Tuesday, August 4, 2015

விக்கிரமாதித்தன் தலையை பட்டி இரவல் வாங்கின கதை 2

மறுநாள் காலையில் எழுந்த விக்கிரமாதித்தன் தேவலோக நந்தவனத்திற்குப்போய் மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம், முதலான பூக்களைச்சேகரித்து, சில,பல நண்டு, நட்டுவாக்களி, தேள் ஆகிய விஷஜந்துக்களையும் சேகரித்து, அந்த விஷ ஜந்துக்களை உள்ளே வைத்து அந்தஜந்துக்கள் வெளியே தெரியாதபடி மலர்களைக்கொண்டு இரண்டுசெண்டுகள் தயாரித்தான்.

பிறகு விடுதிக்குச் சென்று காலைக்கடன்களை முடித்து, அந்தமலர்ச்செண்டுகளை எடுத்துக்கொண்டு, ஆடையாபரணலங்கிருதனாய்இந்திர சபைக்கு வந்தான். அப்போது இந்திரனும் வர, அவர்களிருவரும்பேசிக்கொண்டே சென்று அவரவர்கள் ஆசனத்தில் அமர்ந்தார்கள். அப்போது இந்திரன் விக்கிரமாதித்தனைப்பார்த்து நடனத்தைஆரம்பிக்கலாமா என்று கேட்க, விக்கிரமாதித்தனும் சம்மதித்தான். இந்திரன்சைகை காட்ட ரம்பையும் ஊர்வசியும் சபையினுள் புகுந்து அனைவருக்கும்வணக்கம் சொல்லி தங்கள் நடனத்தை ஆரம்பித்தார்கள். அவர்கள் முன்னும்பின்னும் சுழன்றும், குனிந்தும், நிமிர்ந்தும், மான்களைப்போல்துள்ளிக்குதித்தும் ஒருவருக்கொருவர் சளைக்காமலும், தாளம் தப்பாமலும்ஆடின நடனத்தைப்பார்த்த தேவர்களும், மற்றோர்களும், விக்கிரமாதித்தன்இவர்கள் நடனத்தில் வெற்றி தோல்வி எவ்வாறு கண்டுபிடித்துசொல்வானோவென்று ஆச்சரியத்துடன் காத்திருந்தார்கள்.

அப்போது விக்கிரமாதித்தன் அந்த நடனமாதர் இருவரையும் அருகில்அழைத்து, நீங்கள் நடனம் ஆடும் சிறப்பு மிகவும் மேன்மையாக இருக்கிறது. ஆனாலும் நீங்கள் வெறும் கையால் அபிநயம் பிடித்து ஆடுவதை விட இந்தமலர்ச்செண்டை கையில் பிடித்துக்கொண்டு ஆடினால் இன்னும் சிறப்பாகஇருக்கும் என்று கூறி, அவன் கொண்டுபோயிருந்த மலர்ச்செண்டுகளைஅவர்கள் கையில் கொடுத்தான். அவர்களும் ஆஹா, விக்கிரமாதித்தமகாராஜா நமது நடனத்தை மெச்சி பரிசாக இந்தமலர்ச் செண்டுகளைக்கொடுத்தார் என்று சந்தோஷப்பட்டு அந்த மலர்ச்செண்டுகளை கையில்பிடித்துக்கொண்டு இன்னும் உற்சாகத்துடன் நடனமாடினார்கள்.

இப்படி அவர்கள் நடனமாடியதில் ரம்பையானவள் அந்தப் பூச்செண்டைலாவகமாகவும், லேசாகவும் பிடித்துக்கொண்டு ஆடினாள். ஊர்வசியோ அந்தமலர்ச்செண்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு ஆடினபடியால் அதனுள்இருந்த விஷ ஜந்துக்கள் அவள் விரலைத் தீண்ட, அவளுக்கு விஷம் ஏறிநடனத்தில் தாளம் தப்பி, தடுமாறி கீழே விழுந்து விட்டாள். அப்போதுவிக்கிரமாதித்தன் எழுந்து ரம்பையே போட்டியில் வென்றவள் என்றுசபையோருக்கு அறிவித்தான். இந்திரன் முதலான சகல தேவர்களும்கைகொட்டி அதை ஆமோதித்தார்கள்.

ஆனாலும் அவர்களுக்கு விக்கிரமாதித்தன் இந்த வெற்றி தோல்வியினைஎவ்வாறு கண்டுபிடித்தான் என்று தெரிந்துகொள்ள ஆவல். இதைதேவேந்திரனே விக்கிரமாதித்தனிடம் கேட்க, விக்கிரமாதித்தன் அந்தஇரண்டு மலர்ச்செண்டுகளையும் கொண்டு வரச்செய்து அவைகளைப்பிரித்துக் காட்டினான். அவைகளுக்குள் இருந்த விஷ ஜந்துக்களைஎல்லோரும் பார்த்தார்கள். விக்கிரமாதித்தன் சொன்னான், நான் இவ்வாறுமலர்ச்செண்டுகளை காலையில் தயார் செய்து கோண்டு வந்திருந்தேன். அவைகளை இந்த நடனமாதர்களின் கையில் கொடுத்து ஆடச்சொன்னதையாவரும் பார்த்தீர்கள். ரம்பை இந்த மலர்ச்செண்டை லகுவாகப்பிடித்துக்கொண்டு ஆடியதால் இந்த விஷ ஜந்துக்கள் அவளை ஒன்றும்செய்யவில்லை. ஊர்வசியோ இந்த மலர்ச்செண்டை இறுக்கிப்பிடித்துக்கொண்டு ஆடினபடியால் அவளை இந்த விஷ ஜந்துக்கள் தீண்டி, அவள் தாளம் தப்பி ஆடினாள் என்று சொல்ல, எல்லோரும்விக்கிரமாதித்தனின் புத்தி சாதுர்யத்தை மெச்சிப் புகழ்ந்தார்கள். பிறகு சபைகலைந்தது.

தேவேந்திரன் கேட்டுக்கொண்டதினால் விக்கிரமாதித்தன் மேலும் சிலதினங்கள் இந்திரலோகத்தில் தங்கினான். நான்கைந்து தினங்கள்சென்றபிறகு, விக்கிரமாதித்தன் தேவேந்திரனைப்பார்த்து, நான் என்நாட்டைவிட்டு வந்து பல தினங்கள் ஆகிவிட்டன. எல்லோரும் 
என்னைஎதிர்பார்த்துக்கொண்டு இருப்பார்கள், ஆகவே எனக்கு விடைகொடுக்கவேண்டும் என்று 
கேட்க, இந்திரனும் அப்படியே ஆகட்டும் என்றுகூறி, குபேரனைக்கூப்பிட்டு நமது 
பொக்கிஷசாலையில் இருக்கும் அந்தமுப்பத்திரண்டு பதுமைகள் வைத்த ரத்தின சிம்மாசனத்தை எடுத்து வருமாறுபணித்தான். அவனும் அவ்வாறே அந்த சிம்மாசனத்தை சபையில் கொண்டுவந்து வைத்தான். அந்த சிம்மாசனமோ மிகுந்த வேலைப்பாட்டுடனும், விலைமதிக்க முடியாத நவரத்தினங்கள் பதித்து, முப்பத்திரண்டுபடிகளுடனும், ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு பதுமையும் கூடி, கண்டோர்வியக்கும் வண்ணம் தேவலோக சிற்பி மயனால் இயற்றப்பட்டதாகும்.

தேவேந்திரன் விக்கிரமாதித்தனை பலவாறாகப் புகழ்ந்து, அந்தசிம்மாதனத்தை விக்கிரமாதித்தனுக்கு கொடுத்து, இந்த சிம்மாசனத்தைஎங்கள் அன்புப் பரிசாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி, இந்தசிம்மாசனத்தில் நீ ஏறின சிம்மாசனம் இறங்காமல் ஆயிரம் ஆண்டுகள்ஆட்சி புரிவாயாக என்ற வரமும் கொடுத்தருளினான். கூடியிருந்த மற்றதேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் அவ்வாறே ஆகுக என்றுவாழ்த்தினார்கள். பிறகு இந்திரன் மாதலியைக்கூப்பிட்டு, விக்கிரமாதித்தமகாராஜாவையும், இந்த சிம்மாசனத்தையும் அவருடைய நாட்டில்சேர்ப்பித்துவிட்டு வருவாயாக என்று பணித்தான். விக்கிரமாதித்தனும்எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு தேரில் ஏற, மாதலியும் சிலநொடிகளில் விக்கிரமாதித்தனின் சபை முன்பு தேரைக் கொண்டு போய்நிறுத்தினான். ராஜா தேரிலிருந்து இறங்கிக்கொண்டு பணியாட்களைக்கூப்பிட்டு முப்பத்தியிரண்டு பதுமைகள் கூடிய சிம்மாசனத்தை இறக்கிராஜசபையில் வைக்கச்சொல்லிவிட்டு, மாதலிக்கு விடைகொடுத்தனுப்பினான். அதற்குள் ராஜா வந்துவிட்ட சேதி தெரிந்து பட்டியும், மற்ற மந்திரி பிரதானிகளும் வாசலுக்கு வந்து ராஜாவிற்கு முகமன் கூறிவரவேற்று அரண்மனைக்குள் அழைத்துப் போனார்கள்.

எல்லோரும் அவரவர்கள் ஆசனங்களில் அமர்ந்தானபிறகு பட்டிஎழுந்திருந்து “தேவரீர் இங்கிருந்து தேவலோகம் சென்று திரும்பினவரையிலான செய்திகளைக்கேட்க அனைவரும் ஆவலாக இருக்கிறோம், ஆகவே அவற்றை தாங்கள் எடுத்துக்கூற வேண்டுகிறோம்” என்றுவிக்ஞாபித்தான். விக்கிரமாதித்தனும் அவ்வாறே தான் தேவலோகம் சென்றுரம்பை ஊர்வசி நடனப்போட்டிக்கு தீர்ப்பு சொன்னது, தேவேந்திரன் ரத்தினசிம்மாசனம் கொடுத்து ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் வரம் 
கொடுத்துஅனுப்பியது வரையிலான விருத்தாத்தங்கள் எல்லாவற்றையும் விரிவாகச்சொன்னான். எல்லாவற்றையும் கேட்ட பட்டி, தேவரீருக்கு ஆயிரம்ஆண்டுகள் வரம் வாங்கி வந்தீர்களே, எனக்கு ஏதாவது கேட்டு வாங்கிவந்தீர்களாவென்று கேட்க, பட்டி, உன்னை மறந்தேனே, என்ன செய்வதுஎன்க, பட்டியும் போனால் போகிறது, விடுங்கள் என்று சொன்னான். அப்போது சூர்யாஸ்தமன நேரம் ஆகிவிட்டபடியால் சபை கலைந்துஎல்லோரும் அவரவர்கள் இருப்பிடங்களுக்குப் போய் சேர்ந்தார்கள்.

அன்று இரவு படுக்கப்போன பட்டிக்கு தூக்கம் வரவில்லை. நமது ராஜாஇவ்வாறு தனக்கு மட்டும் ஆயுள் வாங்கிக்கொண்டு என்னை மறந்துவந்தாரே, நாம் இருவரும் ஆயுள் பரியந்தம் ஒன்றாக இருப்பதாகஅம்மன்முன் சபதம் எடுத்தோமே, அது இப்போது வீணாய்ப்போய்விடும்போல்இருக்கிறதே என்று பலவாறாக யோசனை செய்து, எதற்கும் நமக்கு நம்மாகாளியம்மன் துணை இருக்கும்போது என்ன கவலை என்று உடனேபுறப்பட்டு உச்சினிமாகாளியம்மன் கோவிலை அடைந்தான். அப்போது இரவுமூன்றாம் ஜாமம் ஆரம்ப சமயமானதால் அம்மன் நகர்வலம் போயிருந்தாள். சரி, அம்மன் வரட்டும் என்று பட்டி அம்மனைத் துதித்துக் கொண்டு அங்கேயேஇருந்தான். சிறிது நேரத்திற்குப் பின் வந்த அம்மன் பட்டியை அங்கே பார்த்துஆச்சர்யப்பட்டு, ஏது பிள்ளாய் பட்டி, இந்த நேரத்தில் இங்கு விஜயம் என்றுகேட்க, பட்டியும் அம்மனைப் பலவாறாகத் தோத்திரம் செய்து, அம்மா, நீயல்லவோ ஏழை பங்காளன், எனக்கு உன்னை விட்டால்யாரிருக்கிறார்கள், நீதான் எனக்கு அருள் புரியவேண்டும் என்று தோத்திரம்செய்ய, பட்டியும் விக்கிரமாதித்தன் இந்திரலோகம் சென்று வந்தவிருத்தாத்தங்களயெல்லாம் கூறி அங்கு அவன் தனக்கு மட்டும் ஆயிரம்ஆண்டுகள் வரம் வாங்கிக்கொண்டு, தன்னை மறந்து விட்டு வந்ததையும்கூறினான்.
அப்போது அம்மன் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, பட்டியும்விக்கிரமாதித்தன் தேவலோகத்துக்குப் போய் ஆயிரம் ஆண்டுகள் ஆயுள்வாங்கி வந்திருக்கிறான், நீ எனக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ வரம்கொடுக்க வேண்டுமென்று கேட்க, அம்மன் இது என்னால் முடியாத காரியம்ஆயிற்றே என்று சொல்ல, பட்டியும் “அம்மா, உன்னால் முடியாத காரியமும்இந்த லோகத்தில் இருக்கிறதோ என்று பலவாறாக வேண்ட, அம்மன்ஏதாவது சால்ஜாப்பு சொல்லி 

இவனை அனுப்பிவிடலாம் என்றெண்ணி, அப்படியானால் நீ போய் விக்கிரமாதித்தனுடைய தலையைவெட்டிக்கொண்டு வந்தாயானால் உன்னுடைய கோரிக்கையைநிறைவேற்றுகிறேன் என்று சொன்னாள். பட்டி சரி, அப்படியே செய்கிறேன்என்று சொல்லிவிட்டு, உடனே விக்கிரமாதித்தன் அரண்மனைக்குச்சென்றுஅவன் சயனமண்டபத்துக்குள் புகுந்து அவனை எழுப்பினான். எழுந்தவிக்கிரமாதித்தன் பட்டியைப்பார்த்து ஏது பிள்ளாய் பட்டி, இன்னேரத்தில்இங்கு வந்த காரணம் என்னவென்று கேட்க, பட்டியும் “தேவரீர் தலை ஒருகாரியமாய் அவசரமாகத் தேவைப்படுகிறது, அதற்காகத்தான் வந்தேன்” என்றான். விக்கிரமாதித்தனும் “சரி எடுத்துக்கொண்டு போ” என்று சொல்லிபடுத்துக்கொண்டான். 

பட்டி உடனே உடைவாளை உருவி விக்கிரமாதித்தன் தலையை ஒரேவெட்டாக வெட்டி தலையை எடுத்துக்கொண்டு அம்மன் கோவிலுக்குச்சென்று தலையை அம்மன் காலடியில் வைத்தான். அம்மன் திடுக்கிட்டு, ஓஹோ, இனிமேல் இவனுக்கு சால்ஜாப்பு சொல்லக்கூடாது என்று முடிவுசெய்து வாரும் பிள்ளாய் பட்டி, நான் சொன்ன காரியத்தை நீ செய்துமுடித்துவிட்டபடியால் நீ கேட்ட இரண்டாயிரம் வருடம் ஆயுளைத் தந்தோம், சுகமாக வாழ்வாயாக என்று ஆசீர்வதித்தாள். கேட்ட வரத்தைப் பெற்றுக்கொண்ட பட்டி அம்மனைப் பார்த்து கெக்கெக்கென பலமாகச் சிரித்தான். அம்மனுக்கு இவன் சிரித்த்தைப்பார்த்ததும் கோபம் வந்து யாது பிள்ளாய் நீஇப்போது சிரித்த காரணம் யாது, உடனே சொல்லக்கடவாய் என்று கேட்கபட்டியும் கூறலுற்றான். அம்மா தாயே இதோ இருக்கும் விக்கிரமாதித்தன்தேவலோகத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும், மற்றுமுள்ள முனிசிரேஷ்டர்களும் கூடி ஆசீர்வதித்து ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் வரம்கொடுத்தனுப்பி இன்னும் ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் என்கையால் வெட்டப்பட்டு அவன் தலை உன் முன்னால் இருக்கிறது. அப்பேர்க்கொத்த வரத்திற்கே இந்த கதியென்றால் நீ கொடுத்த வரம்எத்தனை நாளைக்கு நிற்கப்போகிறதோ என்று நினைத்துச் சிரித்தேன்என்றான்.

அம்மனும் அவன் வார்த்தைச் சாதுர்யத்திற்கு மெச்சி, வாரும் பிள்ளாய் பட்டி, நீ அப்படி சந்தேகப்படவேண்டியதில்லை, என்னுடைய வரம் என்றென்றும்நிற்கும், நீ பயப்படவேண்டியதில்லை, ஆனாலும் உன்னுடைய வாக்குச்சாதுர்யத்தை மெச்சி, விக்கிரமாதித்தனையும் உயிரூட்டுகிறோம் என்று கூறி, இதோ தீர்த்தமும் பிரம்பும் தருகிறோம், நீ இந்த தலையை எடுத்துக்கொண்டுபோய் விக்கிரமாதித்தன் உடம்பில் வைத்து தீர்த்தம் தெளித்து பிரம்பால்தட்டியெழுப்புவாயாகில் அவன் உயிருடன் எழுந்திருப்பான் என்று சொல்லிதீர்த்தமும் பிரம்பும் கொடுத்தனுப்பினாள். பட்டியும் அம்மனைப் பலவாறாகப்புகழ்ந்து தீர்த்த த்தையும் பிரம்பையும் வாங்கிக்கொண்டு, விக்கிரமாதித்தன்தலையையும் எடுத்துக்கொண்டு விக்கிரமாதித்தன் உடல் இருக்குமிடத்திற்குவந்து தலையை உடலுடன் ஒட்டி வைத்து தீர்த்தத்தை தெளித்து பிரம்பால்தட்டி எழுப்பினான்.

விக்கிரமாதித்தனும் தூக்கத்திலிருந்து எழுபவன் போல் எழுந்திருந்து, வாரும்பிள்ளாய் பட்டி, என் தலையை அவசரமாக இரவல் வாங்கிக்கொண்டு போனகாரியம் என்னவென்று கேட்க, பட்டியும் நடந்த விருத்தாந்தங்களைச்சொல்லி தான் அம்மனிடம் இரண்டாயிரம் ஆண்டுகள் வரம் வாங்கி வந்ததுவரை சொன்னான். அதைக்கேட்ட விக்கிரமாதித்தன் நல்ல காரியம்செய்தாய் பட்டி, ஆனால் ஒன்று, எனக்கு தேவேந்திரன் கொடுத்த ஆயுள்ஆயிரம் வருடம்தானே, நீ இப்போது அம்மனிடம் பெற்றுள்ள ஆயுள்இரண்டாயிரம் வருடம் ஆயிற்றே, இதற்கு என்ன செய்வது என்று கேட்க, பட்டி சொன்னான், தேவரீர் இந்திரனிடம் பெற்ற வரம், ஆயிரம் வருடங்கள்ஏறின சிம்மாசனம் இறங்காமல் ஆட்சி புரிவதற்கல்லவா, நாம் ஒன்றுசெய்வோம், ஆறு மாதம் அரசாட்சி செய்த பிறகு ஆறு மாதம் காட்டுக்குச்சென்று வனவாசம் செய்வோம், அப்போது தேவரீருடைய ஆயளும்இரண்டாயிரம் வருடங்கள் ஆகிவிடும் என்று சொல்ல விக்கிரமாதித்தனும்பட்டியின் புத்தி சாதுர்யத்தை மெச்சி, ஆகா, பட்டி உன்னுடைய புத்தியேபுத்தியென்று சொல்லி அவனைப்பாராட்டி, சரி, இரவு வெகு நேரம்ஆகிவிட்டது, நீ சென்று நித்திரை கொள் என்று அவனை வழியனுப்பிவிட்டுவிக்கிரமாதித்தனும் நித்திரை போனான்.

விக்கிரமாதித்தன் தலையை பட்டி இரவல் வாங்கின கதை1

விக்கிரமாதித்தனும் பட்டியும் உஜ்ஜனிமாகாளிப்பட்டினத்தில் தங்கள் தேசத்தை நிர்மாணித்து அரசாண்டு வரும் வேளையில் நாடு மிகுந்த சுபிட்சமாயும் நாட்டு மக்கள் எல்லா வளங்களும் பெற்று சந்தோஷத்துடனும் இருந்தார்கள். நாட்டில் மாதம் மும்மாரி பெய்தது. புலியும் பசுவும் ஒரே துறையில் நீர் அருந்தின. கீரியும் பாம்பும் ஓடிப்பிடித்து விளையாடின. விக்கிரமாதித்தனும் நீதிநெறி தவறாமல் அரசாண்டு வந்தான். அவனுடைய புகழ் நாடு நகரமெங்கும் பிரசித்தி பெற்று விளங்கியது.

இவ்வாறிருக்கும் நாளில் தேவலோகத்தில் ஒரு பிரச்னை உருவாயிற்று. தேவலோகத்தில் ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை என்ற நான்கு நடன மங்கையர் உண்டு என்பது எல்லோரும் அறிந்ததே. தமிழ் சினிமா நடிகைகள் என்று குழம்பவேண்டாம், இவர்கள் வேறு. இதில் ரம்பைக்கும் ஊர்வசிக்கும் தொழில் போட்டி வந்துவிட்டது. தங்களில் யாருடைய நடனம் சிறந்தது என்பதில் வாக்குவாதம் தொடங்கி பெரிய சண்டையாகி தேவேந்திரனிடம் பஞ்சாயத்திற்குப் போயிற்று. அவனும் ஒரு நாள் தேவசபையில் இவர்கள் இருவரையும் நடனமாடச்சொல்லி கவனமாகப் பார்த்தான். அவனால் இவர்களின் ஆட்டத்தில் உயர்வு தாழ்வு கண்டுபிடிக்க முடியவில்லை. தேவசபையில் இருந்த எல்லோரையும் கேட்டான். ஒருவராலும் இவர்கள் ஆட்டத்தில் வேறுபாடு காண முடியவில்லை. சரி, அப்புறமாக தீர்ப்பு கூறுகிறேன் என்று அவர்களை அனுப்பிவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தான். 

அப்போது சர்வலோக சஞ்சாரியான நாரதர் அங்கே வந்தார். தேவேந்திரன் நாரதரைப் பார்த்து வாரும் நாரதரே, இங்கு நடந்ததைப்பார்த்தீர்கள் அல்லவா? இவர்கள் நடனத்தில் வெற்றி தோல்வியைச்சொல்ல என்னால் முடியவில்லை. நீர்தான் திரிலோக சஞ்சாரியாயிற்றே, இந்தப்பிரச்னைக்கு தீர்வு சொல்லக்கூடியவர்கள் எங்காவது இருக்கிறார்களா என்று கேட்க, நாரதர் சொன்னார், பூலோகத்திலே உஜ்ஜனிமாகாளிப்பட்டினம் என்ற ஊரிலே விக்கிரமாதித்தன் என்று ஒரு ராஜா இருக்கிறான். அவன் சகல கலைக்ஞானமும், வீரதீரப் பராக்கிரமும், அதிவிவேகமும் உடையவனாய், பூலோக முழுவதும் பிரக்யாதி பெற்று விளங்குகிறான். அவனை நீர் நமது தேவலோகத் தேரை அனுப்பி வரவழைத்தீராகில் அவன் இந்தப்பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டு பிடித்து சொல்லுவான் என்றார்.

உடனே தேவேந்திரனும் தேவலோக சாரதி மாதலியைக் கூப்பிட்டு உடனே பூலோகத்தில் உஜ்ஜனிமாகாளிபுரத்திற்கு போய் அங்கு அரசாண்டு கொண்டிருக்கும் விக்கிரமாதித்த ராஜாவை நாம் அழைத்து வரச் சொன்னதாய்க் கூறி அவனை நம் ரதத்தில் ஏற்றிக்கொண்டு சீக்கிரம் வருவாயாக என்று உத்திரவிட்டான். அவ்வாறே மாதலியும் தேவலோக ரதத்தில் குதிரைகளைப் பூட்டி பூலோகத்தில் உஜ்ஜனிமாகாளிபுரத்திற்கு வந்தான். அந்தக்குதிரைகள் எப்படிப்பட்டவை என்றால் தேரில் பூட்டிவிட்டால் வாயு வேகம் மனோ வேகம் என்று சொல்லக்கூடிய வேகத்தில் செல்லக்கூடியவை.

மாதலி விக்கிரமாதித்தன் அரச சபையில் பிரவேசித்து ராஜாவிற்கு வந்தனம் சொல்லி தன்னை இன்னாரென்று அறிமுகப்படுத்திக் கொண்டான். விக்கிரமாதித்தனும் அவனுக்கு முகமன் கூறி வரவேற்று யாது பிள்ளாய், இவ்வளவு தூரம் வந்த காரணம் என்ன என்று கேட்க, மாதலி, மகாராஜா, தேவேந்திரன் யாது காரணமாகவோ தங்களை அழைத்து வரச்சொன்னார் என்று கூறினான். விக்கிரமாதித்தன் பட்டியை நோக்க, பட்டியும் ராஜாவின் குறிப்புணர்ந்து மகாராஜா, எல்லாம் நல்ல காரியமாய் முடியும், சென்று வாருங்கள் என்று கூற, விக்கிரமாதித்தனும் சர்வாபரண, ஆயுதலரங்- கிருதனாய் புறப்பட்டு மாதலியைப்பார்த்து, போகலாமா என்று கேட்டான். மாதலியும் தேரை அரண்மனை வாசலில் கொண்டு வந்து தயாராக நிறுத்தினான். விக்கிரமாதித்தனும் சபையில் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு அரண்மனை வாசலுக்கு வந்து தேரில் ஏறுவதற்காக ஒரு கையினால் தேர்க்காலைப்பிடித்துக்கொண்டு ஒரு காலைத்தூக்கி தேர்த்தட்டில் வைக்கும்போது மாதலி குதிரைகளின் லகானைச்சுண்ட, அந்தக் குதிரைகள் வாயுவேகம் மனோவேகமாக நூறு யோஜனை தூரம் சென்றன. அது ஏனென்றால், மாதலிக்கு மனதிற்குள் ஒரு மானுடனை நம் தேரில் ஏற்றிச்செல்வதா என்ற ஆணவம்.

விக்கிரமாதித்தன் தேர்க்காலை ஒரு கையில் பிடித்து ஒரு கால் பெருவிரல் தேர்த்தட்டில் இருக்க, பிடித்த பிடியும், வைத்த காலும் அப்படியே இருக்க தேரில் ஒட்டிக்கொண்ட அட்டை போல் 
அசராமல் வந்து கொண்டிருந்தான்.இதைப்பார்த்த மாதலி, ஆஹா, நாம் என்னவோ இவன் சாதாரண மானுடன் என்று எண்ணினோம், ஆனால் இவன் மிகுந்த வீரதீரப்பராக்கிரமசாலியாய் இருக்கிறானே, இவனை நாம் சரியானபடி தேவலோகம் கொண்டுபோய் சேர்க்காவிடில் நமக்கு வேலை போய்விடும் என்று யோசித்து தேரை நிறுத்தி, கீழே இறங்கி விக்கிரமாதித்தனை வணங்கி, மகாராஜா, நான் தங்களை சாதாரணமாக நினைத்து விட்டேன், என்னை மன்னிக்கவேண்டும் என்று கூறி, கைலாகு கொடுத்து விக்கிரமாதித்தனை தேரில் ஏற்றி ஆசனத்தில் உட்காரவைத்து, தேரை தேவேந்திரன் சபை வாசலில் கொண்டு போய் நிறுத்தினான். விக்கிரமாதித்தன் வருவதைப்பார்த்த தேவேந்திரன் முதலான தேவர்கள் சபையின் வாசலுக்கே வந்து ராஜனை வரவேற்று சபைக்குள் அழைத்துப்போய் தனக்கருகில் ஓர் ஆசனம் போடச்செய்து, தேவேந்திரனும், விக்கிரமாதித்தனும் உட்கார்ந்துகொண்டு பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டார்கள்.

அப்போது விக்கிரமாதித்தனும் தேவேந்தரனை நோக்கி, தேவேந்திரா, என்னை இங்கு அவசரமாய் அழைத்து வரச்சொன்ன காரணம் என்னவெனக்கேட்க, தேவேந்திரன் சொன்னான், அகோ வாரும் விக்கிரமாதித்தா, நமது இந்திர சபையில் வழமையாக நடனமாடும் நால்வரில் ரம்பை, ஊர்வசி ஆகியோருக்கிடையில் தங்கள் தங்கள் திறமையில் கர்வமுண்டாகி நான்தான் சிறந்தவள் என்று இருவரும் கூறிக்கொண்டு, தங்களில் யார் சிறந்தவள் என்று தீர்மானித்துக் கூறும்படியாய் என்னிடத்தில் வந்தார்கள். நானும் அவர்களது நடனத்தைப்பார்த்து யாருடைய நடனம் சிறந்தது என்று கூற முடியவில்லை. அப்போது நாரதர் உன்னுடைய வீரப்பிரதாபங்களையும், சகல கலைக்ஞானத்தைப்பற்றியும், நீதி தவறாத ஆட்சியைப்பற்றியும் கூறி, இந்த நடனமாதர்களின் சிறப்பை உன்னால்தான் கணித்துச்சொல்ல முடியும் என்று கூறியதால் அந்தக்காரியத்திற்காக உன்னை இங்கு வரவழைத்தோம் என்று கூறினான். விக்கிரமாதித்தனும் சரி, நாளைக்காலையில் அவர்கள் இருவரையும் இங்கு சபையில் நடனமாடச்சொல்லுங்கள், நான் எனக்குத்தெரிந்த வரையில் அவர்களின் ஆட்ட நுட்பத்தை அறிந்து சொல்கிறேன் என்று கூறினான்.

பிறகு இந்திரன் சில சேடிப்பெண்களைக் கூப்பிட்டு விக்கிரமாதித்த மகாராஜாவை அழைத்துப்போய் நமது அரண்மனையில் தங்க வைத்து வேண்டிய உபசாரங்களைச் செய்யுமாறு பணித்தான். அவ்வாறே பணிப்பெண்களும் விக்கிரமாதித்தனை அழைத்துப்போய் போஜனம் செய்வித்து அம்சதூளிமா மஞ்சத்தை தயார் செய்து அவனை சயனம் கொள்ளும்படி கேட்டுக்கொண்டு ஒரு புறமாய்ப் போய் இருந்தார்கள். விக்கிரமாதித்தனும் சிறிது நேரம் யோசனையாய் இருந்துவிட்டு நித்திரை போனான்.

நாமும் நித்திரை செய்து பிறகு மீதியைப் பார்ப்போமா?

Saturday, May 30, 2015

பழந்தமிழரின் வானியல் கொள்கைகள்

உலக நாடுகளில் வசதி படைத்தவைகள் எல்லாம் நாம் வாழும் பூமிக்குப் புறத்தே என்ன இருக்கின்றது என்று அறியத் துடிக்கின்றன. அதற்காக ஆய்வு அமைப்புகளை ஏற்படுத்தி பெரும் பொருளைச் செலவிட்டும் வருகின்றன. விண்கலங்களை நிலவுக்கும் செவ்வாய்க்கும் ஏன் சூரியனுக்கும் கூட ஏவி வேவுபார்த்து வருகின்றன. தம்முள்ளே நிலவும் இராணுவப் பகைமைகளை மறந்து கூட்டு முயற்சிகள் மூலமாவது ஏதாவது பலன் கிடைக்குமா என்று பணிந்து போகின்றன விண்வெளி ஆய்வு மையங்கள்! நாடுகள் தோறும் விஞ்ஞானப் பரீட்சைகளை நடத்தி குட்டி விஞ்ஞானிகளை இனம் கண்டு கொள்கின்றன.
எனினும் இவர்களை விட வானியலைப் பற்றி அதிகமாகவே தெரிந்து வைத்திருந்தனர் பண்டைக்காலத் தமிழர்கள். அப்படித் தெரிந்து வைத்திருந்தவர்கள் கணியன் என்று அழைக்கப்பட்டனர். கணிக்கத் தெரிந்தவர்கள் கணியனாக இருக்கலாம். சங்க இலக்கியங்களும் தேவாரங்களும் இராமாயணமும் தனிப்பாடல்களும் அதற்குச் சான்றாக இன்றும் விளங்குகின்றன.

சங்கத் தமிழர்கள் வான் கோள்களில் தாமே ஒளிவிடக் கூடியவற்றையும் சூரியனிடம் இருந்து கடன்பெற்று ஒளிவிடுவனவற்றையும் கண்டறிந்து நாண் மீன்கள் கோள் மீன்கள் என்று பெயர் சூட்டி அழைத்தனர்.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோள்மீன் போல

என்று பட்டினப்பாலை என்ற சங்கநூல் இதனை அழகாகப் பேசும். அது போல வெள்ளி எனும் கோள் வடக்கு திசையில் நின்றால் மழை உண்டு என்றும் தெற்கு ஏகினால் மழை இன்மையும் ஏற்படும் என்றும் பதிற்றுப் பத்தும் சொல்கின்றது. அது போல சூரியனிலிருந்து சிதறும் துகள்களே எரி கற்கள் என்பதும் அவர்களுக்கத் தெரிந்து இருந்திருக்கிறது. இதனை வெங்கதிர் கனலி துற்றும் என்றது புறநானூறு. அது போல கோள்கள் சுற்றும் பாதைகள் பற்றியும் அவர்கள் அறிந்து இருந்தனர்.

பௌர்ணமி நாளில் சூரியனும் சந்திரனும் எதிர் எதிரே நிற்கும். ஆனால் நிலவு தோன்றும் கணத்திலேயே சூரியன் மறைந்து விடும் என்ற உண்மையையும் அவர்கள் பாடியிருக்கிறார்கள்.

உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
புன்கண் மாலை மலைமறைந்து ஆங்கு

இதிலே வியப்பு என்ன வென்றால் நிலவு தோன்றும் பொது சூரியன் மறையும் என்றால் அவற்றில் ஒன்றுதான் கண்ணுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிஎயன்றால் ஒன்றுக்கு ஒன்று எதிராக நின்ற உண்மை எப்படி அறியப்பட்டது என்பதே!

சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சு10ரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை.  இதையெல்லாம் நேரே போய்ப் பாhத்து ஆராய்ந்து அறிந்த வந்த வானியல் அறிஞர்களும் எம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது அவன் பாடிவைத்த பாடல். இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆயு;வு செய்யப் போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பாhத்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு தான் விடை சொல்கின்றது.

இன்று உலகம் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறது? அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. இதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப

இதன் பொருளைப் பாருங்கள்! விசும்பு என்றால் ஆகாயம் வலவன் என்றால் சாரதி ஏவாத என்றால் இயக்காத வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட றைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டிதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும். எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏற்றிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்; என்று திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்தால் கெலியாக இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும். உண்மைதான்! ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்வார்.

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய
சிறியவாகப் பெரியோன் தெரியின்

பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக மின்னுகின்றன.

மாணிக்கவாசகர் எந்தத் தொலைநோக்கு கருவியைக் கொண்டு இதைப் பார்த்தார். ராடாரின் உபயோகம் அறியப்பட முன்னரே தெரிவிக்கப்பட்ட செய்தியல்லவா இது. அதுவும் பூமி உட்பட எல்லாக் கிரகமுமே உருண்டை என்று ஒரு மந்திரியான மணிவாசகர் சொல்லி விட்டார். அவை ஒன்றை ஆதாரமாக் கொண்டுள்ளன என்பது ஈர்ப்பு விசையைத்தான் சுட்டுகிறது. அது மட்டுமா நூறு கோடிக்கு மேலே விண்வெளியில் கோள்கள் சிதறிக் கிடக்கின்றன என்று அவர் சொல்லி எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின் அது உண்மைதான் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.

இதைக் கணிக்கக் கணக்குத் தெரிய வேண்டும்! பைதகரஸ் என்ற கணித மேதை மூலை விட்டத்தை அளப்பதற்கு ஒரு விதி சொன்னார். ஒரு செங்கோண முக்கோணத்தின் செம்பக்கத்தின் வர்க்கமானது மற்ற இருபக்கங்களின் வர்க்கத்தின் கூட்டுத்தொகைக்குச் சமமானதாக இருக்கும் என்பது அவரின் கண்டுபிடிப்பு. இதை அவர் பிறப்பதற்கு முன்னரே ஒரு தனிப்பாடல் அதுவும் தமிழ்ப்பாடல் இப்படிச் சொல்கிறது


ஓடிய நீளம் தன்னை
ஓரெட்டுக் கூறது ஆக்கி
கூறதில் ஒன்றைத் தள்ளிக்
குன்றத்தில் பாதி சேர்த்தால்
நீடிய கரணம் தானே!

ஆனால் அந்தத் தமிழனின் கூற்று எடுபடவில்லை அல்லது அறியப்படவில்லை. பைதகரஸ் மடடுமே வெளிச்சத்துக்கு வந்தார்.

இனித் திருக்குறளிலே ஒரு வானியல் விடயம் பேசப்படுகின்றது. இந்த உலகத்திலே வாழ்வாங்கு வாழ்பவர்கள் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்கள்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்  வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

இது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. வானுலகம் என்று ஒன்று இருக்கின்றது என்பது பலரின் நம்பிக்கைக்கு உரிய விடயம். அது உலகமாகவோ அல்லது கிரகமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நான் எனது என்ற செருக்கை விட்டவர்கள் வானுக்கும் உயர்ந்த உலகம் போவார்கள் என்கிறாரே திருவள்ளுவர். அது எந்த உலகம்.

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கும்
உயர்ந்த உலகம் புகும்.

வான் உலகத்துக்கும் உயர்ந்த உலகம் என்றால் எப்படிப் பொருள் கொள்வது? பூமியில் இருந்து அடுத்த கிரகம் தொலைவானது. அதிலிருந்தும் தொலைவான உலகம் என்று தானே பொருள். வள்ளுவருக்கும் வானியல் அறிவு இருந்திருக்கிறது. அதற்கான தூர வேறுபாடும் தெரிந்திருக்கிறது இஸ்ரோவுக்கும் முதல்!

இதையே இராமாயணம் பாடிய கம்பர் வாலியின் இறப்புப் பற்றிப் பேசும் போது வாலி இறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான் என்று குறிப்பிடுவார்.

தன்னடி ஆழ்த லோடும் தாமரைத் தடங் கணானும்
பொன்னுடை வாளை நீட்டிப் நீயிது பொறுத்தி என்றான்
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி
அந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்.


அது போல வேறு கிரகத்தவர்கள் வந்து சென்றது பற்றிச் சிலப்பதிகாரத்திலும் ஒரு குறிப்பு உண்டு.

பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள்
காதல் கொழுநனைக் காட்டி அவளொடும் எம்
கட்புலம் காண விட்புலம் போயது
இறும்பூது போலும்

ஒரு மார்பை இழந்தவளாக வேங்கை மர நிழலிலே நின்ற பத்தினி ஒருத்திக்கு தேவ அரசனுக்கு வெண்டிய சிலர் வந்து அவள் காதல் கணவனையும் காட்டி அவளையும் அழைத்துக் கொண்டு எங்கள் கண்காண விண்ணிலே போனார்கள். இது மிகவும் ஆச்சரியமானது.
இது இளங்கோவடிகளுக்கு மலைக்குறவர் சொன்ன செய்தி! இதை இலக்கியம் என்று நோக்காது அறிவியல் உணர்வோடு பாhத்தால் வேற்றுக் கிரகத்தவர்களால் ஒரு மானுடப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாள். இது பறக்கும் தட்டு விவகாரத்துடன் சம்மந்தப்பட்டதாகவே தெரிகின்றது.

இவ்வாறாகப் பரந்து பட்ட வானியல் அறிவு நிரம்ப இருந்தும் தமிழர்கள் பிரகாசிக்கவில்லை! பிரகாசிக்க வேண்டும் என்று அக்கறைப் படவுமில்லை! ஆனாலும் நாசா போன்ற அமைப்புக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக தமது விண்வெளி ஓடங்களில் தமிழையும் எழுதி அனுப்புகிறார்கள். அதன் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைத்தாலும் அதன் அறுவடையில் சங்கத் தமிழரின் பங்கும். இருக்கத்தான் செய்யும்.
அது முழுத் தமிழ் இனத்துக்கும் பெருமை தேடித் தரவும் கூடும். அப்போது சங்க இலக்கியங்கள் விஞ்ஞானிகளால் தேடிப் படிக்கப்படும்.




Saturday, May 2, 2015

‘மஹா ம்ருத்யுஞ்ஜய’ மந்திரம்



‘ஓம் த்ரையம்பகம் யஜாமஹே

ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்!

உர்வாருக மிவ பந்தனான்

ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்!!’

இம்மந்திரத்தை தினமும் 108 அல்லது 48 என்ற எண்ணிக்கையில் கூறி வந்தால், ஆரோக்கியமான வாழ்வை நிச்சயமாக அடையலாம். ஜபத்தின் எண்ணிக்கைக்கு ருத்ராட்ச மாலையைப் பயன்படுத்த வேண்டும். இதிலும் வழக்கம் போல அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும்.

இம்மந்திரத்தை காலை, மாலை உச்சாடணம் செய்து வருவது விரைவான பலன்களை அளிக்கவல்லது. இந்த மந்திரத்தை சுத்தத் திருநீற்றில் 48 முறை பிரயோகம் செய்து அணிந்து கொள்வது மிகவும் விசேஷமானதாகும். உடலின் எந்தப் பகுதி பாதிப்படைந்திருக்கிறதோ அந்தப் பகுதியில் மந்திர உச்சாடணம் செய்த விபூதியைப் பூசலாம்.

அத்தகைய விபூதி சர்வ ரோக நிவாரணியாகச் செயல்படுவதால் உடல் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பூசலாம்.

சிறிது விபூதியை வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மேற்கண்ட மந்திரத்தை குறிப்பிட்ட அளவு ஜபம் செய்து விட்டு அந்தத் திருநீற்றினை வெள்ளி அல்லது செம்பு டம்ளரில் வைக்கப்பட்ட சுத்த ஜலத்தில் போட்டு அதை அருந்தி விடலாம். இதற்கு மிக நல்ல பலன் கிடைக்கும். ஆனால், திருநீறு சுத்தமான பசுஞ்சாணத்தில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

Sunday, November 30, 2014

புருஸ் லீ

தன் அப்பாவை போலவே திரையில் நடித்துக்கொண்டு இருந்தான் இளவயதிலேயே அந்த
சிறுவன்.சீக்கிரமே குங் பூ கற்றுத்தேறிய அவன் தெருக்களில் மற்ற பிள்ளைகளோடும் ,போலீஸ் உடனும் தொடர்ந்து வம்புக்களில் ஈடுபடுவதை அவர் தந்தை கவலையோடு பார்த்தார்.அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். வயிற்றுப்பிழைப்புக்கு அங்கே குங் பூ சொல்லித்தந்து கொண்டிருந்தார் லீ

அப்பொழுது வோங் ஜாக்மான் எனும் அனுபவம் மிக்க குங்பூ வீரர் "ஆசியர் அல்லாதவர்களுக்கு ஏன் குங் பூ சொல்லித்தருகிறாய்" என்று கேட்க ,"கலை எல்லாருக்கும் பொதுவானது தானே " என அந்த இளைஞன் திருப்பிக்கேட்டார். "அப்படியில்லை ! வலியவன் சொல்வதை தானே உலகம் கேட்கும் ? நாமிருவரும் சண்டை போடுவோம். நான் வென்றால் நீ குங் பூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் ; நீ வென்றால் நான் குங் பூ என்கிற பெயரைக்கூட இனிமேல் உச்சரிக்க மாட்டேன் ! என்னோடு சண்டையிடு என்னோடு சண்டையிடு " என்றார் அவர்.





இளைஞன் இணங்கி சண்டையிட்டார். அனல் பறந்த சண்டையில் வேகம் மிகுந்த இவர் வென்றுகாட்டினார். அவரை வென்றதும் முன்னமே சொன்னபடி வோங் ஜாக்மான் குங்
பூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொண்டார் .ஆனால்,அது எண்ணற்ற கேள்விகளை அந்தப் பையனின் மனதில் விளைத்தது. ஹாங்காங்கில் மிகப்பெரும் குத்துசண்டை வீரனாக இருந்து நொடியில் பலரை நாக்கவுட் செய்த தான் அதிக நேரம் எடுத்து ஜாக்மான் உடன் மோதியது அவரின் பாரம்பரிய குங்பூவின் மீதான ஈர்ப்பை மங்கசெயதது .

தானே இன்னும் பல மாற்றங்களை உருவாக்கினார்.அவர் படித்த தத்துவம் அவருக்கு அதீத அமைதியை தந்தது,எவ்வளவு பெரிய சண்டையையும் எளிமையாக வென்றார். "நீர் போல அமைதியாக ஓடிக்கொண்டு ,சலனமற்று இருக்கிறேன் ,மூங்கிலை போல வளைந்து கொள்கிறேன்.ஆழ்ந்த அமைதி என்னை எப்பொழுதும் வழி நடத்துகிறது" என்ற அவர் டிவி ஷோக்களில் கலக்கிய பின் சீட்டின் முனைக்கே கொண்டுசெல்லும் சண்டைகாட்சிகள் மூலம் ஹாலிவுட்டில் கலக்கினார்.

புரூஸ் லீ ஒரு கவிஞர் என்பதை தாண்டி ஒரு தீர்க்கமான தத்துவ ஞானம் மிக்கவராக இருந்தார் என்பதே சரி. "எதிரி என்று ஒருவன் இல்லவே இல்லையே ; எல்லாமே பிம்பங்கள்,பிரதிபிம்பங்கள். அவற்றை நொறுக்கிவிட்டால் போதும். எதிரிகள் என்று யாருமில்லை என உணர்வீர்கள் !" என்றார் அவர். ஜென் அவரைத் தொடர்ந்து செலுத்தியது. பேரமைதி அவரிடம் குடிகொண்டு இருந்தது,ஒரு முறை சீன இளைஞன் ஒருவன் ஹோட்டலில் வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தான், லீ அமைதியாகவே இருந்தார் "ஏன் இப்படி ?" என்று கேட்ட பொழுது ,"நான் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். அதை மற்றவர்கள் திருட விடமாட்டேன் !" என்று மட்டும் சொன்னார். வீரம் என்பது
சண்டை போடுவதில் மட்டுமில்லை ; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என
உணர்ந்து நடப்பதிலும் இருக்கிறது.

நிறைய ஜென் கதைகள் சொல்லும் லீக்கு மிகவும் பிடித்த கதை ஒன்று உண்டு. கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி வந்த இளைஞனிடம் நிரம்பிய தேநீர் கோப்பையை மீண்டும் ஊற்றி நிறைக்க முயல்கிற செயலை செய்து "வெறுமையாக இருக்கிற பொழுது தான்,அறிதலைக்கடந்து உணர்தலை நோக்கி நகர்கிற பொழுது தான் நீ ஜென் ஆகிறாய் !" என்கிற ஆழ்ந்த தத்துவம் இருப்பதை உணர்த்திய அந்தக்கதை மிகவும் பிடிக்கும் . மனம் விரும்புவதை உடல் செய்ய இந்த அறிதல் முக்கியம் என்பார் புரூஸ் லீ. அதுவே அவரின் அசரவைக்கும் சண்டைக்காட்சிகளுக்கு அடிப்படை.

நம்பினால் நம்புங்கள் புருஸ் லீக்கு உடலில் குறைபாடு ஒன்றிருந்தது. அவரின் வலது கால் இடது காலை விட நான்கு சென்டிமீட்டர் உயரம் குறைவு. ஆனால்,உங்கள் தலையில் ஒரு நாணயத்தை வைத்தால் அதை உங்கள் தலைமுடியைக்கூட அசைக்காமல் அவரால் எடுக்க முடியும். கேட்ட பொழுது ,"நாணயம் மட்டும் தான் என்னுடைய கண்களில் தெரியும். அதில் மூழ்கிப்போவது தானே குங்பூ !" என்றார்

அவரின் வேகம் எந்தளவுக்கு இருந்தது என்றால் ஒரு காட்சிக்கு நொடிக்கு இருபத்தி நான்கு பிரேம்கள் அவரின் வேகத்தை பிடிக்க போதாமல் கூடுதலாக பத்து பிரேம்கள் தேவைப்பட்டன ! இருந்தாலும் அதை ஆழ்ந்த அமைதியோடு செய்கிற சமநிலை புரூஸ் லீக்கு இருந்தது. அவர் பட்டப்படிப்பு படித்தது
தத்துவத்தில் என்பது அவரின் ஆழ்ந்த தேடலை உணர்த்தும் . முப்பத்தி மூன்று வயதில் இறந்து போனாலும் இன்னமும் ஆக்ஷனில் தொட முடியாத உயரத்தில் இருக்கும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள அத்துணை பாடங்கள்.

அவரின் ஒரு கவிதை தான் அவரின் வாழ்வானது :

மேற்கே காற்றை
எல்லாம் தங்கமயமாக்கி
கதிரவன் கரடுமுரடான மலையில் கரைகிறான்

கரைந்துருகும் பனித்துளிக்கு
வெகுதூரம் தள்ளி
மலையுச்சியின் மீது
தங்க டிராகன்
தனித்து தன் கனவுகள்
வெளிச்ச மேற்கில் தேய,மறைய
சலனமில்லாமல் நிற்கிறது !

ஏழை மனிதனின் தாஜ்மஹால்!

தாஜ்மஹால்னா, அது ஆக்ராவில் உள்ளது என்றுதானே சொல்வீர்கள். அது, ஷாஜஹான் தன் காதல் மனைவிக்குக் கட்டிய நினைவுச் சின்னம். ஆனால், மஹாராஷ்ட்ரா மாநிலம், ஔரங்காபாத்தில் இருக்கும் தாஜ்மஹாலோ, மன்னர் ஆஜம்ஷா, தன் அம்மாவுக்குக் கட்டிய நினைவுச் சின்னம்.

மொகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் மகன்தான் இந்த ஆஜம் ஷா. 1651 முதல் 1661 வரை மன்னராக இருந்த காலத்தில், தாத்தா ஷாஜஹான் மும்தாஜுக்குக் கட்டிய தாஜ்மஹாலைப் பார்த்து ரொம்பவும் அசந்துபோய், அதேபோல் அச்சு அசலாக, தன்அம்மாவுக்குக் கட்ட ஆசைப்பட்டார். அந்தக் கல்லறைக்கு பீபீ கா மக்பாரா (Bibi Ka Maqbara) என்று பெயர் சூட்டினார். (இதற்கு, 'லேடி கல்லறை' என்று அர்த்தம்).

தாஜ்மஹாலைப் போலவே இருக்கும் என்று எண்ணிய ஆஜம் ஷாவிற்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. திறமையான தொழிலாளர்கள் அமையாததால், தாத்தாவின் தாஜ்மஹால் போல அழகாக அமையவில்லை. பளபளப்பாக தோன்றவில்லை. காரணம், தாஜ்மஹாலுக்கு உபயோகித்த தூய வெள்ளை சலவைக் கற்களை, இந்த பீபீ கா மக்பாராவிற்கு உபயோகிக்கவில்லை.
மக்பாரா கட்ட, அப்போது ஆன செலவு, 7,00,000 ரூபாய். ஆனால், தாஜ்மஹால் கட்ட ஆன செலவு, 32 மில்லியன். அதனால்தான் இந்த மக்பராவை, 'ஏழை மனிதனின் தாஜ்' என்று அடக்கமாகக் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால்,தாஜ்மஹாலுக்கு இணையாக சொல்லமுடியாவிட்டாலும் கூட இந்த நினைவுச் சின்னத்தின் உள்ளே இருக்கும் அழகிய வடிவங்கள், பார்வையாளர்களை மிகவும் கவர்கிறது. அங்கு அமைந்துள்ள தோட்டம், மொகலாயர்களை நினைவூட்டும் விதமாக உள்ளது.

மேடை நாடகம் வரலாறு

ஆடல் பாடல் இவைகளே பன்னெடுங்காலமாக நாடகம் என அறியப்பட்டு வந்திருக்கின்றன. மனித வாழ்க்கையில் ஆடலும், பாடலும் சிறப்பான இடத்தை வகிக்கின்றன. அசைவுகளும், ஓசைகளும் காலம் காலமாக மனித மனத்தை அலைக்கழித்துக் கொண்டிருகின்றன. தன்னுடைய மனத்தின் நுண்ணிய சலனங்களையும், அழகுணர்வுகளையும் இவைகளின் மூலமாகவே மனிதன் அடையாளம் கண்டு வந்திருக்கிறான். தன்னுடைய சுதந்திரத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி வந்திருக்கிறான். ஒரு வளர்ச்சிப் போக்கில் ஆடல், பாடலுடன் கதையைச் சொல்வது என்கிற நிலையில் நாடகம் தோன்றுகிறது. குழுச்சமூகங்கள் நிலவிவந்த ஒரு காலகட்டத்தில் இவை குழுச் செயல்பாடாகவும், குழுவின் அடையாளத்தைப் பேணவும், ஒரு கலாச்சாரப் பகிர்தலுக்கான தளமாகவும் பயன்பட்டிருக்கின்றன.

கிராமப் புறங்களில் மதச்சடங்குகளுடன் இணைந்த சில அதீத நடவடிக்கைகளின் பின்னணியைப் பார்க்கும்போது ஒடுக்கப்பட்ட மனம் தளைகளிலிருந்து விடுதலை பெறவும், பங்கு பெறுபவர்களும் பார்வையாளர்களும் வெளி உலகைக் கடந்து செல்வதற்கான முகாந்திரத்தையும், சுதந்திரத்தையும் இங்குப் பெறுவதையும் பார்க்க முடியும். தமிழ்ச் சமூகம் இதற்கு விதிவிலக்கல்ல. தொலைக்காட்சி, காணொளி, திரைப்படம் என்று பலவகையான தாக்கங்கள் மிகுந்த இன்றைய காலகட்டத்திலும் சில கிராமங்களில் கூத்துகள் நடைபெற்றுக் கொண்டிக்கின்றன.. மதச் சடங்குகளிலும், திருவிழாக்களிலும் கூத்துக்களே இடம்பெறுகின்றன. வருடம் தோறும் அண்ணன்மார் கதை கொங்குநாட்டுக் கிராமப்புறங்களில் நிகழ்த்தப்படும்போது மக்கள் பாறைகளின் மீது நின்று கொண்டு பார்ப்பதாகச் செய்திகள் வரும்.

கூத்துக்கள் உள்ளிட்ட நம்முடைய நாட்டுப்புற நிகழ்கலைகள் இத்தகைய ஒரு சமூகப்பங்கு கொள்வதை உறுதி செய்தவை. ஒவ்வொரு தனிமனிதனும் தானும் ஒரு சமூகக் குழுவின் அங்கமாக இந்த நிகழ்வுகளில் பங்கேற்றுத் தன்னுடைய அழகுணர்ச்சியின் வடிகால்களை இவைகளில் தேடி வந்திருக்கிறான்.

தொழிற்புரட்சி விளைவித்த விஞ்ஞான மாற்றங்கள், ஐரோப்பியர் வருகை, குழுச்சமூகம் சிதறுபடல், அச்சு எந்திரத்தின் தோற்றம் போன்றவை உலகெங்கும் நாடகம் குறித்த அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. தனிமனித உணர்வுகள் அங்கீகரிக்கப்பட்டு இலக்கியம் பெரும் மதிப்பு பெறுகின்றன. காட்சித் திறன் கொண்ட நாடகம் கருத்துத் தளத்திலும் பிணிக்கும் தன்மை கொண்டது எனக்கண்ட கிரேக்கம் துன்பியல் மனித உணர்வுகளை நாடகங்களில் அறிமுகப்படுத்தியது. மனித நடத்தைகளின் ஏற்ற இறக்கங்களை சேக்ஸ்பியர் நாடகங்களில் கவிதைகளாக வடித்தார். படிப்படியாக நாடகம் காட்சித் திறனும், சுவையும், சமூகப்பாங்கும் கொண்ட ஒரு ஊடகம் என்பது உணரப்பட்டது.

19ஆம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சி பெர்னாட்ஷா, இப்சன், செகாவ் போன்ற எண்ணற்ற நாடகாசிரியர்களை உலகிற்கு வழங்கியது. நடனங்கள், பாடல்கள் வாயிலாகத் தன்னை நிறுவிக்கொண்ட நாடகம் படிப்படியாக மனித உணர்வுகளின் ஏற்ற இறக்கங்களைக் களனாகக் கொண்ட பிரதிகளையும் உலகிற்கு அளித்தது.

ஆனால் இந்திய நாடகப் பாரம்பரியம் என்பது பெரும்பாலும் நிகழ்வு சார்ந்ததாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது. இங்கும் சிறந்த சமசுக்கிருத நாடகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. என்றாலும் அவை பேச்சு வழக்கில் இல்லாத மொழியில் எழுதப்பட்டிருந்தால் கூத்து, ஜாத்ரா, நௌடங்கி, தமாஷா போன்ற நாட்டுப் புறக்கலை மரபுகளின் வடிவாக்கத்தையே இந்திய நாடகம் சார்ந்திருந்தது.

19 ஆம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சி இந்திய மொழிகளில் உரைநடைக்கு இணையாக நாடகப் பிரதியையும் எடுத்துச் செல்ல உதவியது. ஆனால் தமிழில் நாடகம் அதற்குரிய இலக்கிய மதிப்பைப் பெறவில்லை. நடனத்திலிருந்து நாடகம் தோன்றியதால் அது முழுவதும் ஆடல், பாடல் சமபந்தப்பட்ட விசயமாகவே கருதப்பட்டுக் கூத்துக் கலைஞர்கள் சம்பந்தப்பட்ட விசயமாகவே மாறிவிட்டது. படைப்புக் கலைஞர்கள் நாடகத்தில் அதிக ஈடுபாடு காட்டவில்லை. நாடக நிகழ்வுகள் என்பவை பெரும்பாலும் தொடர்ந்த நிகழ்த்துதலால் பெற்ற வாய்மொழிச் செய்திகளின் அடிப்படையிலும் பரம்பரைச் செயல்பாடுகளாகவே வெளிப்பட்டன.

இலக்கியங்கள் என்பவை, கல்வி அறிவு பெற்ற புலவர்களாலும், ஆடல் பாடல் சம்பந்தப்பட்ட கூத்து வகை நாடகங்கள் பாமரர்களாலும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இங்கு ஒரு தொடர்ந்த இடைவெளி உருவாகிப் போனது. நாடகம் என்பது மனதைக் கிளரச்செய்து இன்பமூட்டிக் காமத்தை அதிகப் படுத்துவது என்று சமணம் போன்ற மதங்கள் பிரச்சாரம் செய்தன.

‘கூத்தாடுமிடத்தில் அறிவுடைய சான்றோர் எவரும் செல்லார்’ என்று ஏலாதி கூறுகிறது. இலக்கியம் என்பது அறிவு சார்ந்த செயல்பாடு என்பது போலவும், நாடகம் என்பது ஜனரஞ்சகச் செயல்பாடு என்பது போலவும் ஒரு கருத்துத் தமிழ்ச் சூழலில் உருவாக்கப்பட்டது. ஆனால் இசை, நடனம் ஆகியவற்றை மேல்தட்டு வர்க்கம் படிப்படியாகச் சுவீகரித்துக் கொண்டு அவைகளை (Classical) மேன்மை பெற்றவை என்று சொந்தம் கொண்டாடத் தயங்கவில்லை. நாடகம் மட்டும்தான் விடுபட்டுப்போனது.

அதனால்தான் தமிழ்ச் சூழல் சினிமா என்கிற வலிமையான தொடர்புச் சாதனம் வந்ததும், நாடகம் தன்னுடைய தொடர்ந்த ஜோவிதத்துக்கான நியாயங்களை இழக்கத் தொடங்கியது. தொலைக்காட்சி, திரைப்படம், காணொளி என்று புயல்கள் எழுந்தாலும், எந்த நாட்டிலும் நாடகம் தன்னுடைய மதிப்பை இழந்துவிடவில்லை. நேரில் நிகழ்த்தப்படும் ஒரு அரிய கலையாக இன்றும் அது தன் கவர்ச்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

நம்முடைய தமிழ் நாட்டிலும் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பம்மல் சம்மந்த முதலியாரும், சங்கரதாஸ் சுவாமிகளும் தங்களுடைய சிறப்பான நாடகச் செயல்பாடுகளால் நாடகத்துக்கு ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்கி இருக்கிறார்கள். பின்னர் மதுரகவி பாஸ்கரதாஸ், விஸ்வநாத தாஸ் போன்ற தேசிய நாடகவாதிகள் சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாடகம் என்றாலே பிரிட்டிசார் பயப்படும் அளவுக்கு, முன் அனுமதியின்றிப் பொது இடங்களில் நாடகம் போடக்கூடாது என்று தடைச்சட்டம் போடும் அளவுக்கு நாடகத்தை மக்கள்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். பின்னர் வந்த திராவிட இயக்கம் அரசியலையே நாடக மேடையாக்கிப் புதிய சமூக நீதிக்கான குரலை நாடகத்தில் எழுப்பி மக்களை ஒரு பெரும் அரசியல் மாற்றத்திற்கே அழைத்துச் சென்றது என்பது வேறு எங்கும் நிகழ்ந்திராத ஒரு நிகழ்வு.

நாடத்துக்கு இத்தகைய பின்பற்றுதலும், எழுச்சியும் கொண்டிருந்த தமிழ்ச் சூழலை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உரிய நாடகாசிரியர்கள் இங்கே தோன்றவில்லை. சினிமா பட்டி, தொட்டிகளிலெல்லாம் புக ஆரம்பித்த உடனேயே முழுநேர நாடகக் குழுக்களும் நாடகக்காரர்களும் கடையைக் கட்ட ஆரம்பித்தனர். அந்த இடத்தை நிரப்ப நகைச்சுவை நாடகங்களையும், சினிமா பாணியிலான மெலோ என்ற வகை நாடகங்களையும் சபாக்கள் உற்பத்திச் செய்தன. பம்மல் சம்பந்த முதலியார், சங்கரதாஸ் சுவாமிகள், நவாப் ராஜ மாணிக்கம், TKS குழுவினர் காலத்தில் கூட நாடக மேடையில் ஒரு பன்முகத்தன்மை இருந்தது.

மேடை பலவித உணர்ச்சிகளின் சங்கமமாக இருந்தது. இன்று (ஹாஸ்யம்) நகைச்சுவையைத் தவிர வெளிப்படுத்துவதற்கு வேறு உணர்ச்சிகளே இல்லை என்ற நிலைக்குத் தமிழ் நாடகமேடை தள்ளப்பட்டுவிட்டது. நகரங்கள் கலாச்சார உற்பத்திச் சாதனங்களாக மாறிய உடனேயே நாடகம் ப்ரொசீனிய மேடை வடிவத்தில் நடுத்தர வர்க்கத்தின் கைக்குப் போய்விட்டது.

உரையாடலும், பங்குகொள்ளலுமாகக் கலாச்சார இருப்பின் அடையாளமாகப் பேணப்பட்ட ஒரு வடிவம் ஒரு உள்ளீட்ட மத்திய வர்க்கத்தால் நான்கு சுவர்களுக்குள் வெறும் கேளிக்கை உணர்வுகளின் வடிகாலாகச் சுருங்கிப் போகிறது, இந்தியா முழுவதும் இந்தச் சூழலுக்கு உட்பட்டிருந்தாலும் தமிழுக்கு நேர்ந்த அளவுக்கு இந்த விபத்து வேறு எந்த மொழிக்கு நிகழவில்லை.

வங்காளத்தில் பாதல்சர்க்கார், உத்பல்தத், சோம்புமித்ரா, ஹிந்தியில் மோகன் ராகேஷ், சுரேந்திரவர்மா, ஹபீப் தன்வீர், மராட்டியில் விஜய் தெண்டுல்கர், கன்னடத்தில் கிரிஷ் கர்னாட், சந்திர சேகர கம்பார் போன்ற நாடகக்காரர்கள் சினிமாவுக்கு மாற்றான ஒரு புதிய நாடகத்தின் இருப்பை உறுதி செய்தனர்.

மரபின் ஆழங்களையும் இன்றைய யதார்த்தங்களையும் உள்வாங்கி நாடகம் இன்று இயங்கக் கூடிய புதிய தளங்களை அவர்கள் அடையாளம் காட்டி வருகிறார்கள். ஒரு பெரிய அளவுக்குத் தமிழில் இந்த மாற்றம் நிகழவில்லை. இங்கும் ந.முத்துசாமி, இந்திரா பார்த்த சாரதி, ஜெயந்தன் போன்ற புதிய நாடகக்காரர்கள் புதிய யதார்த்தங்களைத் தங்கள் நாடகங்களில் வெளிப்படுத்தினாலும் சூழலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. நம்முடைய நாட்டுப்புற நாடகங்களின் கேளிக்கை மனோபாவத்தையும் கடந்த நகர்புற நாடகங்களின் கேளிக்கை மனோபாவத்தையும் கடந்த புதிய வடிவங்கள் மற்ற மொழிகளில் மக்களைச் சென்றடைந்த அளவுக்கு தமிழில் நிகழவில்லை.

ஆனால் தமிழ் கலாச்சாரச் சூழலில் இது ஒரு தொடர்ந்த போராட்டமாக இருக்கிறது. ஒரு செறிவான தளத்தில் மேற்கொள்ளப்படுகிற நாடக முயற்சிகள் மட்டுமல்ல, ஆரோக்கியமான கலை இலக்கிய முயற்சிகள் எல்லாம் இங்குப் பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் விளைவித்துள்ள வர்த்தக மதிப்பீடுகளைத் தாண்டிப் பரவலான கவனத்தைப் பெற முடிவதில்லை.

மக்கள் கற்பனையற்ற மலிவான விசயங்களைத்தான் விரும்புகிறார்கள் என்று இவர்களாகவே தீர்மானம் செய்து கொண்டு ஆழ்ந்த, செறிவான படைப்புகளை மக்கள் பார்வைக்குக் கொண்டு வருவதில்லை. இதனால் வாழ்க்கையின் மீதும் கலையின் மீதும் தீவிரமான அக்கறையும், அர்ப்பணிப்புத் தன்மையும் கொண்ட படைப்பாளிகள் வெகுஜனத்தளத்துக்கு வர இயலாமல் போகிறது. உண்மையான கலாச்சார அக்கறை கொண்ட படைப்புகளைப் பெருவாரியான மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இன்று பார்வையாளர் மனோபாவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கும் இத்தகைய கற்பனையற்ற ஒரு சூழலே காரணமாக அமைகிறது.

அண்மையில் மோகமுள், அவதாரம் போன்ற வர்த்தக நோக்கிலிருந்து மாறுபட்ட திரைப்படங்களுக்கு நம்முடைய திரையரங்குகளில் கிடைத்த எதிர்வினைச் சூத்திரங்களைத் தாண்டிய எந்த முயற்சியையும் சகித்துக் கொள்ள முடியாத தமிழ்ப் பார்வையாளர் மனநிலையையே பிரதிபலித்தது. ஆனால் இத்தகைய ஒரு எதிர்வினைக்குத் தமிழின் ஒட்டுமொத்தச் சூழலும் தன்னுடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறது.

கடந்த 50 வருடங்களாகத் தமிழ்க் கலாச்சாரச் சூழலில் வர்த்தகச் சக்திகளின் பாதிப்பினால் செறிவான கலை, இலக்கிய முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், கலை எழுச்சிக்கான நியாயங்களுடன் இவையே காலத்தைக் கடந்து நிற்பவையாக இருக்கின்றன. தமிழ் நாடகத்திலும் சிலப்பதிகாரம் முதற்கொண்டு ஆழ்ந்த கூறுகளை உள்ளடக்கிய மாறுபட்ட பல பிரதிகளை வெவ்வேறு காலகட்டங்களில் நாம் பார்க்க முடியும்.

அந்தந்தக் காலத்திய பொது மரபிலிருந்து வேறுபட்டு வேறு தளங்களில் சிந்தனையைப் பாய்ச்சியவை இந்தப் பிரதிகள். இவையே பின்னர் வரக்கூடிய செறிவான படைப்புகளுக்கு முன் மாதிரியாக அமைக்கின்றன. தலைவன் மற்றும் கடவுளின் சிறப்பை வழிபடுதல் அல்லது நல்லொழுக்கம் மற்றும் மத உணர்வுகள் ஆகியவற்றால் உந்தப்பட்டே பெரும்பாலான நாடகப் பிரதிகள் உருவான ஒரு காலகட்டத்தில் மனித இயல்புகளின் ஏற்றத் தாழ்வுகளைச் சிலப்பதிகாரம் எடுத்துக் கொள்கிறது.

கோவலனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லிக் கொண்டுபோகாமல் கோவலனின் வாழ்க்கையிலிருந்து சாரமான பகுதிகளை எடுத்து கால ஓட்டத்தில் மனிதர்கள் அடித்துச் செல்லப்படுவது குறித்த ஒரு நிதர்சன நோக்கிச் சிலப்பதிகாரம் வெளிப்படுத்துகிறது. நாடகத்தின் உணர்ச்சி நிலைகளை வலுப்படுத்த பல்வேறு குரவைக் கூத்துகள் நாடக அமைப்புகளுக்கும் தெருக்கூத்து நாடக அமைப்புக்கும் ஒரு ஆரம்பமாக அமைகிறது. பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகங்கள் போன்றவை வாழ்க்கையின் அடித்தளத்தில் ஒதுக்கப்பட்டிருந்த மக்கள் வாழ்நிலையை எதிரொலிக்கின்றன. இவற்றில் செந்நெறி மரபுகளுக்கு மாறாக எளிமையான நாட்டுப்புற வழக்காடல்கள் நிறைந்த ஒரு பாணி கையாளப்படுகிறது.

இந்த நாடகங்கள் சமூகத்தின் விளிம்பில் உள்ள மக்கள் குறித்த ஒரு பரிவுணர்வையும், அவர்கள் வாழ்க்கை முறையின் அழகியல் தன்மைகளையும் விளக்குவனவாக அமைகின்றன. இன்றைய தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அரங்கு குறித்த பார்வைகளை இந்த நாடங்கள் தமக்குள் கொண்டிருப்பதை நாம் பார்க்கமுடியும்.

கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை இது போன்ற சிந்தனையின் இன்னுமொரு பிரதிபலிப்பு. சேக்கிழாரின் பெரிய புராணத்திலிருந்து நந்தனார் பாத்திரத்தை ஒரு குறியீடாக எடுத்துக் கொண்டு எளியவர்களுக்கும், செல்வர்களுக்கும் இடையிலான போராட்டம், உயர்ந்த சாதியினர் என்று கருதிக் கொள்பவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடையிலுள்ள போராட்டம், தம் இணைத்துப் பழமைவாதிகளுடனும், வைதீக அந்தனர்களுடனும் இன்னொரு போராட்டம் என்று அன்றைய சமூக மனிதன் மேற்கொண்ட சிக்கலைப் பிரதி மையப்படுத்துகிறது.

பள்ளு, குறவஞ்சி, நொண்டி மற்றும் கீர்த்தனை நாடகங்களின் வளர்ச்சி பெற்ற பிரதியாகத் தெருகூத்து அமைகிறது. நாட்டுப்புற மக்களிடமும், பாமர மக்களிடமும் நாடகம் என்கிற வடிவத்தைப் பரவலாகக் கொண்டு சென்றது இந்தக் கூத்துப் பிரதியின் முக்கிய அம்சம். தெருக்கூத்து அடிப்படையில் ஒரு காவிய மரபைப் பின்பற்றினாலும் உடை, ஒப்பனை, உடல் அசைவுகள், இடைவெளியை உபயோகித்த விதம், பாத்திரச் சித்தரிப்பு, நிறங்கள் பற்றிய உணர்வு ஆகிய எல்லாவற்றிலும் அது ஒரு புது மொழியை உபயோகித்தது. பரம்பரை பரம்பரையாகவும் வாய்மொழியாகவும் கற்ற பல கூத்துப் பிரதிகள் காலப்போக்கில் உருவாயின. தெருக்கூத்து வெறும் நாடக வடிவமாக மட்டும் முன் வைத்து முழுச் சமூகத்தின் அடையாளமாகவும் உருமாறுகிறது.

பின்னர் சமுதாய நாடகங்கள் உருவாகின்றன. அரசியல் ரீதியாகப் பல மாற்றங்களை உலகம் சந்திக்கிறது. உலக அரங்கில் சேக்ஸ்பியரின் தாக்கம் பரவலாகிறது. தமிழில் பரிதிமாற் கலைஞர், சுந்தரம் பிள்ளை போன்றவர்கள் சேக்ஸ்பியர் போன்று (ரொமாண்டிசிசம்) காதல் ரசம் கொண்ட நாடகங்களை உருவாக்குகிறார்கள். பம்மல் சம்பந்த முதலியார் மேற்கத்தியக் கோட்பாடுகளின் தாக்கத்தில் புதிய பிரதிகளை உருவாக்குகிறார். துன்பியல் நாடகங்களும் தமிழுக்கு அறிமுகமாகின்றன. இந்தக் காலகட்டத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் ஒரு புதிய நாடக எழுச்சியை உருவாக்குகிறார். நம்முடைய மரபின் புதிய உருவாக்கங்களை அவர் அறிமுகப்படுத்துகிறார். தார்மீக நிலைப்பாடுகள் குறித்த தர்க்கப் பாடல்களையும், வசன அமைப்பையும் அவர் பயன்படுத்துகிறார். இசை அவருடைய நாடகங்களில் பிரதான அம்சமாகிறது. தம்முடைய காலத்தில் தோன்றிய பல இசை நாடகங்களுக்கும் இவரே ஆதர்சமாக விளங்குகிறார்.

பாடல்களில் ஆதிக்கத்திலிருந்து ஒரு கருத்து ஆதிக்கத்தை ஏற்படுத்தியவை திராவிடர் இயக்க நாடகங்கள். எளிய சமூக உணர்வுகளும், பகுத்தறிவு வாதங்களும், கருத்துப் போராட்டங்களும் கூட நாடக மேடையை அலங்கரிக்க முடியும் என்பதற்கு இவை நிரூபணமாக இருந்தன. நாடகங்களைத் தூரத்தில் இருந்து பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் சக மனிதனின் பிரச்சனைகளைப் பேசி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியவை இத்தகைய நாடகங்கள். இதே அடிச்சுவட்டில் இடதுசாரி இயக்கங்கள் சுரண்டலற்ற சமதர்மச் சமுதாயம் குறித்த பார்வைகளை நாடகங்களை முன் வைத்தன. இவையெல்லாம் தமிழில் எதிர்ப்பு நாடகப் பிரதிகள் உருவாகக் காரணமாக அமைந்தன.

இவ்வாறு மரபு குறித்தக் கண்ணோட்டமும் மேற்கத்தியக் கோட்பாட்டுத் தாக்கங்களும், சமூக விமர்சனமும் சூழ்ந்த ஒரு காலகட்டத்தில் தமிழில் நவீன நாடகம் குறித்த பிரக்ஞை தோன்றுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியின் பின்னணியில் கவிதை, உரைநடை போன்றவை பெரும் மாற்றங்களைச் சந்திக்கின்றன. பாரதி, பாரதிதாசன், பிச்சமூர்த்தி போன்றவர்கள் கவிதையில் புதிய வீச்சுக்களைக் கொண்டு வந்தனர்.

ஒரு புத்திலக்கிய அடிச்சுவட்டில் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா., அழகிரிசாமி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஜானகிராமன், அசோகமித்திரன் போன்றவர்கள் தமிழ் உரைநடைக்குப் புதிய பார்வைகளையும் அணுகுமுறைகளையும் அளிக்கிறார்கள். சி.சு.செல்லப்பா தம்முடைய எழுத்து பத்திரிகையின் மூலம் கவிதை பற்றியும், உரைநடை பற்றியும் புதிய விமர்சன நோக்குகளை அறிமுகப்படுத்துகிறார். வாழ்க்கையை உள்நோக்கிப் பார்த்தலும், புதிய யதார்த்தங்களை அங்கீகரித்தலுமான ஒரு போக்கை இலக்கியம் மேற்கொள்கிறது. இந்தப் பின்னணியில் தமிழில் ஒரு புதிய நாடகப் பிரதிக்கான தேடல் துவங்குகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்ச் சூழலிலும், உலக அரங்கிலும் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களை நாம் பார்க்க வேண்டும். உலகப் போர்கள் மனித மதிப்பீடுகளின் சரிவையும், மனித வாழ்க்கையின் அவலத்தையும் உணர்த்தின. இந்தியச் சூழலிலும் சுதந்திரத்துக்குப் பின் சமூக அரசியல் தளங்களில் பெரும் மதிப்பீட்டுச் சரிவுகள் ஏற்பட்டன. நம்பிக்கைகளும், கனவுகளும் பொய்த்துப் போயின. கூட்டுக் குடும்பம் சிதறிப் போனது. இருப்புக்கான போராட்டத்திலேயே மனித உணர்ச்சிகள் வறண்டு போயின. வாழ்க்கை காப்பியத் தன்மை கொண்டதாக இல்லை. அது துண்டுகளாகச் சிதறியிருக்கிறது.

நம்பிக்கையின் ஊற்றுகளைத் தேடிக் கண்டடைய வேண்டும். இவ்வாறு சிதறிப்போன பிம்பங்களும், களைந்து போன கனவுகளுமாக 20ஆம் நூற்றாண்டு மனிதன் சிக்கலான வாழ்வு முறைக்குள் இயங்குகிறான். நவீன நாடகாசிரியனும் இந்தத் தளத்தில்தான் வாழ்வைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

ந.முத்துசாமி தம்முடைய நாடகங்களில் இருபதாம் நூற்றாண்டின் சிதறுண்ட முகமிழந்த மனிதர்களைப் பற்றிப் பேசுகிறார். தம்முடைய சிறு பத்திரிகைத் தொடர்புகளின் மூலம் கிடைத்த உணர்வுகளை அடித்தளமாகக் கொண்டு சில அபத்தபாணி நாடகங்களை அவர் எழுதினர். இந்திரா பார்த்தசாரதி உள்மனக்குழப்பங்கள், (Ego) ஈகோ போராட்டங்கள், உறவுப் பிறழ்ச்சிகள் இவைகளை மையமாக வைத்து மனோதத்துவ ரீதியில் சில நாடகங்களை எழுதினர்.

இன்றைய யதார்த்தத்தின் சில வினோதமான சித்திரங்களை ஜெயந்தனுடைய பிரதிகளில் பார்க்க முடியும். புனைகதைகளை மையமாக வைத்து பேரா.ராமானுஜம் எழுதினர். இலக்கியப் பின்னணியுடன் நாடகத்துக்கு வந்த எம்.டி. முத்துக் குமாரசாமி, எஸ். ராமகிருஷ்ணன், நிஜந்தன், பிரேம் போன்ற நவீன எழுத்தாளர்கள் வாழ்க்கையின் பல சாத்தியங்களை முன்வைக்கிறார்கள். வெறும் உரையாடலை மடக்கிப் போட்டுக் கதை சொல்வது என்ற நிலையில் இந்தப் பிரதிகள் இயங்காமல் கதையிலிருந்து கதையை அழித்து வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான நுட்பமான கோட்டை இவை விலக்க முயற்சி செய்கின்றன. ஒரு சிந்தனை மரபின் தொடர்ச்சியை இந்தப் பிரதிகளின் ஊடாக நாம் பார்க்க முடியும்.

ஆனால் எழுதப்படுவதால் மட்டும் நாடகம் முழுமையடைவதில்லை. நிகழ்த்தப்படும் போதுதான் அவை முழுமை அடைகின்றன. நிகழ்த்துதலின் நுட்பங்களையும், மனோதத்துவங்களையும் எட்டாமல் வெறும் பிரதியின் பலத்தில் நாடகம் செய்ய முடியாது. நாடகத்தின் காலம், இடம் மற்றும் வெளியில் உருவகப்படுத்த இலக்கியம், கவிதை, சங்கீதம், நாட்டியம் ஆகிய எல்லாக் கலைகளின் பங்களிப்பும் வேண்டும்.

சினிமாவின் வருகைக்குப் பிறகு முழுநேர நாடகக் குழுக்கள் நாடகத்தை நம்ப வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஆங்காங்கே தோன்றிய அமெச்சூர் நாடகக் குழுக்கள் பொழுது போக்கு நாடகத்துக்குரிய மனப் பயிற்சியும், உடல் பயிற்சியும் அற்ற நிலையிலேயே இங்கே குழுக்கள் இயங்கிக் கொண்டிருந்தன. கிட்டத்தட்ட ஒரு 50 ஆண்டு காலம் வரை தமிழ்நாடு முழுவதும் பரவலாக நாடகக் குழுக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடனும், ஒழுங்குடனும் ஒரு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. அவர்களுடைய உழைப்பு குறித்தும், கலை குறித்தும் மக்களும் அதிக ஈடுபாடும், மதிப்பும் கொண்டிருந்தனர்.

கும்பகோணத்தில் அண்மையில் வாழ்ந்து மடிந்த பாலாமணி என்கிற நாடக நடிகையின் நாடக வாழ்க்கையைப் படிக்கும்போது நாடகத்தின் மூலம் அவர் எத்தகைய வீச்சுகளையும், அலைகளையும் உருவாக்கி இருந்தார் என்பதைப் பார்க்க முடிந்தது. கவனிக்க யாருமின்றி பாலாமணி கடைசியில் ஒரு குடிசையில் இறக்க நேர்ந்தது என்பது இன்னொரு சோக வரலாறு. நாடக நடிகர், நடிகையர் தாங்கள் ஈடுபட்ட கலைக்காக தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்த நிலையிலேயே நாடகம் சமூகத்தின் மதிப்புக்கு உரியதாக இருந்தது.

அத்தகைய உழைப்பும், பயிற்சியும் இன்று நாடகத்தில் அரிதாகிவிட்டன. அண்மைக் காலமாக ந.முத்துசாமி கூத்துப்பட்டறை என்ற அமைப்பை நிறுவி முழுநேர நடிகர்களைத் தயார் செய்து வருகிறார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நடிகர்கள் பல்வேறு பயிற்சிகளுக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டு வருகிறார்கள். பல்வேறு மொழிக் குழுக்களுக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி நாடகக் கோட்பாடுகள் குறித்தும் நடிகனுக்கான பயிற்சிகள் குறித்தும் கூத்துப்பட்டறை சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. கடந்த 20 வருடங்களில் தமிழ் நாடகத்தில் நடந்த முக்கியமான சோதனை முயற்சிகளைக் கூத்துப்பட்டறையே நிகழ்த்தியுள்ளது. தமிழில் மட்டுமல்லாது பிற இந்திய மொழி நாடகங்களையும், மேற்கத்திய நாடகங்களையும் மொழியாக்கம் செய்து நிகழ்த்தியுள்ளது.

நாற்காலிக்காரர், காலம் காலமாக சுவரொட்டிகள், உந்திச் சுழி, நிரபராதிகளின் காலம், வெள்ளை வட்டம், Gas-II, மீள முடியுமா, தூத கடோத்கஜம், பகவதாஜ் ஜீகியம், காந்தியின் கடைசி 5 வினாடிகள், காலிகுலா, காண்டா மிருகம் என்று பல நாடகங்களைக் குறிப்பிட முடியும், இதே போன்று பரிக்ஷா, வீதி ஆகிய நாடகக் குழுக்களும் வழக்கமான சபா நாடகங்களுக்கு மாற்றாக இலக்கிய உணர்வும், சமூக உந்துதலும் கொண்ட பல நாடகங்களை நிகழ்த்தியுள்ளன.

இதே அடிச்சுவட்டில் மதுரையில் நிஜ நாடக இயக்கம், சுதேசிகள், திருச்சியில் திருச்சி நாடக சங்கம், பாண்டிச்சேரியில் கூட்டுக் குரல்கள், ஆழி நாடகக் குழு, தன்னானே குழு, திருவண்ணாமலையில் தீட்சண்யா, சென்னையில் ஆடுகளம், ஐக்யா, பல்கலை அரங்கம், மௌனக்குரல், டில்லியில் யதார்த்தா ஆகிய குழுக்கள் ஒரு அர்த்தமுள்ள நாடக இயக்கத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளன.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகங்களில் நாடகத்துறை அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நாடகத்துக்கென மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். இன்று தலித் அரங்கம், பெண்ணிய அரங்கம், ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கம் என்ற நாடகத்தில் பல்வேறு குரல்கள் ஒலிக்கின்றன. இன்று நாடகப் பிரதியின் தளம் விரிவடைந்துள்ளது.

இத்தகைய ஒரு புதிய நாடக இயக்கத்துக்கு உரிய மன வளமும், கற்பனையும் கொண்ட பயிற்சியை அளிப்பதில் தேசிய நாடகப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.ராமானுஜமும் (இவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகத்தில் நாடகத்துறைத் தலைவராக இருந்து அண்மையில் ஓய்வு பெற்றவர்), சாந்தி நிகேதனில் பயின்று காந்திகிராமம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ்.பி.சீனிவாசன் அவர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் நாடகப் பட்டறைகளை ஏற்பாடு செய்து கோட்பாட்டு ரீதியிலும், நடைமுறை ரீதியிலும் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்கள். நாடகம் குறித்த புதிய கட்டுமானங்களையும், பார்வைகளையும் தளைகளற்று மனம் ஏற்பதற்குரிய ஒரு சூழலை அவர்கள் கட்டமைக்கிறார்கள்.

அண்மையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பேராசிரியர் ராமானுஜம் 25 பேர் கலந்து கொண்ட ஒரு நாடகப் பட்டறையை ஏற்பாடு செய்திருந்தார். பட்டறையின் முடிவில் ஜரிஷ் நாடகாசிரியர் Syngeன் ‘கடலோடிகள்’ நாடகம். பங்கு பெற்றவர்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்டது. நடிக, நடிகையருக்கு ஏற்பட்ட தாக்கங்களையும், கிடைத்த அனுபவத்தையும் அந்த நிகழ்த்துதலில் பார்க்க முடிந்தது. சென்னையில் ஒரு நிரந்தரமான நாடகப் பள்ளி ஏற்பட்டு இது போன்று நாடகப் பயிற்சிகளுக்கு பரவலான வாய்ப்புகள் கிடைக்கும் போது நாடகத்தில் தேர்ந்த நடிக, நடிகையர் காலப்போக்கில் உருவாக முடியும்.

இன்று நாடகத்தின் இடம் என்ன என்கிற கேள்வி பலருக்கு எழுந்து வருகிறது. நாடகம் சிறு சிறு துகளாக மக்களுடைய வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த ஒரு வடிவம். இன்று சினிமா அசுர வலிமையுடன் ஒரு சேரப் பலரைச் சென்றடையும் அளவுக்குப் பாதிப்புடையதாக இருக்கலாம். ஆனால் நாடகம் நம் கண் முன்னே ஒரு யதார்த்தத்தை, ஒரு கனவை, நாம் இழந்து போன கணங்களை முன் நிறுத்துகிறது. ஒரு எந்திர உலகம் மனிதனின் கற்பனைகளையும், படைப்புச் சந்தியையும் நசுக்கிக் கொண்டிருக்கிறது.

அவன் ஒரு நுகர் பொருளாக உலவிக் கொண்டிருக்கிறான். நாடகம் அவனுடைய கற்பனைகளை மீட்டெடுக்க முடியும். ஒரு கவிதையை அவனுக்கு வசப்படுத்த முடியும், யதார்த்தத்தின் முன் அவன் வீறு கொள்ள முடியும். கற்பனையற்ற அவனுடைய வாழ்க்கையை இன்னும் அதிக கற்பனையுடன் இன்னும் அதிக படைப்பு மனத்துடன் அவன் எதிர்கொள்ள முடியும். அதற்கான ஒரு கலையின் அண்மையை நாடகம் அவனுக்கு வழங்க முடியும். அதற்கான ஒரு கலையின் அண்மையை நாடகம் அவனுக்கு வழங்க முடியும். நாடக வெளியில் ஒரு நடிகன் பார்வையாளனுடன் கொள்ளும் உறவு என்பது ஈடு இணை இல்லாதது.

ஆரோக்கியமான கலை, இலக்கிய வளர்ச்சிக்குப் பொறுப்பேற்கிற ஒரு அரசாங்கம் சில ஏற்பாடுகள் மூலம் நாடகம் தொடர்ந்து சிறப்பாக இயங்க வழிவகைகள் செய்ய முடியும்.

Wednesday, November 26, 2014

கம்போடியாவில் 500 ஏக்கரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய இந்துக்கோயில்

“மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்” என்ற வாக்கிற்கிணங்க உலகம் முழுவதும் நம்முடைய சமயம், கலை, பண்பாடு பரவியிருந்ததன் வெளிப்பாடே இத் திருக்கோவில்கள்.

கம்போடியாவில் 500 ஏக்கரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய இந்துக்கோயிலானது, உலகிலுள்ள எல்லா அதிசயங்களையும் வெல்லவல்ல தமிழர் அதிசயமாக காட்சிதருகின்றது. கம்போடியா நகரில் 1200க்கு மேற்பட்ட கோவில்கள் இந்து சமயக் கலாசாரத்தின் வெளிப்பாடாக ஓங்கி நிற்கின்றன. கலை, கலாச்சாரம், வியக்கத்தகு தொழில் நுட்பம், தொன்மை, பிரமிக்கத்தக்க அமைப்பு இவையாவும் பார்ப்போர் மனதில் ஓர் உலக அதிசயமாக காட்சி தருகின்றது.
அங்கூர், என்பது கம்போடியாவிலுள்ள ஒரு இந்துக் கோயில் தொகுதிக்கு உரிய இடமாலும். இது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் கட்டப்பட்டது. வாட் என்பது கோயில் என்பதைக் குறிக்கும் கெமர் மொழிச் சொல். ஐந்நூறு ஏக்கர் சுற்றளவு நிலப்பரப்பில் 3 ஆயிரம் கோடி தொன் கருங்கல்லால், 10 இலட்சம் பணியாளர்களால் 40 ஆண்டுகளில் கட்டப்பட்ட திருக்கோவில் உலகின் மிகப் பெரிய கோவிலாக விளங்குகிறது. (இவ் ஆலையம் இரண்டாம் ஜெயவர்மன் (790 – 835) முதல் ஜெயவர்மன் பரமேஸ்வரா (1327) வரை உள்ள பல மன்னர்களால் கட்டப்பட்டவை என கூறுவாருமுளர்.)
சூரியவர்மனின் ஆட்சி, சோழ அரசர்களிடம் நல்லுறவுடன் இருந்ததால். மலாயாவின் முன்னேற்றம் அதி விரைவாக வளர்ந்தது. வியாபாரம், அரசியல், மதம் என அனைத்தும் மேலோங்க ஆரம்பித்தது. அக்காலத்தில் பெரிய கோவில்களை கட்டும் அரசனே தன் நாட்டில் செல்வச் செருக்குடன், விளக்குகிறான் என்ற நம்பிக்கை இருந்தது. சோழ அரசின் கீழ் இருந்த சூரிய வர்மனும் செல்வச்செருக்குடன் ஆட்சிபுரிந்தான் என்பதயே இவ் ஆலயங்கள் நினைவுபடுத்துகின்றன.
ஒரு அகழியும், மூன்று மண்டபங்களும் மத்தியிலுள்ள ஐந்து கோயில்களைச் சூழவுள்ளன. மேற்கிலிருந்து வரும்போது அகழியின் மேல் அமைந்துள்ள நீண்ட பாலத்தினூடாக முதலாவது வெளி மண்டபத்தை அணுகலாம். முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம் (ceiling) தாமரைவடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது. மூடிய சுவர் நடன உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இச் சுவரின் வெளிப்புறம் தூண்களோடுகூடிய பலகணிகள், அப்சரஸ்கள் மற்றும் விலங்குகளின் மீதமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

எல்லா மண்டபங்களினதும் சுவர்களில் அப்சரஸ் உருவங்கள் காணப்படுகின்றன. முதல் மண்டபத்திலிருந்து நீண்ட வழிமூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும். இது இரண்டு பக்கங்களிலும் சிங்கச்சிலைகள் அமைந்த படிக்கட்டைக் கொண்ட மேடையிலிருந்து அணுகப்படுகிறது.

இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன. மூன்றாவது மண்டபம், உயர்ந்த terrace இன் மீது அமைந்து ஒன்றுடனொன்று மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோயில்களைச் சூழ அமைந்துள்ளது. மண்டபங்களின் கூரைகள், பாம்புகளின் உடல்களையும், சிங்கம், கருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இவ் ஆலயத்தை வேறு விதமாக தரிசிக்கும்போது, திருக்கோவிலைச் சுற்றியுள்ள அகழி அடுத்து பிரகார மண்டபம். அதனுள் திருக்குளம். 60 படிகள் மேல் ஏறினால் அட்டதிக்கிலும், திக்குபாலகர்கள். மேலே 60 படிகள் ஏறினால் நான்கு மூலையிலும் சிவலிங்கங்கள், மையத்தில் அற்புதமான சிவலிங்கம், அது தற்போது நூதனசாலையில் உள்ளது. 60 அடி விமானம், 500 ஏக்கரில் திருக்கோவில் அமைக்க எத்தனை ஆழம், அகலம் கொண்டு அஸ்திவாரம் செய்திருப்பார்கள்.
மன்னனின் மனம் போல உயர்ந்து நின்ற திருக்கோவில் 200 ஆண்டுகளாக வழிபாடின்றி இருக்கிறது. தற்பொழுது ஜப்பான், ஜெர்மன்காரர்கள் திருப்பணி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். கர்ப்பகிரஹத்தில் இருக்க வேண்டிய மூர்த்தங்கள் காட்சியகத்தில் இருக்கின்றன.

கம்போடியா:

கம்போடிய முடியரசு முற்காலத்தில் கம்பூச்சியா என அறியப்பட்ட ஒரு தெகிழக்கு ஆசிய நாடாகும். இந்நாட்டில் ஏறக்குறைய 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இந்நாட்டின் தலைநகர் “புலோம் பென்” நகரம். இதுவே இந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாட்டுக் குடிமக்களை "கம்போடியர்" எனவும், கிமர் எனவும் அழைக்கின்றனர். எனினும், “கிமர்” என்னும் குறியீடு கிமர் இன கம்போடியர்களை மட்டுமே அழைக்க பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையான கம்போடியர் தேரவாத பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.

கம்போடியாவின் எல்லைகளாக, மேற்கிலும், வடமேற்கிலும் தாய்லாந்து நாடும், வடகிழக்கில் லாவோஸ் நாடும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் வியட்நாம் நாடும், தெற்கில் தாய்லாந்து வளைகுடாவும் அமைந்துள்ளன. கம்போடியாவின் முக்கிய புவியியல் கூறுகளாக திகழ்வன இந்நாட்டில் பாயும் மீக்கோங் ஆறும், “தொன்லே சாப்” ஏரியும் ஆகும். கம்போடியர்களின் முக்கிய தொழில்களாவன: நெசவு, கட்டுமானம், சுற்றுலா சார்ந்த சேவை. கடந்த 2007ம் ஆண்டு மட்டும் ஏறக்குறைய 4 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அங்கூர் வாட் கோவில் பகுதிக்கு வருகை தந்தருகின்றனர்.

தேசியக் கொடியில் இந்துக் கோயிலின் விம்பத்தைப் பொறித்துள்ள ஒரேயொரு நாடு என்ற சிறப்பு கம்போடியாவுக்கு உண்டு. பழைய தமிழ் இலக்கியங்களில் கம்புஜம் அல்லது காம்புசம் என்று அழைக்கப்படும் இந்த நாடு காலத்திற்க்கு காலம் பல பெயர்களைத் தாங்கி நிற்கின்றது.

மார்ச்சு 1970ல் அதிரடிப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய அமெரிக்க ஆதரவாளன் ஜெனரல் லொன் நொல் இந்த நாட்டிற்கு வைத்த பெயர் கிமர். ( KHMER ) அதன் பிறகு ஏப்பிறில் 1975க்கும் ஜனவரி 1979க்கும் இடையில் கம்போடியாவை ஆட்சி செய்த பொல் பொட் சூட்டிய பெயர் கம்புச்சியர்.

வியற்நாமியப் படையெடுப்பு மூலம் முடிவுக்கு வந்த பொல் பொட் ஆட்சிக்கு பிறகு இந்த நாடு பெற்ற பெயர் கம்போடியா இந்தப் பெயர் இன்று வரை நிலைத்து நிற்கின்றது.

மாக்சிசத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட காரணத்தால் பொல் பொட் செய்த இன அழிப்பில் 10 மில்லியன் மக்கள் கொன்றொழிக்கப் பட்டனர். அதாவது ஜந்தில் ஒரு பங்கினரை அந்த நாடு இழந்து விட்டது.

பொல் பொட் ஆட்சியில் பணப் புழக்கம் முற்றாக நிறுத்தப்பட்டது. மக்கள் அனைவரும் விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டனர் உலகத் தொடர்புகளில் இருந்து அரசு விலகிக் கொண்டது. தபால் சேவைகள் நிறுத்தப்பட்டன. இராசதந்திரப் பரிமாற்றங்கள் அனைத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. அதாவது வெளி உலகத் தொடர்புகளுக்கு முற்றுப்புள்ளி இடப்பட்டது.

கம்போடியா இன்று புத்துயிர் பெற்று வருகிறது. ஜநாவின் தலையீட்டில் தேர்தல்கள் நடத்தப்பட்டன.பொல் பொட் ஆட்சியில் அதிகார நிலையில் இருந்த கூன் சென் (HUN SEN ) என்பவர் பிரதமராகி விட்டார். இன அழிப்புக் குற்றத்திற்கான விசாரணைகள் தொடங்கப்பட்டுச் சிலர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

படிப்படியாகக் கம்போடியப் பொருளாதாரம் வலுப்பெற்று வருகிறது. சுற்றுப் பயணிகளின் வருகை மூலம் கம்போடியா பெரும் வருவாயை ஈட்டுகிறது.

கம்போடியாவின் அங்கூர் வாத் திருக்கோயிலைப் பார்ப்பதற்கு அமெரிக்க, ஜரோப்பிய சீன, ஜப்பானிய, வியற்நாமிய மற்றும் கோறியப் பயணிகள் வருகின்றனர்.

900 வருடம் பழமை வாய்ந்த இந்த ஆதிகாலச் சிவன் கோயில் நாட்டிற்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கிறது. வருடமொன்றுக்குச் சராசரி ஒரு மில்லியன் பயணிகள் அதைப் பார்வையிட வருவதாக சுற்றுலாத் துறை தெரிவிக்கிறது. அடுத்து வரும் வருடங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

நெடுங்காலமாக காட்டு மரங்களால் மூடப்பட்டு வெளி உலகிற்குத் தெரியாமல் கிடந்த அங்கூர் வாத் (வாத் என்றால் தாய் மற்றும் கம்போடிய மொழிகளில் கோயில் என்று பொருள்) கம்போடியா பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியில் இருந்த போது ஒரு பிரெஞ்சு ஆய்வாளனால் கண்டுபிடிக்கப்பட்டது.

கோயிலின் உட்புறத்திலும் அதைச் சுற்றியும் நெருக்கமாக வளர்ந்த மரங்களை வெட்டி அப்புறப் படுத்திக் கோயிலின் தோற்றத்தைக் வெளிப்படுத்த பல வருடங்கள் பிடித்தள்ளன.

இந்திய கலாசாரம் தென் கிழக்கு ஆசியா முழுவதும் பரவியிருந்ததற்கான சான்றாக இந்த கோயில் இடம் பெறுகிறது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பிரம்பென்னன் என்ற பெயரில் இன்னொரு சிவாலயம் இருக்கிறது. இந்துக்கள் நூறு வீதமாக வாழும் தீவாகப் இந்தோனேசியாவின் பாலித் தீவு இடம் பெறுகிறது. அதன் பக்கத்தில் மதுரா என்ற தீவும் இருக்கிறது இதில் கணிசமானளவு இந்துக்கள் வாழ்கிறார்கள்.

அங்கூர் வாத் சியம் றியப் என்ற நகரில் அமைந்துள்ளன. இங்கு வரும் பயணிகளின் வசதிக்காக பல நட்சித்திர விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 10.000 அறைகள் எல்லா விடுதிகளையும் கூட்டிப் பார்த்தால் இருக்குமென்று நம்பப்படுகிறது.

உலக அதிசயங்களில் ஒன்றான அங்கூர் வாத் கோயிலின் காரணமாக சியம் றியப் நகருக்கு நேரடி விமான சேவை வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிலிருந்து இலன்டனுக்கு நடக்கும் விமானப் பறப்பை கங்காரு சேவை என்று அழைப்பார்கள். கம்போடியா இந்தப் பாதையில் இல்லாவிட்டாலும் சுற்றுப் பயணிகளின் தேவைக்காகப் பறப்புக்கள் திருப்பி விடப்படுகின்றன.

வங்கிச் சேவைகள், பயணிகளுக்கான விடுதிகள், உள்ளுர் போக்கு வரத்து வசதிகள், சூதாட்ட மையங்கள், கடற்கரையோரத் தங்குமிடங்கள் என்பன கம்போடியாவில் நடக்கும் மாற்றங்களுக்குக் கட்டியம் கூறுகின்றன. இன்னொரு உலக அதிசயமான தொன்லே சாப் ஏரி அங்கூர் வாத் கோயிலுக்கு அண்மையில் இருக்கிறது.

இமய மலைப் பகுதியில் தொடங்கி வியற்நாம் நாட்டிற்கு உடாக தென் சீனகக்கடலில் பாயும் பெரு நதியின் நீர் தொன்லே சாப் ஏரியில் வீழ்கின்றது. பெரு நதியில் நீர் குறையும் போது ஏரியில் நீர் மட்டம் உயரும். பெரு நதியில் நீர் மட்டம் உயரும் போது ஏரி நீர் மட்டம் சம நிலைக்கு வந்து விடும்.

ஏரி என்பதை விட பெருங்கடல் என்பது மிகப் பொருத்தம். நெல் விளைச்சலை அடிப்படையாகக் கொண்ட விவசாய நாகரிகம் தொன்லே சாப் எரியைச் சுற்றி இருந்தற்கான சான்றுகள் தென்படுகின்றன. அங்கூர் வாத் கோயில் இதற்கு அண்மையில் கட்டப்படுவதற்குக் காரணம் இருக்கிறது.

தொன்லே சாப் எரியின் மீன் வளத்தை நம்பிப் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அதைச் சுற்றி வாழ்கின்றனர். ஏரியைச் சுற்றி வளரும் மரங்களில் பெரும் எண்ணிக்கையில் பறவைக் கூட்டங்கள் வாழ்கின்றன. அவற்றிற்கான உணவை இந்த ஏரி வழங்குகிறது.

அங்கூர் வாத் கோயிலின் புனருத்தாரணப் பணிகளில் இந்தியர்கள்,பிரெஞ்சுக்காரர்கள், ஜப்பானியர்கள் வேறு சில ஜரோப்பிய நாட்டவர்கள் இடைவிடாது ஈடுபடுகின்றனர். அழிவின் விழிம்பிற்குச் சென்று திரும்பிய கம்போடியா அழிவைச் சந்தித்த பிற நாடுகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கிறது.

மாமன்னன் ராஜேந்திர சோழன்.

கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும். 
1. விஜயாலய சோழன் (கி.பி. 848 முதல் 871 வரை) 
2. முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 871 முதல் 907 வரை) 
3. முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907 முதல் 950 வரை) 
4. கண்டராதித்த சோழன் (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன் (கி.பி. 956 முதல் 957 வரை) 
6. சுந்தர சோழன் (கி.பி. 957 முதல் 970 வரை) 
7. உத்தம சோழன் (கி.பி. 970 முதல் 985 வரை) 
8. மாமன்னன் ராஜராஜன் (கி.பி. 985 முதல் 1014 வரை) 
9. முதலாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1012 முதல் 1044 வரை) 
10. ராஜாதிராஜ சோழன் (கி.பி. 1018 முதல் 1054 வரை) 
11. இரண்டாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1051 முதல் 1063 வரை) 
12. வீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063 முதல் 1070 வரை) 
13. அதிராஜேந்திர சோழன் (கி.பி. 1067 முதல் 1070 வரை) 

பிற்கால சோழ மன்னர்கள் 
14. முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 முதல் 1120 வரை) 
15. விக்கிரம சோழன் (கி.பி. 1118 முதல் 1135 வரை) 
16. 2ஆம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1133 முதல் 1150 வரை) 
17. 2ஆம் ராஜராஜ சோழன் (கி.பி. 1146 முதல் 1173 வரை) 
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன் (கி.பி. 1166 முதல் 1178 வரை) 
19. 3ஆம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178 முதல் 1218 வரை) 
20. 3ஆம் ராஜராஜ சோழன் (கி.பி. 1216 முதல் 1256 வரை) 
21. 3ஆம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1246 முதல் 1279 வரை) 
இந்த 3ஆம் ராஜேந்திரனுக்குப் பிறகு சோழ நாடு என்னவாயிற்று என்பதை பிறகு இவனுடைய ஆட்சிக் காலம் பற்றி எழுதும்போது பார்க்கலாம் இப்போது இந்த விவரங்களோடு, இதில் காணப்படும் ஒவ்வொரு மன்னனைப் பற்றியும் சிறிய குறிப்புக்களைப் பார்ப்போம். 
மாவீரன் முதலாம் ராஜேந்திர சோழன் தஞ்சையை ஆண்ட புகழ்பெற்ற ராஜராஜ சோழனின் குமாரன். தமிழக வரலாற்றில் வேறு எவரோடும் ஒப்பிடமுடியாத அளவுக்குப் புகழ்பெற்ற அரசன். தந்தை ராஜராஜன் 1014இல் காலமான பிறகு சோழ அரசனாக முடிசூட்டிக் கொண்டவன் ராஜேந்திரன். ஆனால் வரலாற்று ஏடுகளில் ராஜராஜனுக்குக் கிடைத்த அளவுக்கு இந்த ராஜேந்திரனுடைய புகழ் வெளிவரவில்லையே ஏன்? 

ராஜேந்திரசோழனுடைய காலத்தில் சோழ நாட்டின் எல்லை வடக்கே கங்கைக் கரை வரை பரந்து விரிந்து கிடந்தது. கடல் கடந்தும் இந்த மாமன்னனுடைய ஆட்சியின் அதிகாரம் பரவியிருந்தது. இப்படிச் சொன்னால் மட்டும் போதுமா? எதுவரையில் இவனுடைய ஆட்சியின் எல்லை விரிந்து கிடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? ஆம்! தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். சோழ சாம்ராஜ்யம் பர்மா அதாவது இப்போதைய மியன்மார் கடற்கரை வரையிலும் பரவியிருந்தது. அந்தமான் நிக்கோபார் தீவுகளும் அவன் ஆட்சியின் கீழ் இருந்தன. லட்சத் தீவுகள், மாலத்தீவுகள் இவைகளும் இவனது ஆட்சியின் கீழ் இருந்தன. அது மட்டுமா? ஸ்ரீவிஜய ராஜ்யங்களான சுமத்ரா, ஜாவா, மலேயா தீபகர்ப்பம் தவிர தூரக்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தும் இவனது ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன. இவை தவிர சோழ கடற்படை வென்றெடுத்த நாடுகளும் பலப்பல. வங்கதேசம், இப்போதைய பிகார் மன்னன் மகிபாலனை வென்று அங்கும் தனது ஆட்சியை நிலைநாட்டினான் ராஜேந்திரன். 

ராஜராஜனின் மைந்தன் ராஜேந்திர சோழன். இவன் கி.பி.1012 முதல் 1044 வரை அரசாட்சியை நிர்வகித்து வந்தான். இவன் காலத்தில் சோழ் சாம்ராஜ்யம் பாரத வர்ஷம் முழுவதும், கடல் கடந்தும் பரவி நின்றது. இவனுக்குப் பரகேசரி எனும் பட்டப்பெயர் உண்டு. இவன் தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம். இவனது ராணிமார்கள் திருபுவன மாதேவியார், முக்கோகிலம், பங்கவன் மாதேவியார், வீரமாதேவி ஆகியோர். பிள்ளைகள் முதலாம் ராஜாதிராஜன், 2ஆம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன், பெண்கள் அருண்மொழிநங்கையார், அம்மங்காதேவியார். 

இப்படி திரும்பிய பக்கமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டிய ராஜேந்திர சோழன் தன் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒரு புதிய தலைநகரை உருவாக்கினான். அந்த தலைநகரம்தான் கங்கைகொண்ட சோழபுரம். அவன் வாழ்ந்த காலத்தில் கீழை ஆசிய கண்டத்தில் புகழ்வாய்ந்த சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தது சோழ சாம்ராஜ்யமே. மாமன்னன் ராஜேந்திரனின் தமிழ்ப் படை பல நாடுகளிடமிருந்தும் கப்பம் வசூலித்தது. அவை இப்போதைய தாய்லாந்து, கம்போடியா ஆகியவைகளும் அடங்கும்.
பொதுவாக தமிழ் மன்னர்கள் நாடுபிடிக்கும் ஆசையில் பிற நாடுகளை வென்று ஆக்கிரமிப்பது கிடையாது. ஆனால் ஒருசில மன்னர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களுக்கு இந்த ஆசை ஏற்பட்டு அதன் விளைவாகப் பல நாடுகளை வென்று ஆட்சி செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ராஜராஜசோழனும் அவனுடைய மகன் ராஜேந்திரனும் கடல்கடந்தும் சென்று மேலும் பல நாடுகளை வென்று வெற்றியைக் குவித்து வந்தார்கள். 

ராஜேந்திர சோழன் மற்ற எவரைக் காட்டிலும் அதிகமான கடல்கடந்த நாடுகளை வென்றெடுத்தவன். குறிப்பாக இவன்காலத்தில்தான் அந்தமான், லட்சத்தீவுகள், இந்தோசைனா என வழங்கப்பட்ட தாய்லாந்து, மலேயா, லாவோஸ், இந்தோனேஷியா, வியட்நாம் ஆகிய பிரதேசங்களையும் பர்மாவையும் வென்று தன் சாம்ராஜ்யத்தினுள் இணைத்துக் கொண்டான். 

ராஜேந்திர சோழனுக்கு முன்பாக பல்லவ மன்னர்களும்கூட கடல்கடந்து சென்று நாடுகளைப் பிடித்திருக்கிறார்கள். ஆனால் ராஜேந்திர சோழந்தான் பர்மா இந்தோசைனா பகுதிகளையும் வென்று வெற்றிக் கொடி நாட்டியவன். இந்த நாடுகள் அனைத்துமே ராஜேந்திர சோழன் காலத்தில் மட்டுமல்ல, அவனைத் தொடர்ந்து வந்த பல சோழ அரசர்கள் காலம் வரை அதாவது முதலாம் குலோத்துங்கன் காலம் வரை இவர்கள் ஆட்சியின் கீழ் இருந்திருக்கின்றன.

பல்லவர்கள் காலத்தைவிட ராஜேந்திர சோழன் காலத்தில் படையெடுத்துச் சென்ற அன்னிய மண்ணில் நமது கலாச்சாரத்தைப் பரப்பி, பல சிவாலயங்களை ஆங்காங்கே கட்டி வைத்தான். இன்றும்கூட தாய்லாந்து போன்ற இடங்களில் இவன் காலத்திய பழமையான உலக அதிசயங்களுக்கு ஈடான சிவாலயங்களைக் காண முடிகிறது. 

தஞ்சையில் அதிசயிக்கத்தக்க வகையில் தந்தை ராஜராஜன் கட்டிய ராஜராஜேச்சரம் கோயிலைப் போல தன்னுடைய புதிய தலைநகரமான கங்கைகொண்ட சோழபுரத்தில் தஞ்சைக் கோயிலைப் போன்றதொரு கோயிலைத் தானும் கட்டிவைத்தான். தன்னுடைய சாதனைகளின் காரணமாக இவன் பரகேசரி என்றும் யுத்தமல்லன் என்றும் விருதுகளைப் பெற்றான்.

ராஜராஜ சோழன் தன்னுடைய ஆட்சிக் காலத்திலேயே தன்னுடைய வீரம் செறிந்த மகனான ராஜேந்திரனை யுவராஜாவாக அங்கீகரித்து 1012இல் முடிசூட்டினான். ராஜராஜனுடைய இறுதிக் காலத்தில் இவ்விருவரும் செய்த சாதனைகள் அளப்பரியவை. மன்னன் ராஜராஜசோழன் சார்பாக தனையன் ராஜேந்திரன் சோழர் படைகளுக்குத் தலைமை தாங்கி வேங்கி, கலிங்கம் ஆகிய பிரதேசங்களின் மீது படையெடுத்து வெற்றி பெற்றிருக்கிறான்.

1012இல் யுவராஜாவாக அங்கீகரிக்கப்பட்டிருந்த போதும் ராஜேந்திரன் 1014இல்தான் அரசுரிமை பெற்று மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். தன்னுடைய தந்தை தன்னை யுவராஜாவாக அங்கீகரித்ததைப் போல ராஜேந்திரனும் 1018இல் தன்னுடைய மகனான ராஜாதிராஜனை சோழ இளவரசனாக அங்கீகரித்தான். அது தொடங்கி தன் தந்தைக்கு உதவியாக யுவராஜாவாக இருந்து அரசாட்சியைத் திறம்பட அடுத்த 26 ஆண்டுகளுக்கு நடத்தி வந்தான் ராஜாதிராஜன். மன்னனுக்குரிய அனைத்து அதிகாரங்களும் கொண்ட யுவராஜாவாக இவர்கள் ஆட்சிபுரிந்ததும் ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று. மன்னன் மரணமடைந்த பின்னர் யார் பட்டத்துக்கு வருவது என்ற வாரிசுரிமைப் போர் இதுபோன்ற நேரங்களில் வருவதற்கு வாய்ப்பு இல்லை அல்லவா? 
தொடக்க கால ராணுவ படையெடுப்புகளும் வெற்றிகளும். 
ராஜேந்திர சோழ மன்னனுடைய காலத்திய கல்வெட்டுகளிலிருந்து போர்களில் அவன் பெற்ற வெற்றிகள் குறித்த பல செய்திகள் கிடைக்கின்றன. கி.பி.1002ஆம் ஆண்டு முதல் தன் தந்தையின் காலத்திலேயே அவன் பல போர்களில் வெற்றி பெற்றிருக்கிறான். அப்படி அவன் படையெடுத்துச் சென்ற பெற்ற வெற்றிகளில் குறிப்பிடத்தக்கது ராஷ்டிரகூடர்களின் மீது படையெடுத்துச் சென்று வென்றதும் ஒன்று. அது தவிர தற்போதைய கர்நாடக மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் இருந்த மேலச் சாளுக்கியர்கள் நாடும், தென் கர்நாடகத்தில் கோலாப்பூர், பண்டரிபுரம் ஆகிய பகுதிகளும் இவன் வெற்றி பெற்ற பகுதிகள்.

மேலைச் சாளுக்கிய மன்னனான சத்யாசிரியன் அவனுடைய வாரிசு 2ஆம் ஜெயசிம்மா ஆகிய இடங்களையும் வெற்றி கொண்டான். துங்கபத்திரை நதியைத் தாண்டி இந்த நாட்டினை அடைந்து போரிட்டான். சாளுக்கியர்களின் தலைநகரமும் ராஜேந்திரன் வசம் வந்தது. சாளுக்கியர்களின் பரந்து விரிந்து கிடந்த நாட்டில் ரெய்ச்சூர் பகுதிகளையும் கிருஷ்ணா துங்கபத்ரா ஆகிய நதிகளைக் கடந்து சென்று போரிட்டு வெற்றியடைந்திருக்கிறான். மைசூருக்கு வடமேற்கில் இருந்த பிரதேசங்களையும் அங்கிருந்த அரசர்களைத் தோற்கடித்து மலைப்பகுதிகளுக்கு விரட்டிவிட்டு ராஜேந்திரன் பிடித்துக் கொண்டான். வெற்றி பெற்று பிடித்துக் கொண்ட பகுதிகளில் தனது வெற்றியைக் குறிக்கச் சில இடங்களில் சிவாலயங்களையும் எழுப்பினான். தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தில் ஐதராபாத்துக்கு வடக்கே இருந்த பகுதிகளையும், கர்நாடகப் பகுதிகளான கோலாரையும் பிடித்துக் கொண்டான். கோலாரில் தமிழில் வெட்டப்பட்ட ஒரு கல்வெட்டுப் பகுதியும் காணக் கிடைக்கிறது. 

இலங்கைப் படையெடுப்பு.

ராஜேந்திர சோழனின் தந்தையார் ராஜராஜ சோழன் காலத்தில் இலங்கையை முழுமையாகப் பிடிக்க வில்லை. மேலும் சில பகுதிகள் சோழ சாம்ராஜ்யத்துக்கு உட்படாமலே இருந்தன. அதை பூர்த்தி செய்து விட்டுப்போன பகுதிகளையும் பிடித்துவிட வேண்டுமென ராஜேந்திரன் இலங்கைக்குப் படையெடுத்தான். கி.பி.1018ஆம் ஆண்டு இந்தப் படையெடுப்பைத் துவக்கினான் ராஜேந்திரன். முன்பு பாண்டிய மன்னர்களின் செல்வங்களையும், பொன்னாபரணங்களையும் கவர்ந்து வைத்திருந்த இலங்கை அரசர்களிடமிருந்து ராஜேந்திரன் அவற்றை மீட்டதாகத் தெரிகிறது. இலங்கை அரசனின் தலைக் கிரீடத்தையும், ராணியையும் அவரது மகளையும் கூட ராஜேந்திரன் பிடித்துக் கொண்டதாகத் தெரிகிறது. சிங்கள ராஜா மகிந்தன் சிறைபிடிக்கப்பட்டு சோழ நாட்டுக்கு அனுப்பப்பட்டான். அந்த மகிந்தனுடைய துரதிர்ஷ்டம் அவன் சோழ மன்னன் சிறையில் பன்னிரெண்டு ஆண்டு காலம் சிறைப்பட்டுக் கிடந்து அங்கேயே மாண்டு போனான். இலங்கையின் "மகாவம்சமும்" இந்தச் செய்திகளை உறுதி செய்கின்றன. எதற்காக இப்படி சோழ மன்னன் இலங்கை மீது படையெடுத்து, அந்த ராஜாவைச் சிறைப்பிடித்து, ராணியையும், மகளையும் சோழ நாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும்? இந்தக் கேள்வி நமக்கு எழத்தானே செய்யும். சோழ நாட்டு வணிகர்கள் தங்கள் கப்பல்களில் பொருட்களை ஏற்றிக் கொண்டு இலங்கைக்கும், தூரக்கிழக்கு நாடுகளுக்கும் செல்லும் வழியில் (இப்போது மீனவர்களைத் துன்புறுத்துவது போலவே) அப்போதும் அந்த வியாபாரக் கப்பல்களை வழிமறித்து கொள்ளையடித்தும், வியாபாரிகளை சிறையில் அடைத்தும் துன்புறுத்தியும் கொன்றும் வந்திருக்கின்றனர். இந்த அநியாயத்தை (இப்போது போல்) தட்டிக் கேட்காமல் இருக்க முடியுமா? சோழ தேசத்தை ஆளும் மன்னன் எனும் முறையில் ராஜேந்திரன் தன் படைகளை அழைத்துச் சென்று இதுபோன்ற செயல்களுக்கு ஒரு முடிவு கட்டினான். இது பற்றி கோலார் கல்வெட்டு செய்திகளும் கிடைத்திருக்கின்றன.

ராஜேந்திரனின் சிங்கள நாட்டு வெற்றியை அடுத்து அங்கு சிறைப்பிடிக்கப்பட்ட மகிந்தனுடைய மகன் ஒருவன் தமிழ் மன்னர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டான். தமிழர் படைகளுக்கும் சிங்கள படைகளுக்கு மிடையே பெரும் யுத்தமொன்று இலங்கையில் நடந்தது. அந்த யுத்தத்தில் மிச்சமிருந்த சிங்கள எதிர்ப்புகளையும் முறியடித்துவிட்டு இலங்கை முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இலங்கையில் தமிழர் ஆட்சி 2ஆம் குலோத்துங்கன் ஆட்சிக் காலம் வரை தொடர்ந்தது.

கி.பி.1041இல் மறுபடியும் ராஜேந்திர சோழன் இலங்கைக்குச் சென்று அங்கு தமிழர் படைகளுக்கு எதிராக உருவாகியிருந்த கலகத்தை ஒடுக்கினான். சிங்களர்களைத் தூண்டிவிட்டு தமிழர்களுக்கு எதிராகப் போரிட்டவன் பெயர் விக்கிரமபாகு என்பவன். இந்த விக்கிரமபாகுவும் சில நாட்களுக்குப் பிறகு கலவரத்தில் மாண்டுபோனான். தமிழ் மன்னருக்கு எதிராக இலங்கையில் சிங்களர் தவிர வேறு சிலரும் கலகங்களில் ஈடுபட்டு வந்தனர். சிங்களர்களுக்கு உதவியாக பாண்டிய நாட்டிலிருந்து ஓடிவந்து புகலிடம் தேடிக்கொண்ட பாண்டிய நாட்டு இளவரசர்களும், வடக்கே கன்னோஜ் பகுதிகளிலிருந்து வந்த சிற்றரசன் ஒருவனும் இருந்தனர். இவர்கள் அனைவரையும் சோழர் படைகள் வெற்றி கண்டன. ராஜராஜன் காலத்தில் நிறைவேறாமல் போன இலங்கையை முழுமையாகப் பிடித்துக் கொள்ளும் திட்டம் அவர் மகன் ராஜேந்திரன் காலத்தில் நிறைவு பெற்றது. 

பாண்டியர்களும் சேரர்களும்.
 

கி.பி.1018இல் ராஜேந்திர சோழன் தன்னுடைய பிரம்மாண்டமான சோழர் படையுடன் அதற்குத் தலைமை ஏற்று பாண்டிய, சேர நாடுகளுக்குச் சென்றான். அப்படி படையெடுத்துச் சென்ற ராஜேந்திர சோழன் பாண்டிய நாட்டின் நன்முத்துக்களையும், முத்துக்குளிக்கும் துறைமுகங்களையும் பிடித்துக் கொண்டதோடு மேற்கில் இருந்த மலைகளைத் தாண்டிச் சென்று சேர நாட்டினுள் நுழைந்து அந்த நாட்டை வெற்றி கொண்டான். இந்த பாண்டிய, சேர நாட்டுப் பகுதிகள் ஏற்கனவே ராஜராஜ சோழன் காலத்தில் சோழ மண்டலத்துக்குட்பட்டவைகளாக இருந்தும், ராஜேந்திரன் மறுமுறையும் அங்கெல்லாம் சென்று தங்கள் ஆட்சியை உறுதி செய்துகொண்டார். அப்படி ராஜேந்திரன் பிடித்துக் கொண்ட பாண்டிய மண்டலத்து அதிபதியாகத் தன்னுடைய மகனை ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் எனும் பட்டப்பெயருடன் நியமித்தார் நிர்வாகியாக நியமித்தார். 

மேலைச் சாளுக்கிய யுத்தங்கள். 

கி.பி.1021 ராஜேந்திர சோழன் தனது கவனத்தை மேலைச் சாளுக்கியர்கள் பக்கம் திருப்பினார். 1015இல் 2ஆம் ஜெயசிம்மா என்பவன் மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். அவன் ஆட்சிக்கு வந்ததும் தனக்கு முந்தைய அரசனான சத்யாஸ்ரயன் இழந்தவற்றை மீட்டெடுக்க வேண்டுமென்று முயற்சி செய்தான். அந்த சத்யாஸ்ரயன் சோழர்களோடு நடந்த யுத்தத்தில் தோற்று ஓடியவன். ஆனால் எப்படியோ ராஜராஜ சோழனின் அனுதாபத்தைச் சம்பாதித்துக் கொண்டு சோழ சாம்ராஜ்யத்துக்குக் கட்டுப்பட்டு கப்பம் கட்டும் சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டு ராஜ்யத்தை மீண்டும் பெற்றுவிட்டான். இந்த 2ஆம் ஜெயசிம்மா ஆட்சிக்கு வந்தவுடன் தானே சுயமாக செயல்படத் தொடங்கினான்; காரணம் ராஜேந்திர சோழன் அப்போது தனது கவனத்தை இலங்கை மீதும், பாண்டிய சேரர்கள் மீதும் செலுத்திக் கொண்டிருந்தான். இந்த சமயம் பார்த்து ஜெயசிம்மா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்தான்.
மேலைச் சாளுக்கியர்கள் கர்நாடகத்தின் வடக்கு, மராட்டியத்தின் பகுதிகளைக் கொண்டது. கீழைச் சாளுக்கியர்கள் என்பவர்கள் தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் வடக்கில் தென்னிந்தியாவின் கிழக்குப் பகுதியிலும் ஆட்சி செய்தவர்கள். மேலைச் சாளுக்கிய ராஜ்யத்தை ஆண்ட இந்த ஜெயசிம்மாவுக்குக் கீழைச் சாளுக்கியர் ஆட்சியிலும் தலையிட்டுக் குழப்பம் விளைக்க எண்ணினான். அந்த வேங்கியில் விமலாதித்தன் என்பவன் அரசனாக இருந்தான். அவன் காலமான பிறகு அவனது மகனும் சோழ மன்னர்களின் ஆதரவு பெற்றவனுமான ராஜராஜ நரேந்திரன் என்பான் ஆட்சிக்கு வரவேண்டும். ஆனால் ஜெயசிம்மா என்ன செய்தான் இவனுக்கு எதிராக அவன் சகோதரன் விஜயாதித்தன் என்பவனை ஆதரிக்கத் தொடங்கினான். விமலாதித்தன் ராஜராஜ சோழனின் மகளான குந்தவையை திருமணம் செய்து கொண்டவன். மாமன்னனின் மாப்பிள்ளை. விமலாதித்தனின் இரண்டு மகன்களில் ஒருவன்தான் இப்போது வேங்கி ஆட்சிக்கு வரும் ராஜராஜ நரேந்திரன். மற்றொருவனை ஜெயசிம்மா ஆதரித்தான். இந்த நிலையில் சோழ மன்னர்கள் யாரை ஆதரிப்பார்கள்? ராஜேந்திரன் ராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான். இந்தப் போட்டியில் வேங்கி நாட்டில் உள்நாட்டுக் கலகம் உருவானது. அண்ணன் தம்பிக்கிடையே பனிப்போர். ராஜேந்திர சோழனின் ஆதரவு பெற்ற ராஜராஜ நரேந்திரன் உள்நாட்டுப் போரில் வென்றான். வேங்கி அவன் வசம் வந்ததோடு, சோழர்களின் கரங்களும் வலுப்படுத்தப்பட்டன. 

ராஜேந்திர சோழன் தன்னுடைய படைகளை இரண்டாகப் பிரித்து ஒன்றை மேலைச் சாளுக்கிய ராஜ்யத்துக்கும், மற்றொன்றை வேங்கிக்கும் அனுப்பி வைத்தான். மேற்கே ஜெயசிம்மாவை எதிர்கொள்ள சென்ற படைகள் மாஸ்கி எனுமிடத்தில் நடந்த போரில் அவனைத் தோற்கடித்து வெற்றி பெற்றது. தொடர்ந்து சாளுக்கிய நாட்டின் தலைநகருக்கும் சென்று அங்கு அங்கிருந்த மற்ற சாளுக்கியர்களையும் தோற்கடித்தது. இந்தப் போரில் ஜெயசிம்மாவின் பெரிய தளபதிகள் பலரை சோழர் படைகள் போரில் கொன்றுவிட்டன. மகாசமந்தா என்றும் தண்டநாயகா என்றும் புகழ்பெற்ற தளபதிகள் கொல்லப்பட்டனர். ஜெயசிம்மாவின் பேராசைக்காகத் தங்கள் உயிரை ஈந்தனர் இந்த வீரம் செறிந்த தளபதிகள். இந்த போரின் மூலம் இரட்டைபாடி நாடு எனப்படும் மேலைச் சாளுக்கிய நாடு சோழரின் காலடியில் வீழ்ந்தது. இந்த சகோதர யுத்தத்தில் வெற்றிபெற்ற ராஜராஜ நரேந்திரனை, ராஜேந்திர சோழன் வடக்கே கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றிக்கொடி நாட்டித்திரும்ப வரும்போது வேங்கிநாட்டின் பட்டாபிஷேகத்தைச் செய்த கையோடு தன் மகளான அம்மங்கா என்பவரையும் அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
கி.பி.1031இல் இரட்டைபாடி நாட்டார் (மேலைச் சாளுக்கியர்) மீண்டும் வேங்கி மீது படையெடுத்து வந்தனர். அந்தப் போரில் ராஜேந்திர சோழனின் மருமகனும் வேங்கியின் மன்னனாக இருந்தவனுமான ராஜராஜ நரேந்திரன் தோற்று ஓடிப்போனான். சாளுக்கியர்களின் ஆதரவோடு விஜயாதித்தன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தான். தோற்றுப் போன ராஜராஜ நரேந்திரன் தன் மாமனாருக்கு மீண்டும் உதவி கேட்டு ஆளனுப்பினான். இந்த முறை ராஜேந்திர சோழன் தன்னுடைய வீரம் செறிந்த மகனான ராஜாதிராஜனை பெரும் படையோடு வேங்கிக்கு அனுப்பினான். அப்போது நிகழ்ந்த பெரும் போரில் சோழர் படைகள் வெற்றி பெற்றன. நரேந்திரன் மீண்டும் கி.பி.1035இல் அரசனானான். விஜயாதித்தன் இரட்டைபாடி நாட்டுக்குப் போய் அடைக்கலமானான்.

ராஜேந்திர சோழன் காலத்தில் மேலைச் சாளுக்கியர்கள் பெரும் தொல்லையாகவே இருந்திருக்கிறார்கள். சத்யாஸ்ரயன் அவன் மகன் ஜெயசிம்மா ஆகியோர் தவிர அவர்களுக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசர்களான கடம்பர்கள், ஹொய்சாளர்கள், பாணர்கள், வைதும்பர்கள், கங்கர்கள் என அனைவருமே தமிழ் சாம்ராஜ்யத்துக்கு எதிரிகளாக இருந்தார்கள். இவற்களையெல்லாம் வென்று ராஜேந்திரன் பெட்ட பட்டங்கள் "முடிகொண்ட சோழன்", "ஜெயசிம்ம சரபன்", "மன்னைகொண்ட சோழன்" மன்னை என்பது சாளுக்கிய தலைநகர் மான்யகேட்டாவைக் குறிக்கும். தமிழில் இதை மன்னைகடகம் என்றழைப்பர், "இரட்டைபாடி கொண்ட சோழன்", "நிரூபதிவாகரன்" (நிரூபதுங்கன் எனும் ஹொய்சாளனை வெற்றி கொண்டதால்) இப்படிப் பல

இப்படிப் போர்க்களங்களைக் கண்டே ராஜேந்திரனுக்கு வயது முதிர்ந்து விட்டது. தன்னுடைய வயதான காலத்திலும் சாளுக்கியர்கள் மீது படையெடுத்துச் செல்ல நேர்ந்தது. காரணம் சாளுக்கிய 2ஆம் ஜெயசிம்மாவும் அவனுடைய மகனான சோமேஸ்வரனும் சோழ நாட்டு எல்லைப் பிரதேசங்களில் நுளம்பவாடி, கங்கவாடி எனும் கன்னட நாட்டுப் பகுதிகளில் கலவரம் ஏற்படுத்தி வழிப்போக்கர்களிடமிருந்து சுங்கம் வசூல் செய்யத் தொடங்கினர்.

ராஜேந்திர சோழனும், அவனுடைய மகனும் யுவராஜாவுமான ராஜாதிராஜ சோழனும் அவர்கள் மீது படையெடுத்து அவர்களை வென்று ஜெயசிம்மாவைப் போர்க்களத்தில் கொன்று, பல தளபதிகளைக் கொன்றும், சாளுக்கிய தலைநகரை வசப்படுத்திக் கொண்டு சித்ரதுர்கம் எனுமிடத்தில் நடந்த போரில் மாபெரும் வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றிக்கு ராஜேந்திரனின் மகனும் யுவராஜாவுமான ராஜாதிராஜன் காட்டிய வீரமும், போர்த்திறனும் மன்னன் ராஜேந்திரனுக்குத் திருப்தி அளித்தது. இதுதான் யுவராஜா ராஜாதிராஜனின் முதல் பெரிய யுத்தம். யுத்தத்தில் தான் பெற்ற வெற்றிப் பரிசாக இவன் தன் தந்தைக்கு இரண்டு துவாரபாலகர் சிலைகளைக் கொடுத்தனுப்பினான். அதில் ஒன்று கங்கைகொண்ட சோழபுரம் கோயில் வாயிலில் வைக்கப்பட்டது. இன்னொன்று திருபுவனம் சரபேஸ்வரர் கோயிலில் இருக்கிறது. இந்த கோயில் பின்னாளில் 3ஆம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டது. கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்த துவாரபாலகர் தற்போது தஞ்சை பெரிய கோயில் கலைப்பொருள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவரங்கள் எல்லாம் தஞ்சை பெரிய கோயில் ராஜேந்திர சோழன் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டன.

சோழர்களிடம் தோற்ற சாளுக்கியர்கள் தொடர்ந்து சோழர்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு முறையும் இவ்விரு சாம்ராஜ்யங்களுக்குள் யுத்தம் நடைபெறும் போதெல்லாம் சாளுக்கியர்களுக்குத் தோல்வியும், சோழர்களுக்கு ஏராளமான செல்வங்களும், பொன், நகைகள், குதிரைகள், யானைகள் மற்ற யுத்த தளவாடங்கள் இவைகள் அதிக அளவில் கிடைத்தன. இது தவிர சாளுக்கியர்கள் சோழர்களுக்கு பெரும் தொகையை கப்பமாகக் கட்டவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. சோழர்களும் ஒவ்வொரு முறையும் அவர்கள் பால் இரக்கப்பட்ட ராஜ்யத்தையும், மனைவி பிள்ளை குட்டிகளையும் அவர்களோடு சேர்ந்து கொள்ள அனுமதித்திருக்கின்றனர்.

தன் தந்தையார் கட்டிஆண்ட தஞ்சை சாம்ராஜ்யத்தின் தலைநகரை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றிக் கொண்டாராயினும், ராஜேந்திர சோழன் தன் தந்தையுடையதும் மற்ற அவர்களது முன்னோர்களின் சாதனைகளைப் போற்றி மதித்து வந்திருக்கிறார். தன் தந்தையுடையதும், தன்னுடையதுமான போர் வெற்றிச் சாசனங்களை தஞ்சைக் கோயிலில்தான் அவர் வெட்டிவைத்திருக்கிறாரே தவிர கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் இல்லை. அவருக்குப் பின் வந்த சோழ மன்னர்களும் தங்கள் தலைநகரத்தையும், முடிசூட்டிக் கொண்டதையும் கங்கைகொண்ட சோழபுரத்தில் வைத்துக் கொண்டாலும், கல்வெட்டுகளை மட்டும் தஞ்சை கோயிலில்தான் எழுதி வைத்தார்கள். ராஜேந்திர சோழன் கங்கை, கடாரம் முதலிய நாடுகளை வென்றதன் விளைவாக அவருக்கு "பூர்வதேசமும், கங்கையும் கடாரமும் கொண்ட ஐயன்" எனும் பட்டப் பெயரைப் பெற்றார். 

கங்கை படையெடுப்பு.

மேலை சாளுக்கியர்களையும், கிழக்கில் வேங்கியையும் கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு மாமன்னன் ராஜேந்திரன் தன்னுடைய சாம்ராஜ்யத்தின் பெருமையையும், பலத்தையும் காட்டும் பொருட்டு மேலும் பல இடங்களுக்குத் தன் படைகளை அனுப்பி வைத்தான். கி.பி.1019இல் சோழப் படைகள் கலிங்க நாட்டின் வழியாக (இப்போதைய ஒடிஷா) கங்கைக் கரை நோக்கி நகர்ந்தது. அந்தப் படைக்குத் தலைமை தாங்கி ராஜேந்திர சோழ மன்னனே தெற்கே தொடங்கி கோதாவரி நதிக்கரையில் வந்தார். முன்னேறிச் செல்லும் சோழப் படையைப் பின்னாலிருந்து வேறு எந்த நாட்டுப் படையாவது வந்து தாக்கிவிடாமல் இருக்க மன்னர் இப்படி ஏற்பாடு செய்துகொண்டு வந்தார். வங்காள தேசத்தை அடைந்த சோழர் படைகள் அங்கு மன்னன் மகிபாலனை எதிர்கொண்டு போரிட்டு வென்றனர்.

இந்தப் படையெடுப்பு பற்றி திருவாலங்காடு செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அதன்படி இந்தப் படையெடுப்பு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றதாகவும், இந்தப் படை செல்லும் வழிகளில் எல்லாம் பல நாடுகள் சோழர் படையின் வலிமையை உணர்ந்து சரணடைந்ததாகவும் தெரிகிறது. இந்தப் படையெடுப்பில்தான் சோழர்கள் ரணசூரன் என்பவனைத் தோற்கடித்து கங்கை நீரை அவனைவிட்டுச் சுமக்கச் செய்து சோழ நாட்டுக்குக் கொண்டு வந்ததாகத் தெரிகிறது.

வடக்கே படையெடுத்துச் சென்று, அங்கெல்லாம் வெற்றிகளைக் குவித்த சோழப் பேரரசனுக்கு அங்கிருந்து மேலும் பல புதிய நாடுகளுக்கு வழி தெரிந்து அங்கெல்லாம் செல்லத் தொடங்கினான். அப்படி அவன் செல்லும் வழியில் கலிங்கம் அதாவது இப்போதைய ஒடிஷா, வங்கதேசம், அசாம் முதலான பகுதிகளைத் தாண்டி பர்மா வரை சென்றான். அப்படி இவன் சென்ற வழியில் இருந்த வடமதுரை, கன்யாகுப்ஜம், சிந்து ஆகிய பிரதேசங்களும் சோழர் வசமாயின. சோழர் படையில் தரைப்படை எத்தனை வலிமையானதோ, அதே அளவுக்கு கடற்படையும் வலிமையானதாக இருந்ததால், கடல்கடந்து மட்டுமல்ல, நாட்டின் கிழக்கு மேற்குப் பகுதிகளும் சோழர் வசமாயின. சோழர்களிடம் தோற்ற அரசர்கள் வரிசை மிக நீண்ட வரிசை.

ராஜேந்திரனின் சோழர்படை வென்ற பகுதிகள் அனைத்தும் முதலில் சோழப் பேரரசோடு இணைத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் அவைகள் சோழர்களுக்கு அடங்கிய கப்பம் கட்டும் சிற்றரசர்களாக அங்கீகரிக்கப்பட்டுத் தனித்து அரசாள அனுமதிக்கப்பட்டனர். சோழர்களின் அன்னிய நாட்டு வணிகங்களில் இந்த சிற்றரசுகளும் பங்கு பெற்றன. ராஜேந்திரனுக்குப் பிறகும் மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை இந்த ஏற்பாடு தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்தன. 

தென்னாட்டில் சோழர்களின் வலிமை என்ன என்பது இவர் காலத்தில்தான் வடக்குப் பகுதி ராஜ்யங்களுக்குப் புரிந்தது. இத்தனை வலிமை பெற்றிருந்தும் சோழர்கள் தாங்கள் வென்ற பகுதிகளைத் தங்களுடையதாக ஆக்கிக் கொள்ளாமல் சிறிது காலத்தில் அவர்களிடமே திரும்பக் கொடுத்து தங்கள் ஆளுமையின் கீழ் சுதந்திரமாக ஆள வழிவகுத்துக் கொடுத்த பெருந்தன்மையை புரிந்து கொள்ளலாம்.

கடல்கடந்த படையெடுப்புகள்.

மாமன்னன் ராஜேந்திரன் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் கி.பி.1025இல் சோழ கடற்படையைக் கொண்டு கடல்கடந்து சென்று ஸ்ரீவிஜய ராஜ்யம், கடாரம் முதலிய நாடுகளை வெற்றி கொண்டிருக்கிறான். தவிர சுமத்ரா, மலாயா வளைகுடா, இப்போது மலேயாவில் உள்ள கேடா ஆகிய பகுதிகளையும் வெற்றி கொண்டார். இதில் ஸ்ரீவிஜய ராஜ்யம் முன்பு சோழர்களோடு நல்ல உறவில் இருந்திருக்கிறது. ராஜராஜ சோழன் காலத்தில் இந்த ஸ்ரீவிஜய ராஜ்யத்தின் மன்னராக இருந்த விஜயதுங்கவர்மன் என்பவனை நாகப்பட்டினத்தில் சூடாமணி விஹாரம் எனும் புத்த ஆலயத்தைக் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கியிருந்தார். அப்படி இருந்தும் அந்த ஸ்ரீவிஜய ராஜ்யத்தின் மீதும் ராஜேந்திரன் படையெடுத்து அதனைப் பிடித்துக் கொண்டது ஏன் என்பது தெரியவில்லை.

ராஜேந்திர சோழனின் இறுதி நாட்கள்.

 ராஜேந்திர சோழனின் வாழ்நாட்கள் முழுவதும் போரும், போர்க்களமுமாகக் கடந்து போயிற்று. அப்படி அவன் படையெடுத்துச் சென்ற இடங்களில் எல்லாம் மாபெரும் சாம்ராஜ்யங்கள் சரிந்து சோழர் வசமாயின. மன்னனுக்கு வயது அதிகமாகி மூப்பு அடைந்த போது அவனுடைய பிள்ளைகள் படையெடுப்புகளைத் தாங்களே தலைமை வகித்து முன்னின்று நடத்தலாயினர். தன் மக்கள் போரில் சூரர்களாக இருந்து வெற்றிகளைக் குவித்து வருவது கண்டு வயது முதிர்ந்த ராஜேந்திரன் மனமகிழ்ச்சியடைந்தான். மன்னனின் மூப்பு கண்டு பாண்டியர்களும், சேரர்களும் கலகம் விளவிக்க முயன்றனர். ஆனால் மன்னன் தானே இவற்றை முன்னின்று அடக்கினான். இலங்கையிலும் உருவான கலகத்தைத் தன் பலம் கொண்டு மன்னன் அடக்கி வைத்தான். 

ராஜேந்திர சோழன் விட்டுச் சென்றவை. 

மாமன்னன் ராஜேந்திரனின் இறுதி நாட்கள் மகத்தானவை. அவன் காலத்தில்தான் சோழ நாடு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் பரந்து விரிந்து கிடந்தது. சக்கரவர்த்திக்கு அவனுடைய மகன்கள் உற்ற துணையாக இருந்து அவற்றை காத்து வந்தனர். இரக்கம், இறையுணர்வு, பிறர்க்கு உதவுதல், மக்களின் நலன் பேணுதல் என்று இவர்கள் காலம் பொற்காலமாக இருந்திருக்கிறது. எல்லவற்றையும் விட ராஜேந்திரனின் பெருமைமிக்க குணமாக விளங்கியது அவன் வென்ற நாடுகளைத் தோற்ற அரசர்களிடமே பின்னர் ஒப்படைத்ததுதான். என்ன பெருந்தன்மை ராஜேந்திரனுக்கு. தமிழகத்தில் பஞ்சபூதத் தலங்களில் வாயுவின் தலமாகக் கருதப்படுவது காளஹஸ்தி. 12ஆம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழ மன்னரால் கட்டப்பட்ட இந்த ஆலயம் இன்றும் தலை நிமிருந்து நின்று தமிழனின் பெருமையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

 ராஜேந்திர சோழனின் காலம் தமிழரின் பொற்காலம், தமிழகத்தின் பொற்காலம், மக்கள் நலனுக்கு பொற்காலம், என்றும் மக்களால் மறக்கமுடியாத பொற்காலம் எனலாம். வாழ்க மாவீரன் ராஜேந்திரன் புகழ்!