங்குவதில்லை, கூடவே சேர்ந்து நமது பாவத்தையும் பெற்று செல்கிறார் என்பார்கள். இப்படி பிச்சைக்கும், பிட்சைக்கும் உள்ள வேற்றுமைகளை புரிந்துகொள்ளவேண்டும்.

முந்தைய பதிவில் சொன்ன “பிராந்தர்” என்ற சித்தரும் பிட்சை கேட்டு வரும் அரிசியை கொண்டு அடுப்பெரித்து சமைப்பார். அதில் தான் ஒரு கவளம் சாப்பிட்டது போக மீதி உள்ளதை மற்ற ஜீவராசிகளுக்கு போடுவார். பின்பு பானையை கவிழ்த்து வைத்துவிடுவார்.
அதாவது, அவர் உறங்க செல்லும் பொழுது அவரிடம் தன் உடம்பு ஒன்றை தவிர வேறு உடுப்பு எதுவும் இருக்காது.. இருக்கவும் கூடாது..

இப்படி அவர் நடந்து கொள்வதற்குப் பின்னாலே நுட்பமான உண்மைகள் உள்ளன... அவை..?

No comments:

Post a Comment