Monday, June 16, 2014

அமில மழை.

25 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் அமில மழை.

அனைத்து வளங்களும் நிறைந்த பூமி தோன்றி சுமார் 500 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சுமார் 25 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் பொழிந்ததாக கண்டறியப்பட்டுள்ள அமில மழை மற்றும்ஓசோன் குறைவு காரணமாக மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.
பெர்மியான் காலத்தின் முடிவில் ஏற்பட்ட இந்த பேரழிவின் போது கடலில் வாழ்ந்த 90 சதவிகித உயிர்களும் மற்றும் நிலத்தில் வசித்த 70 சதவிகித உயிர்களும் அழிந்துவிட்டன என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இதில் டைனோசர் போன்ற மிகக் கொடூரமான உயிரினங்களும் இறந்துவிட்டன என்று கூறப்படுகிறது.
சைபீரியாவில் மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறியபோது பீச்சியடிக்கப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் சல்பர் டை ஆக்ஸைடு வாயுக்களால் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றமே இந்த அமில மழை அழிவிற்கு காரணம் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த மிகப்பெரிய அழிவிற்கு பிறகு பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு எந்த உயிரினங்களும் தோன்றவில்லை என்றும் கிடைத்த படிமங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment