Thursday, August 29, 2013

உங்கள் நகத்தின் உருவமைப்பும் - அதன் இரகசியங்களும்





உங்கள் நகத்தின் உருவமைப்பும் - அதன் இரகசியங்களும் - The secret of your nail shape.
[ இவை உண்மையா - பொய்யா என்பதை நீங்களே உங்களோடு ஒப்பிட்டு அறிந்துகொள்ளுங்கள்]
1. Short nails. Hardwork, curious, independent.
குறுகிய நகம்- கடுமையான உழைப்பு, அறிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர், தனித்து இயங்கும் ஆற்றல்
2. Short nails, sloping wide. Love to criticize and irritating.
குறுகிய ஆனால் அகன்ற நகம்:- எரிச்சலூட்டுவதிலும் விமர்சிப்பதிலும் அதீத விருப்பம்
3. Nail width, length, rounded at the tip. People with clear judgment and common sense.
நீளமும் அகலமும் முனைவில் வளைந்த தோற்றம்:- பகுத்தறிவுடனும், தெளிவான தீர்ப்புடனும் செயற்படுவோர்

4. Almond-shaped long nails. Calm and relaxed person, loves to dream.
வாதுமைக்கொட்டை வடிவில் உள்ள நீண்ட நகம் :- அமைதியாகவும் தளர்வுடனும் செயற்படுபவர், கனவு காண்பதில் நாட்டமுடையவர்
5. Very large nail, square. Cool and ego.
நீண்ட சதுர அமைப்புடையது: அமைதியாகவும் நான் எனும் முனைப்புடனும் செயற்படுபவர்
6. Wedge-shaped nails. Over-sensitive. சிறிய, ஆப்பு வடிவ நகம்: மிதமான உணர்ச்சிவசப்படுபவர்

Monday, August 19, 2013












ஒரு போராளி இரு போராட்டத்தை எதிர்கொண்டான்
காந்தியவாசிகளின் அஹிம்சா பற்றையும் வெள்ளையினத்தின்
அடிமையாக்கும் அடிமை பற்றையும் !!!!!

சொந்தநாட்டிலே இரு துருவங்களை கையாண்ட
பெருமைக்குரியவன் !!!!

ஜான்சி ராணி இயக்கத்தை உருவாக்கி பெண்ணின போராளிகளை
உருவாக்கிய முதல் தலைவன் இவன் !!!!

ஆத்திரக்காரர் என்று சொன்ன அஹிம்சைக்கும், பதற்றகாரர்
என்று சொன்ன முதல் பாரத பிரதமருக்கும் தான் ஒரு
போராட்ட சரித்திரத்தை தோற்றுவிக்கும் பாத்திரக்காரர்
என்பதை நிருபித்தவர் !!!!

ஹிட்லர் போன்றவன் இந்தியாவில் நுழைந்திருந்தால்
காற்றில் பறந்திருக்கும் காந்திய கொள்கை !!!!

இன்றுவரை இந்தியாவின் மனம் குன்றிய வீழ்ச்சிக்கு இந்த
திணிக்கப்பட்ட அஹிம்சைதான் காரணம் !!!!!

அஹிம்சையை பின்பற்றும் நாட்டில் எதற்கு இன்றுவரை லத்தியேந்திய
காவலர்கள் -மாடு மேய்பவர்கள் போல

இந்தியா அஹிம்சை நாடு என்பதை விடவும் , தர்மத்திற்காய் எதையும்
செய்திடும் நாடு என்பதில்தான் பெருமிதம் அடங்கியுள்ளது -அதனை
நிரூபிக்க போரடிய மகத்தான வீரன் !!!!

தர்ம போராட்டத்தில் வெற்றியடைய ரத்தம் சிந்துவது என்று
முடிவெடுத்துவிட்டால் முதலில் சிந்துவது எதிரியின்
ரத்தமாக இருக்கட்டும் -இதுதான் சுபாஷின் மூச்சுகாற்றில்
வெளிவந்த புரட்சி முழக்கம் !!!!

அதர்மத்தை அடிபணியவைக்க அஹிம்சை ஒருபக்கமும்
ஆயுதம் மறுபக்கமும் அணிவகுத்து அவனியிலே
சுதந்திர இந்தியா தலைநிமிரட்டும் -என்றவனின்
சிந்தனை இன்னும் பலமாக பலரின் நெஞ்சத்தில்
சூடான ரதத்தை சுழற்றியவாறு இயங்கி கொண்டுதானிருக்கிறது !!!!!

போராளியின் வாழ்கையில் மரணம் மண்டியிட்டு பின் தொடரும் !!!!
ஆனால் அஹிம்சை ஏந்தியும் அதே சமயம் ஆயுதம்
ஏந்தியும் போராடும் இவன் போன்ற போராளிக்கு முன்னால்
மரணமும் குழப்பதொடு தனது தோல்வியை ஒப்புக் கொள்ளும் !!!!

அப்படி, மரணத்தால் தோல்வியை ஒப்புக்கொள்ள வைத்த
ஒரே வீரன் சந்திரனை ஒரு நாசியிலும் சூரியனை மறு நாசியிலும்
சுவாசித்த சுபாஷ் சந்திர போஸ் எனும் தீரன் !!!!

இந்த போராளியின் வெற்றிச்சலனம் இன்னும் இந்திய
தாயின் கர்ப்பத்தில் - தான் ஜனிக்க போகும் நாட்களை எண்ணியவாறு
வளர்ந்து வருகிறது !!!!

ஜனித்திடும் நாளில் எனது இந்தியாவிடம் அவசியமான ஆவேசமும்
அடிமைதனமற்ற அஹிம்சையும் அடுத்தடுத்த பக்கத்தில்
அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்துகொண்டிருக்கும் !!!!

மாபெரும் போராளியை இந்தியா நியாபகத்தில் கொள்ளாத வரை - அடிமைத்தனமும் அநீதிகளும் ,அடுத்தவனின் நாட்டில்
கையேந்தும் ஈனமும் இம்மண்ணில் ஓயாது,தலை சாயாது !!!!!

இறுதிகட்ட உரையென்று இவனுக்கில்லை ,காரணம் இறுதிவரை இவன் எங்கிருந்தான் இறந்தானா அல்லது இருந்தானா இன்றுவரை தனதிறப்பை சர்ச்சையில் வைத்திருக்கும் சாகாகலை அறிந்த
சரித்திர நாயகன் !!!

//நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவானில், ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்ட தினம் இன்று./














மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன்

கணக்கதிகாரம் புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல் இதை தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம். இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .

1850 ஆம் வருடம் "ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச" ( Hermann von Helmholtz ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியை பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார்.

அதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவை கண்டுபிடித்தனர் (Speed of Thought). அவை 50 மீட்டர் /நொடி என்று அளவிட பட்டது/ எனினும் வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் /நொடி என்ற அளவிலும் கடக்குமாம்.

சரி இவை ஒரு பக்கம் இருக்க அந்த யோசனை என்ற அளவையும் தற்போதிய கணித அளவையும் ஒப்பிட்டுப் பாப்போம்.

1 மொழம் = 46.6666 சென்டிமீட்டர் (Cm )
1 சிறுகோல் = 559.9992 சென்டிமீட்டர் (Cm )
1 கூப்பிடுதூரம் = 279999.6 சென்டிமீட்டர் (Cm )
1 காதம் = 1119998.4 சென்டிமீட்டர் (Cm )
1 யோசனை = 4479993.6 சென்டிமீட்டர் (Cm )

சென்டிமீட்டரை கிலோமீட்டராக மாற்றினால்

1 யோசனை = 44.799936 கிலோமீட்டர் (இது காலத்தை குறிக்காத அளவு)

இப்பொழுது அவர்கள் கூறியபடி 50 மீட்டர்/நொடி என்று கால அளவுடன் கணக்கிட்டால்

50 மீட்டர்/நொடி என்பதை கிலோமீட்டர் கணக்கில் பார்த்தல்

180 km/hr

எனினும் இவர்கள் அறிவித்த இந்த அளவு உணர்ந்து, சிந்தித்து, முடிவெடுத்து, செயல்படுதல் என்ற நான்கு செயல்பாட்டை ஒருகிணைந்த அளவே. இங்கு யோசனை என்ற அளவு சிந்தித்தல் என்ற பகுதியில் வரும். ஆகவே,

180 / 4 = 45 கிலோமீட்டர் / hr என்றே வருகிறது .

45 கிலோமீட்டர் / hr = 1 யோசனை

எனவே காலத்தைக் குறிக்காத ஒரு யோசனையின் அளவு இவர்கள் அறிவித்த அளவுடன் பொருந்துகிறது.

இதே போல்,

நூற்று ஐம்பதாயிரம் யோசனை = 1 கதிரவநியங்குகிற மட்டு (6719990.4 km)
இரண்டு கதிரவநியங்குகிற மட்டு = 1 விண்மீன் மண்டலம் (13439980.8 Km )

இந்த அளவுகளும், நவீன அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகளிலும் வேறுபாடு இருந்தாலும். முதல் முயற்சி என்றும் தமிழனின் சொந்தமாக இருக்கிறது. இன்றளவும் ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் முதல் வெற்றி காண்பது கடினந்தான்.

இப்படி ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்.