Wednesday, November 26, 2014

சித்தன் ரகசியம் (6)


இந்த வயித்தை எப்படி அப்படி வச்சிகிறது? என்று கேட்கும் போது, “தினசரி காலைல கோயிலுக்கு போ, அதுவும் பெருமாள் கோயிலுக்கு போ... தீர்த்தம், துளசி, சடாரி, பொங்கல்,சுண்டல்னு அஞ்சும் அங்க தான் கிடைக்கும். தாயார் சன்னதில மஞ்சள், குங்குமம் கொடுப்பாங்க. அதுவே உன்னை ஆரோக்கியமா வச்சுக்க போதுமானது என்றாராம்! எப்படி என்ற கேள்விக்கு அவரின் பதில்...

பரிமள சித்தர் சொன்ன பெருமாள் கோவில் பிரசாதத்தில் வயிற்றுக்கு சுகம் தரும் விஷயங்கள் மறைமுகமாக உள்ளன.

தீர்த்தத்தில் கலந்திருக்கும், பச்சை கற்பூரமும், ஏலக்காயும் வயிற்றில் உள்ள கிருமிகளை கொள்ளும் தன்மை உண்டு.

வெண்பொங்கலில் இருக்கும் நெய் - உடலுக்கு தேவையான கொழுப்பையும், மிளகும் சீரகமும் உடலுக்கு மிதமான குளிர்ச்சியை தந்து செரிமானத்தையும் தந்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். சீராக அகத்தை வைத்திருக்க உதவும் என்பதால் தான் "சீரகம்" என்ற பெயர் வந்தது போலும்.

துளசி ஒரு அற்புத மூலிகை....இது சற்று உஷ்ணத்தைக் குணமாக கொண்டது. ஆனாலும், இந்த உஷ்ணம் தான் கபம் கட்டாமலும், ஜலதோஷம் மற்றும் சீதளம் தொடர்பாய் வரும் நோய் நொடிகளில் இருந்தும் காப்பாற்றும்.

மஞ்சளும், குங்குமமும் கூட சிறந்த ஆன்டிபயோடிக் தான், மஞ்சளின் குணமும், அதன் நெடியுமே நம் உடலில் மேல் இருக்கும் கிருமிகளை அழிக்க வல்லது.

இது போக கோயிலில் தரப்படும் சுண்டல் என்ற புரதச்சத்தும் உடம்புக்கு தேவையான இதர முக்கிய சத்துக்களையும் தன்னகத்தே உடையது.
சுண்டல் எனும் போது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பயறு வகைகள்.. இதில், கொண்டைக்கடலை, பட்டாணி, கடலைப்பருப்பு என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோளின் ஆதிபத்தியம் உடையவை.

இப்படி, பிரசாதத்திற்கு பின்னாலே சுவை மற்றும், பசியாற்றும் தன்மை கடந்து ஒரு ஆரோக்கியமான விஷயங்கள் பல புதைந்துகிடக்கின்றன.
இப்படி ஆரோக்கிய உணவு உண்ணுபவர்களின் வயிறு சுத்தமாக இருக்கும், அளவாகவும் மிகச்சரியான வேளைக்கும் சாப்பிடுவதால் வாயு தோன்றாது. அமிலம், உப்பு, சர்க்கரை எல்லாமே தேவைக்கு மிகாது. இதனால் வியர்வை நாறாது. மலமும் துர்குணம் கொள்ளாது.

தினம் கோயிலுக்கு சென்று சாமியார்தனமாய் வாழ்பவர்களுக்கே இப்படி எனும்போது...!

உப்பு, புளி , காரம் சேர்க்காமல் இயற்கை உணவு மட்டுமே உட்கொள்ளும் பரிமள சித்தர் மேனி எப்படி துர்நாற்றம் என்கிற ஒன்றை சந்திக்க முடியும்...?

No comments:

Post a Comment