Monday, September 12, 2011

புதிய உலகின் உத்தரவு....அதென்ன ??


நாம் அனைவரும்  உள்ளூர் அரசியல் , உலக அரசியல் தான் இதுவரை அறிந்திருக்கிறோம். அதை வைத்து தான் உலக விடயங்கள் உற்றுநோக்கப்படுகின்றன . ஆனால்  அனைவரும் அறிந்திருக்காத உலக மர்மங்கள் இருக்க உலக  தலைவர்கள் , கண்ணிற்க்கு தெரியாத நாம் கேள்விப்படாத உலக தலைவர்கள் , உலக குழுக்கள் , மூளைச்சலவை செய்யப்படும் மனிதன் , அடங்கிய ஊடகங்கள் அனைத்தையும் பற்றி ஒரு தொடராக எழுத முடிவு செய்துள்ளேன்
.==================================================================================

உலகத்தின் மர்ம முடிச்சுகள் எவளவோ அவிழப்படாமல் இருக்கும் போது உலக நடப்புகள் , உலக அரசியல் , ஆட்சி ரகசியங்கள் என பல அவிழப்படாமல்  இருக்கின்றன . உள்ளூர் அரசியல் வாதிகளுக்கு கூட தெரியாத பல விடயங்கள் இந்த உலகில் நடக்கின்றன . அவர்கள் எல்லாம் நாட்டு தலைவர்களுக்கு கீழேயே தவிர நாட்டு தலைவர்கள் யாருக்கு கீழே என்பதை அறிந்திருக்கவில்லை . அரசியல் ஆய்வாளர்களும் அறிந்திருக்க மாட்டார்கள் .

நிலவில் முதல் அமெரிக்கன் காலடி எடுத்து வைத்ததில் இருந்து செப்டெம்பர் 11 தாக்குதல் வரை அனைத்தும்  மர்மம் .  எனது பழைய பதிவில் அமெரிக்காவின் ஒரு மர்ம இடம் ஏரியா 51 பற்றி பார்த்திருந்தேன் .

அது போன்ற ஒரு இடம் தான் அமெரிக்க கோலாரிடோவில் அமைந்துள்ள டென்வர் விமான நிலையம் .  டென்வேர்விமான நிலையம்   உலகின் மூன்றாவது மிகப்பெரிய விமான நிலையம் என இடம் பெற்றுள்ளது .

கட்டி முடிக்கப்பட்ட பிரதான விமான நிலையம் இருக்கும் போதே இன்னொரு விமான நிலையம் கட்டப்பட்டது . ஆனால் எந்த வித வசதிகளும் இல்லாது காணப்படும் புதிய விமான நிலையம் அதன் வடிவத்திலேயே கேள்வி எழுப்புகிறது . உலகயே ஆள முற்பட்ட  ஹிட்லரின் ஆட்சி குறியீட்டில்  அமைக்கப்பட்டுள்ளது அந்த நிலையம் .சுவஸ்திக குறியீடு  தான் அது .


அதி நவீன தொழில் நுட்பம் நிறைந்த விமான நிலையம் இருக்க இன்னொரு  விமான நிலையம் ஒன்றும் இல்லாமல்  கட்டப்பட்டது ஏன் ?.


கூடுதலாக உலகத்தலைவர்களின் பேச்சுகளில் நியூ வேர்ல்ட் ஆர்டர்(New world order ) எனும் விடயம் அடிபட்டிருக்கிறது .



புதிய உலகின் உத்தரவு ?? அப்படியென்றால் அது என்ன புதிய உலகம் , இது யாரால் வழி நடத்தப்படுகின்றது என்ற கேள்விகளுக்கு எந்த அரசிடம் இருந்தும் பதில் வரவில்லை .

ஆனால் இவர்கள் ஒரே நோக்கம் ஒன்றாக இணைந்த உலக அரசை கொண்டு வருவதே, அதாவது எந்த வித எல்லைகளும் அற்ற ஒன்றிணைந்த நாடு . ஆனால் இந்த விடயம் சாத்தியமாக பாரிய அழிவை ஏற்ட்ப்படுத்த வேண்டும். கிட்டத்தட்ட 2 பில்லியன் மக்களாக மக்கள் தொகையை குறைத்தால் மாத்திரமே இது சாத்தியம் . காரணம் அப்போது தான் ஆனைவரையும் ஒரே கட்டுப்பாட்டில் வைத்திருக்க  முடியும் . 

ஆனால் விமான நிலையம்  செல்பவர்களும் சரி இருப்பவர்களும் சரி அங்கு காணப்படும் அறியமுடியாத மர்ம குறியீடுகளால் குழம்பியுள்ளனர். முதலாவதாக அங்கிருக்கும் கல் வெட்டில் எழுதப்பட்டிருக்கும் விடயம். திகதிக்கு கீழே  பார்த்தால் நியு வேர்ல்ட் எயர்போர்ட் கமிஷன் (New world airport commision )என எழுதப்பட்டிருக்கும் .

இப்படியொரு அமைப்பு இதுவரை யாரும் கேள்விப்பட்டதில்லை . இப்படியொரு  அமைப்பு இதுவரை உலகில் உருவாக்கப்படவும் இல்லை!!!! .


சம்மந்தமே இல்லாமல்  நிலத்தில் காணப்படும் இந்த உருவங்கள் ஏன் என்பது புரியவில்லை .


AUAG என  குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் அர்த்தம் பொன் , வெள்ளி எனவும் எடுத்துக்கொள்ளலாம் . ஆனால் ஆஸ்திரேலியன் அண்டிஜென்(Australiyan Antigen - AUAG   ) எனும் வைரஸ் என்றும் அர்த்தப்படுத்தலாம்  . 

இதில் முக்கியமான அதிர்ச்சி தரும் விடயம் என்னவென்றால் இந்த நில உருவத்திட்க்கு நேர் மேலே சுவரில் உலக உயிர்கள் அழிப்பு பற்றிய படம் இருக்கும் . இந்த சுவரை சுற்றி காணப்படும் படங்கள் நம் உலகை பிரதிபலிப்பதாகவே இருக்கும் .


இந்த படம் மனிதன் முகத்தில் வாயு பாதுகாப்பு முகமூடி அணிந்து சமாதானத்தை(புறாவை ) கொல்வது போல படம் அமைந்திருக்கும் . சமாதனம் அற்றுப்போவதை அந்த படம் குறிக்கிறது .அதுவும் இந்த படம் வைரஸ் குறியீட்டுக்கு நேரே இருக்கிறது . பக்கத்தில் அனைவரும்  இறந்து கிடக்கின்றனர் . நச்சு வாயுத்தாக்குதல் பல உயிர்களை அழிக்கும் என்ற வகையில் பிரதிபலிக்கிறது  .

உயிரினங்கள் காப்ற்றப்படுவது போல காட்ச்சிகள் கீறப்பட்டுள்ளன .

அனைத்து நாட்டு குழைந்தைகளும் ஆயுதங்களை கொண்டு வந்து ஒரே இடத்தில் போடும் படியாக அடுத்த படம் அமைந்துள்ளது .அனைத்து உயிர் அழிவும் இடம்பெற்ற  பின்னர் ஆயுதங்கள் தேவைப்படாது என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது.

 .

அந்த முகமூடி மனிதன் இறந்து கிடக்க அதன் மீது புறா இருக்கிறது . இது பாரிய அழிவின் பின்னர் மீண்டும் சமாதனம் நிலவும் என்ற கருத்தை குறிக்கிறது .

அதன் பின்னர் அனைவரும்  மகிழ்ச்சியுடன்  ஒருவரின் பின்னால் ஒன்று சேருவது போல காட்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளது . ஜேசு கிறிஸ்து போல வடிவமைக்கப்பட்டுள்ளது .


இவை அனித்தும் இடம் பெறும் என்ற மனப்பாங்கில் மறைமுகமாக குறிக்கப்பட்டுள்ளன என்று கூறலாம் .அமெரிக்காவுக்கு  முதல் கனடா , கொலம்பிய ,அமேரிக்கா என மூன்றையும் இணைத்து எல்லையில்லாத நாடொன்றை உருவாக்கும் திட்டம் இருந்தது .

இந்த ஒரு உலக கோட்பாடு மேலும் பல முறைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது . ஆனால் இதற்க்கும் மாயநிட்கும்  என்ன சம்மந்தம் .


 ஒரு பெண் மாயன் டப்ளேட்(நாகரிக  வளர்ச்சி பற்றி குறிப்பீடு ) கொண்டு வந்து தருவது போல ஒரு குறியீடும் காணபடுகிறது . உலக அரங்கில் இந்த சம்பவம் 2012 இல் நடந்தேறுமா ? புதிய உலக உத்தரவை பிறப்பித்து அனைத்து  தலைவர்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குழு எது ?2012 உலக அழிவு எனும் புரளியை கிளப்பி விட்டு இவர்களே   அதை அர்ங்கேற்றுவார்களா ?

கட்டப்படும் புதிய விமான நிலையத்துக்கு கீழே இருப்பது என்ன ? அதன் காரணம் என்ன ?  

No comments:

Post a Comment