Monday, June 16, 2014

ஆபிரகாம் லிங்கன் ஜான் எப். கென்னடி

ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜான் எப். கென்னடி இவர்களை குறித்து அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் இவர்கள் இருவரின் வாழ்விலும் நடந்த சில நிகழ்வுகள் சரித்திரத்தில் ஒரு வியப்பு என்றால் மிகை ஆகாது.

*ஆபிரகாம் லிங்கன் அவர்கள் US காங்கிரசுக்கு 1846ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*ஜான் எப்.கென்னடி அவர்கள் US காங்கிரசுக்கு 1946 ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

*ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அமெரிக்காவின் குடியரசு தலைவராக 1860ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*ஜான் எப்.கென்னடி அவர்கள் அமெரிக்காவின் குடியரசு தலைவராக 1960 ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

*லிங்கனின் காரியதரிசியின் பெயர் கென்னடி.
*கென்னடியின் காரியதரிசியின் பெயர் லிங்கன்.

*லிங்கனை கொலை செய்த ஜான் வில்கெஸ் பூத் 1839 வருடத்தில் பிறந்தான்.
*கென்னடியை கொலை செய்த லீ ஹார்வே ஆஸ்வால்ட் 1939 ம் வருடத்தில் பிறந்தான்.

*லிங்கன் போர்ட் என்று அழைக்கப் பட்ட தியேட்டரின் முன் சுடப்பட்டார்.
*கென்னடி போர்ட் கம்பனியின் லிங்கன் என்ற காரில் செல்லும்போது சுடப்பட்டார்.

*லிங்கனை சுட்டவுடன் தியேட்டரில் இருந்து பண்டக சாலைக்கு கொலைக்காரன் தப்பி சென்றான்.
*கென்னடியை சுட்டவுடன் பண்டக சாலையில் இருந்து தியேட்டருக்கு கொலைக்காரன் தப்பி சென்றான்.

*இருவரும் மனித உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள்.

*இருவரின் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வசிக்கும் போது தங்கள் குழந்தைகளை இழந்தவர்கள்.

*இருவரும் வெள்ளிக்கிழமையில் தலையில் சுடப்பட்டு இறந்தார்கள்.

*பூத் மற்றும் ஆஸ்வால்ட் இரண்டு பெரும் வழக்கு முடிவதற்கு முன்பு கொல்லப்பட்டனர்.

பல விஷயங்களில் ஓன்றுபட்டிருக்கும் மாண்புமிகு லிங்கன் மற்றும் கென்னடி சரித்திரத்தின் ஒரு வியப்பு தானே...!

1 comment: