Wednesday, April 3, 2013

கிராஜுவிட்டி தொகையை எவ்வாறு கணக்கிடுவது?



கிராஜுவிட்டி = கடைசியாக வாங்கிய சம்பளம் x 15/26 x பணியாற்றிய மொத்த ஆண்டுகள். இவ்வாறு கணக்கிட்டு அதில் கிடைக்கும் தொகை கிராஜுவிட்டியாக வழங்கப்படும். அதாவது 10000x15/26x10 = Rs 57,692 வழங்கப்படும்.


ஒரு சில காரணங்களுக்காக 5 வருடம் வேலை செய்த தொழிலாளிக்கு கிராஜுவிட்டி தொகையை வழங்க மறுக்கலாம். ஒருவேளை அந்த தொழிலாளி நிறுவனத்தின் சொத்துக்களுக்கோ அல்லது அங்குள்ள பொருள்களுக்கோ ஏதாவது சேதத்தை ஏற்படுத்தினால் அதைக் காரணம் காட்டி அவருக்கு கிராஜுவிட்டித் தொகைய வழங்காமல் இருக்கலாம்.

ஆகவே இந்த கிராஜுவிட்டித் தொகைய ஒரு தொழிலாளி பெற வேண்டும் என்றால் அவர் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகளாவது தொடர்ந்து வேலை செய்திருக்க வேண்டும். ஆனால் ஒரு வேளை 5 ஆண்டுகளுக்குள் ஒருவர் இறந்துவிட்டால் அவர் அந்த நிறுவனத்தில் 1 ஆண்டு முழுமையாக வேலை செய்திருந்தாலும் அவருக்கு அந்த கிராஜுவிட்டித் தொகை வழங்கப்படும். எனவே இந்த கிராஜுவிட்டித் தொகையை தொழிலாளிகளின் ஒரு வரப்பிரசாதம் என்றே அழைக்கலாம்.

No comments:

Post a Comment