Monday, June 16, 2014

கென்னடி குடும்பம்,, தொடரும் மர்மங்கள்,,

கென்னடி குடும்பம்,,
தொடரும் மர்மங்கள்,,

அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில், மிகவும் முக்கியமான ஒரு குடும்பம் கென்னடி குடும்பம். ”வருங்காலத்தில் நீ என்னவாகப் போகிறாய்?” என்று அமெரிக்க பள்ளிக் குழந்தைகளை கேட்டால், பெரும்பாலான பதில் ”அமெரிக்காவின் குடியரசு தலைவராவது” என்று தான் இருக்கும்.

அவர்களில் சிலர் மட்டுமே அந்த குறிக்கோளை நோக்கி முயல்வார்கள் என்ற போதிலும், ஒரு குடும்பத்து குழந்தைகள் மட்டும் , “ குடியரசு தலைவராவேன்” என்று கூறினால், அது சாத்தியமாக வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது என்றால், அது கென்னடி குடும்பத்திற்கு மட்டும் தான். அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில், கடந்த 150 ஆண்டுகளாக தங்களின் பங்களிப்பை வழங்கி வரும் இந்த குடும்பத்திற்கு மட்டும், தொடர்ந்து வந்த மரணங்கள், மக்களிடையே, இந்த குடும்பத்தின் மீதான பார்வையையே மாற்றியுள்ளது.

காரணம், 1963 ஆம் ஆண்டு, டாலசில் நடந்த மக்கள் கூட்டத்தில் ஜான் கென்னடி, துப்பாகியால் சுடப்பட்டார். அவரைத் தொடர்ந்து, 1968 இல் அவரின் சகோதரர் பாபியும் சுடப்பட்டார். 1984 ஆம் ஆண்டு, பாபியின் மகனான டேவிட் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டதால் காலமானார். அவரை தொடர்ந்து, 1997 இல் பாபியின் அடுத்த மகனான மைக்கேல் மரணமடைந்தார்.

பின்பு, 1999 இல் கெனடியின் மகனான, ஜான் ஜூனியரும் மரணமடைந்தார். இந்த தொடர் மரணங்கள், அமெரிக்க மக்களிடையே, கென்னடியின் குடும்பம், சபிக்கபட்ட குடும்பமோ என்ற எண்ணத்தையே வரவைத்து விட்டது என்று கூட சொல்லலாம்.

No comments:

Post a Comment