Wednesday, November 26, 2014

தீபாவளி



உண்மையான தமிழன்னா தீபாவளியைக் கொண்டாடணும்.
தீபாவளி தமிழர் திருநாள் தான்.

தமிழகத்தில் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீப வழிபாடே தீபாவளியாக மாற்றம் பெற்றது என்ற கருத்து உள்ளது. மதுரையை நாயக்கர்கள் ஆண்டபோது தற்போதைய தீபாவளியின் வடிவம் உருவானதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆயினும் அதற்கு முன்னரே தமிழகத்தில் தீபாவளியின் வடிவம் இருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன.
பழமையான சங்க இலக்கியங்களுள் ஒன்றான அகநானூறில், அமாவாசை நாளில் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் குறித்து இடம்பெற்றுள்ளது. அக்காலத்தில் இவ்வழிபாட்டுக்கு ‘தீபாவளி’ என்ற பெயர் இல்லையெனினும், அதையொத்த பண்டிகை கொண்டாடப்பட்டிருப்பது இப்பாடலில் உறுதியாகிறது.

“மழைகால் நீங்கிய மகா விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம!”
                 
                                        -(அகநானூறு – 141ம் பாடல்) என்று நக்கீரர் பாடுகிறார்.

‘அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்’ என்பது அமாவாசை நாளையே குறிக்கிறது. இந்தச் செய்யுளில் வரும் பழவிறல் மூதூர் திருவண்ணாமலையைக் குறிப்பதாகவும் கூறுவர். திருவண்ணாமலை தீப வழிபாட்டுக்கு சிறப்புப் பெற்றது. இங்கு ஈசன் சோதி வடிவமாகத் தரிசனம் தருவதாக ஐதீகம்.

கார்த்திகை தீபம் நிகழும் கார்த்திகை மாத பெüர்ணமிக்கும், தீபாவளிப் பண்டிகை வரும் ஐப்பசி மாத அமாவாசைக்கும் இடையே 15 நாட்கள் மட்டுமே வித்யாசம் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்.

இன்னும் சில தகவல்

எழுபது கோடி வருசத்துக்கு முன்னாடியாகட்டும், இருபத்தியாறு லட்சம் வருசத்துக்கு முன்னாடியாகட்டும், இந்த பூமி ஐஸ்கட்டியா ஒறஞ்சு போனப்ப எப்படி மீண்டுச்சுனு படிச்ச பேரப்புள்ளைக எல்லாத்துக்கும் தெரியும்ல?

அதாவது, எரிமலைக மூலமா பூமிக்கு கீழ இருக்கிற கரியமில வாயுவ நெறைய வெளிய அனுப்புச்சு. கரியமில வாயு அதிகமா இருந்தா பூமிக்கு சூடு கெடைக்கும். குளுரு கொறஞ்சு உசுருகள் தன்ன பெருக்கிக்க வசதியா எளஞ்சூடு கெடைக்கிறதுக்காக இயற்கையே அப்படி செஞ்சுக்குது. (நெறைய கரி வாயு இருக்குறதுனாலதேன் வியாழன் கெரகம் கொழக்கொழனு இருக்கு. ரொம்ப கொஞ்சமா கரி வாயு இருக்கிறதுனாலதேன் செவ்வா கெரகம் ஒறைஞ்சு போயி கெடக்கு.)

அத மாதிரிதேன் ஐப்பசி, கார்த்திகையில மழைக விடாம பேஞ்சு பூமிய ரொம்பத்தேன் குளுர வச்சுரும். அதுல இருந்து மீளத்தேன் “சொக்கப் பனை” கொளுத்தி புகையால கரி வாயுவ அதிகப் படுத்துற வழக்கம் வந்துச்சு. அதுவே பின்னாடி பட்டாசுகளெல்லாம் கண்டு புடுச்சதுக்கப்புறம், எரிமலை மாதிரியே புஸ்வானம் பொங்குறதும், வெடிக்கிற வெடியுமா வெடிச்சு குளுரக் கொறைச்சாக. (இல்லாட்டி வெவசாயம் பூராம் வெள்ளத்துல அழிஞ்சு போகும். சீவராசிக பெருகாம போயிடும்ல)

No comments:

Post a Comment