Thursday, June 6, 2013

நகங்கள்

பொதுவாக நகங்கள் தேவையற்ற ஒரு உறுப்பாக பலரும் கருதுகின்றனர்.ஆனால் அது உண்மையிலே உடல் நலத்திற்கு தேவையான உறுப்பாகும்.நம் உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளினால் வெளியேற்ற முடியாதகழிவுகள் நகமாக வளர்கின்றது. அதனால் அது மனிதர்களுக்குமட்டுமன்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாதமுக்கிய உறுப்பு ஆகின்றது.

கெரட்டின் என்னும் உடல்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள்நீங்குவது உடலுக்கு நலம் தானே? நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட்என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப்பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக அமைகின்றது.மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.

வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள்என்பதால் அதற்கு ஒக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம்இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்குஒக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஒக்சிஜனைசுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்குஅதிக இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.

நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள்குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும். நகங்கள் நமதுஆரோக்கியம் காட்டும் 'மொனிட்டர்' போலவும் செயல்படும். நகங்களின்நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக்கண்டுபிடிக்கலாம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தைநகத்தில் தெரிந்து கொள்ளலாம். நகத்தின் அமைப்பைக் கொண்டு, நம்முடைய குணாதிசயங்களை சில ஜோதிடர்கள் கூறுவார்கள்..

ஆனால் மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில்என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.

நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்றபுரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்புமற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும்.நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத்தன்மைஏற்பட்டு விடும்..

நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும்உண்மைகளும்:
நகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின் அடிப் பாகத்தில்இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும், பெண்களுக்குபிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாகஇருக்கும்.

பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமதுஉடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம்வேறுபட்டிருக்கும்.

* ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்..

* சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்துபாதி நகங்கள் சிவப்பாக இருக்கும்.

* மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள்நிறத்தில் காணப்படும்.

* இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமானஇளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்லஇரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில்இருக்கும்.

* நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள்கிளிச்சொண்டு போல வளைந்து இருக்கும்.

* இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால்நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.

* சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்துகுறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.

* நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதனால்நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம். நகங்களுக்குபொலிஷ் தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும்மஞ்சள் கோடுகள் இருக்கலாம்.

* நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்புஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல்வியாதியின் அறிகுறியாகும்..

* இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங்கள்நீலமாக இருக்கும். ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டிருந்தால்நகங்கள் நீலநிறத்தில் காணப்படும்.

* மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி உள்ளதாககாட்டும்

* மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.

நகங்களை நலமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டியபராமரிப்பு முறை:.
* நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக்கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப்பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு,கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது.

* இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும்நகங்களை நறுக்கி விடலாம்.

* நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது.அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினைஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக் கூடாது. இதனால் நகங்கள்உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமேவெட்ட வேண்டும்.

* சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம்செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால்வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவைஉண்டாகும்.

* நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும்.இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாககழுவிக் கொள்ள வேண்டும்.


* சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தடவலாம். இதுநகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களைமிருதுவாக வைத்திருக்கும்.

* சமையல் அறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர்,அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டியஅவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள்அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.

* பசை, தண்ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவைபயன்படுத்தும் போது, அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.

* ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நகஅலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment