Monday, September 12, 2011

ஏலியன்ஸ் - பிரபஞ்ச தேடல் 2

முன்னைய பதிவில் நூறு பில்லியன் பால்வீதி உள்ள  இந்த அண்டத்தில் நம்மைப்போல ஒரு சூரிய குடும்பமோ அல்லது எமது பூமி போலவே ஒரு பூமி இருப்பதற்கோ  எவளவோ சாத்தியங்கள் உண்டு என பார்த்தோம் . எமது பூமியில் உயிர்கள் எதிர்பாராத ஒன்றாகவே உருவாகியது என பார்த்தோம் . மற்றும் அடிப்படை மூலக்கூறுகள் எரி கற்கள் மூலம் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லப்படலாம் எனவும் பார்த்தோம்  . போதுய ஓட்டுகள் இல்லாததால் அந்த பதிவு அனைவரையும் சென்றடையவில்லை . முதல் பதிவை வாசிக்க :-- ஏலியன்ஸ்  பாகம்  1
==================================================================================

அவ்வாறு  எதிர்பாராத விதமாக எமது உலகில் தோன்றிய உயிர்கள் நாமாக இருந்தாலும் அனைத்திற்க்கும் ஒரே தியரி தான் . அது தான் தக்கன  பிழைத்தல் . எத்தனையோ உயிர் பிணைப்புகள் வந்தாலும் சூழலுக்கு  ஒத்துப்போகக்கூடிய உயிர்கள் தான் நிலைத்திருக்கின்றன . இவ்வாறு வந்த உயிரினங்களுக்கு  சக்தி (உணவு) தேவைப்பட்டது . அப்போது தொடங்கியது தான் தேடலும் உயிரினங்களின் பரம்பலும் .

இதற்க்கு பல உதாரணங்கள் நாம் தற்ப்போது  காணும் விலங்குகளிடம் உண்டு . கவனித்து பார்த்தால் தாவர உன்னிகளுக்கு கண்கள் முகத்தின் இரு பக்கமும் பக்க வாட்டில் இருக்கும் ஆனால் மாமிச உன்னிகளுக்கு கண் நேரே பார்த்த படி தான் இருக்கும் . தாவர உண்ணிகள் மாமிச உன்னிகளிடம் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள சுற்றி இருக்கும் கண் உதவுகிறது , ஆனால் மாமிச உன்னிகளுக்கு அவற்றின் இலக்கு தான் குறி அதனாலேயே அவற்றின் கண்கள் முன்னோக்கி இருக்கிறது .

இதை ஏன் கூறுகிறேன் என்றால் இவ்வாறன செயல்ப்பாடுகள் நாம் இன்னொரு உயிர் இருப்பதாக கூறும் உலகத்திலும் நடக்கிறது என்பது தான் ஸ்டீபன் ஹவ்கிங் எனும் கொஸ்மொலோஜிஸ்ட் , பௌதீகவியலாளர்   கூறியிருக்கும் கருத்து . நான் முன்னர் கூறிய  அடிப்படை மூலக்கூறுகளின்  வளர்ச்சிக்கு தேவையானது நீர் . நீர் வேறு சூரிய குடும்பத்திலும்  இருக்கலாம் . ஆனால் நம் அருகில்  இருக்கும் செவ்வாயிலும் உறைந்த நிலையில் நீர்  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது . செய்மதி புகைப்படங்கள் உரை நிலை நீர் இருப்பதை உறுதி செய்வதோடு இன்னொரு சான்றும் கிடைத்துள்ளது .


இவை நீருடன் தொடர்பிருந்தால் மட்டுமே உருவாகும் என்பது விஞ்ஞானிகள்  கருத்து . செவ்வாயில்  உயிரினங்கள் இருக்கலாம் என்பது ஒரு கருத்து . அது இல்லாவிட்டால்  வியாழனின் உபகோள் யுரோப்பா விழும் இருக்கலாம் . முன்னைய பதிவில் யுரோப்பா  பற்றி பார்த்திருக்கிறேன் .  எம்மால் கிரகங்களுக்குள் தான் செல்ல முடியுமே தவிர நட்ச்ச்சத்திரங்களுக்குள் செல்ல  முடியாது .

ச்டீப்ஹன் ஹவ்கிங்கின் தேடல் படி ஏலியன்ஸ் எவளவோ வகைகளில் இருக்கலாம் . நிச்சயம் நம்மை போல நம் உயிரினங்களை  போல இருக்க வேண்டும் என்றில்லை .


நிச்சயம் நீரை தவிர இன்னொரு விடயத்தை அடிப்படையாக கொண்டு உயிர் வாழலாம்  . அது தான் நைற்றேஜன் . நம் பூயில் அது வாயுவாக இருக்கிறது . ஆனால் -320 பாகை பாரனயிட்டில் அது நீர் . நைற்றேஜன் கடல்கள் கூட நம் அண்டத்தில் இருக்கலாம் . அதில் கூட உயிரினங்கள் இருக்கலாம் .ஏன் வாயுக்களில் கூட உயிரங்கள் வாழலாம் என்பது எதிர்வு கூறல் . சுற்றி வர எங்கு பார்த்தாலும்  அங்கே உயிரினங்கள் வாழ்வதற்க்கு  சாத்தியம் அதிகம் .

ஏலியன்ஸ் எப்படி இருந்தாலும் கவலையில்லை அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதே முக்கியம் . அவர்களும் எம்மை போல யோசிப்பார்களா ? இல்லை எம்மை விட தொழில்நுட்பம் கூடியவர்களா ? . எம்மை விட தொழில் நுட்பம் கூடியவர்களாக இருந்தால் எமக்கு தான் ஆபத்து .


கூடுதலாக ஏலியன்ஸ் கடத்தல் சுமார் 50 வருடங்களாக நிகழ்வதாக கதை . தனியான வழியில் இரவு வேளையில் செல்பவர்கள் காணாமல் போவதாக கதை . ஆனால் இது அரசால் மூடி மறைக்கப்பட்டுள்ளது . நாசாவும் மறைத்து வருகிறது . அமெரிக்க அரசு பறக்கும் தட்டை கண்டு எடுத்ததாக தகவல் . அது பற்றிய எனது பதிவை வாசிக்க . அமெரிக்காவின் ரகசிய இராணுவத்தளம் ஏரியாரியா  51 பற்றியது .

ஏலியன்ஸ் இருப்பதற்க்கு உறுதியான சில தகவல்கள் மேலும் உண்டு . ஆகஸ்ட் 16 1997   செய்மதியில் இருந்து தொலைத்தொடர்ப்பு நிலையத்துக்கு ஒரு சிக்னல் கிடைத்தது .


அதனை தொலைத்தொடர்பு நிலைய கருவிகள் பதிவு செய்தது . அது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது . கணணி  அந்த சிக்னலை ஆறு எழுத்துகளாகவும் இலக்கங்களாகவும் பதிவு செய்தது .  அதனை மாற்றிய போது வாவ் எனும் சொல் என கண்டறியப்பட்டது .

எலியன்சால்  எமது சூரிய குடும்பத்திட்க்கே பிரச்சனை காத்திருக்கிறது .
எலியன்சால்  என்ன பிரச்சனை ? மனிதன் பூமிக்கு என்ன செய்கிறானோ அதையே அவையும் செய்யுமா ?  அவற்றுடன் ஆனா ஆராச்சியில் வெற்றி காண முடியுமா ? என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் .

No comments:

Post a Comment