Wednesday, April 3, 2013

பிரபஞ்ச ரகசியம்: 'கடவுள் துகள்' கண்டுபிடிப்பு!



ஜெனீவா: பிரபஞ்சம் உருவானது எப்படி என்ற ரகசியத்தை அவிழ்க்கிற விதத்தில், கடவுள் துகளை கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று ஆன்மிகம் சொல்கிறது.ஆனால் விஞ்ஞானம் அதைக் கொஞ்சம் மாற்றிச்சொல்கிறது. அணுக்களால் ஆனது உலகம் என்று.

13,750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு `பிக்-பேங்க்' எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது.

எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் நாம் வாழுகிற பூமி,நம்மைச் சுற்றிலும் இருக்கிற டி.வி.,செல்போன்,மேஜை,நாற்காலி என வெவ்வேறு திடப்பொருட்களாக ஆகி உள்ளன.இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில் அணுக்களின் சேர்க்கைதான்.

இந்நிலையில், அணுக்களை சேர்க்கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது.

அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால்,பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

அணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின் போது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

இதற்காக பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதை போன்று செர்ன் என்ற பெயரில் (அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையம்) ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைத்து,உலக பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் ஒன்றுசேர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.

கடவுள் துகள்

இதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன.12-வது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி ஹிக்ஸ், 1964-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும் இணைத்து ஹிக்ஸ் பாசன் துகள் என்று அழைக்கப்பட்டு வந்தாலும், அது கடவுள் துகள் என்று கூறப்படுகிறது.

இந்த கடவுள் துகளை கண்டறியும் முயற்சியில் ஜோ இன்கண்டேலா என்ற பிரசித்தி பெற்ற அணு விஞ்ஞானி தலைமையில், இரண்டு விஞ்ஞானிகள் குழுக்கள் இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவில் இப்போது 'கடவுள் துகள்' எனப்படும் ஹிக்ஸ் பாசன் துகள் கண்டறியப்பட்டு விட்டது.

இது தொடர்பான அறிவிப்பை ஜெனீவாவில் திரளான விஞ்ஞானிகள் முன்னிலையில் விஞ்ஞானி ஜோ இன்கண்டேலா வெளியிட்டார்.அதே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஹிக்ஸ் பாசன் துகள்தானா என்பதை உறுதி செய்வதற்கு இன்னும் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

பிரபஞ்ச ரகசியம் அவிழும்

செர்ன் தலைமை இயக்குனர் ரோல்ப் ஹியூயர் இது பற்றி கூறுகையில்,"ஒரு புதிய மைல் கல்லை நாங்கள் எட்டி இருக்கிறோம். ஹிக்ஸ் பாசன் துகளை கண்டறிந்து இருப்பது, புதிய விரிவான ஆய்வுகளுக்கு வழிநடத்தி இருக்கிறது. இது பிரபஞ்ச ரகசியம் பற்றிய திரைகளை அவிழ்க்க உதவும்"என்றார்.





இந்த கண்டு பிடிப்பு புதியது அல்ல.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இந்தியாவில் நிலை பெற்றிருந்த மெடா சயின்ஸின் அடிப்படை இந்த தத்துவம்.

குவாண்டம் தியரியின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு ஒரு துகள் சக்தி பயணிக்கும் தூரம் அளவிட முடியாத நிலை காலம் ஒரு மாயை என்ற நிலைப்பாட்டிற்கு உதாரணம்.மெடா சயின்ஸ் உண்மையான உணர்தலை அடிப்படையாக கொண்டது என்பதால் இடம், பொருள், ஏவல், காலம், தகவலறிவு போன்ற மாயைகள் கடந்தது. நிரூபனம் உணர்தலால்.அளத்தலால் இல்லை.

லாடென்ட் எனெர்ஜி, கடவுள் துகள், இன்ட்யூஷன் இவை யாவும் மனித சக்தியின் நிரூபணத்திற்கு அப்பாற்பட்டவை.இவை மனித உடலின் ஆன்மா என்னும் நிலையுடன் ஒப்பிடக் கூடியவை.அதனாலேயெ இந்த சக்திகளை சூப்பர் நேச்சுரல் சக்தி என்கிறோம். இந்த சக்தியின் ஒரு ஃப்ராக்ஷன் எல்லா படைப்பிலும் உண்டு.அந்த உந்துதலே இயற்கையின் போக்கில் மனிதனை இயங்கச்செய்கிறது.ரோபோவிற்கும் மனிதனுக்கும் வித்தியாசம் ஏற்படுத்துவதும் இதுவே.

இந்த இடம் அங்கீகாரமாவது தனி மனித வாழும் உரிமையில் இருக்கிறது.சராசரி நிலைப்பாட்டில் மக்களை இருத்தாமல், அவர்கள் இயல்புத் திறனுக்கு இடம் தந்து அவர்களின் சிறப்பு நிலையில் செயலாற்றச் செய்வதில் இருக்கிறது.

எத்தனை நுணுகிய ஆராய்ச்சி செய்தாலும், கடலின் அடியில், மலையை குடைந்து ஆராய்ச்சித் தளம் அமைத்தாலும் இந்த பகுதி சர்வ நிச்சயமாக மனிதனின் கட்டுக்குள் வராது.இயற்கையின் அதிசயம் மட்டுமே இது.உணர முடியும்.அங்கீகரிக்க முடியும்.அந்த சக்தி தரும் பயனை ஏற்று இலகு வாழ்வு ஒவ்வொரு மனிதனும் அமைக்க முடியும்.ஆள முடியாது.

No comments:

Post a Comment